Education is the Most Powerful Weapon Which You Can Use to Change the World. – Nelson Mandela-

புதிய சர்வதேச ஒழுங்கின் பின்னரான பிராந்தியத் தலையீடுகள் - ஓர் கோட்பாட்டு விளக்கம்

புதிய சர்வதேச ஒழுங்கின் பின்னரான பிராந்தியத் தலையீடுகள் - ஓர் கோட்பாட்டு விளக்கம்

புதிய சர்வதேச ஒழுங்கின் பின்னரான பிராந்தியத் தலையீடுகள் - ஓர் கோட்பாட்டு விளக்கம் by...

இலங்கையின் வன்னிப் பிரதேச சட்டசபை பிரதிநிதித்துவம் சில வரலாற்றுப் பதிவுகள்: 1931-1977

இலங்கையின் வன்னிப் பிரதேச சட்டசபை பிரதிநிதித்துவம் சில வரலாற்றுப் பதிவுகள்: 1931-1977

இலங்கையின் வன்னிப் பிரதேச சட்டசபை பிரதிநிதித்துவம் சில வரலாற்றுப் பதிவுகள்: 1931-1977 by...

மாக்கியவல்லியின் இளவரசன் திறனாய்வு

மாக்கியவல்லியின் இளவரசன் திறனாய்வு

மாக்கியவல்லியின் இளவரசன் திறனாய்வு by Thanabalasingham Krishnamohan

Conflict Management and Resolution of Conflict : Objective and Characteristics of Third Party Mediation

Conflict Management and Resolution of Conflict : Objective and Characteristics of Third Party Mediation

Conflict Management and Resolution of Conflict : Objective and Characteristics of Third Party...

  • புதிய சர்வதேச ஒழுங்கின் பின்னரான பிராந்தியத் தலையீடுகள் - ஓர் கோட்பாட்டு விளக்கம்

    புதிய சர்வதேச ஒழுங்கின் பின்னரான பிராந்தியத் தலையீடுகள் - ஓர் கோட்பாட்டு விளக்கம்

    Tuesday, 15 October 2013 23:43
  • இலங்கையின் வன்னிப் பிரதேச சட்டசபை பிரதிநிதித்துவம் சில வரலாற்றுப் பதிவுகள்: 1931-1977

    இலங்கையின் வன்னிப் பிரதேச சட்டசபை பிரதிநிதித்துவம் சில வரலாற்றுப் பதிவுகள்: 1931-1977

    Sunday, 28 December 2014 17:17
  • பிராந்திய ஒத்துழைப்புக்கான தெற்காசியச் சங்கம்

    பிராந்திய ஒத்துழைப்புக்கான தெற்காசியச் சங்கம்

    Tuesday, 15 October 2013 23:07
  • மாக்கியவல்லியின் இளவரசன் திறனாய்வு

    மாக்கியவல்லியின் இளவரசன் திறனாய்வு

    Tuesday, 15 October 2013 23:26
  • Conflict Management and Resolution of Conflict : Objective and Characteristics of Third Party Mediation

    Conflict Management and Resolution of Conflict : Objective and Characteristics of Third Party...

    Tuesday, 15 October 2013 23:29
மோதல் தீர்வுக் கற்கைகள்: ஒர் அறிமுகம்
மோதல் தீர்வுக் கற்கைகள்: ஒர் அறிமுகம்
மோதல் தீர்வுக் கற்கை நெறி தொடர்பான ஆய்வுகள் மனித மோதலின் தன்மை மற்றும் இயக்கவியல் ஆகியவற்றைப் புரிந்துகொள்ளுதல், ஆரோக்கியமான உறவுகளை வளர்த்தல், வன்முறையைத் தடுக்கும் வழிகளிகள் மற்றும் மோதலைக் கையாள்வதற்குப் பொருத்தமான மாற்று வழிகளைத் தேடுதல் என்பவைகளில் கவனம் செலுத்துகின்றது. மோதல், தகராறு, வன்முறை, யுத்தம் அதிகாரம், கலாசாரம். நீதி, சமாதானம், தகவல் தொடர்பு, முகாமைத்துவம், மோதலைத் தீர்த்தல், மோதல் நிலைமாற்றம் போன்ற தலைப்புகளுடன் தொடர்புபடும் வகையில் மோதல் தீர்வுக் கற்கை நெறி பகுப்பாய்வு செய்யப்படுகின்றது. தனிப்பட்ட, தேசிய, சர்வதேசிய மோதல் சூழ்நிலைகளுக்குப் பதிலளிக்கும் வகையிலும், மோதலை ஆக்கபூர்வமாகப் புரிந்துகொள்ளவும், தொடர்பு கொள்ளவும் மோதல் தீர்வுக் கற்கை நெறி மாணவர்களைத் தயார்படுத்துகிறது. இவ்வகையில் தமிழ்மொழி மூலமான பல்கலைக்கழக மாணவர்களுக்கும், அரசறிவியலை உயர்தரத்தில் கற்கும் மாணவர்களுக்கும், பொதுவான விடயங்களைத் தேடி வாசிக்கும் வாசகர்களுக்கும் பயன்தரும் வகையில் மோதல் தீர்வுக் கற்கைகள்: ஒர் அறிமுகம் என்னும் தலைப்பில் எழுதப்பட்டுள்ள இந்நூல் வெளிவருகின்றது.
More...
Triangular Power Straggle in Indian Ocean and Ethnic Conflict in Sri Lanka
Triangular Power Straggle in Indian Ocean and Ethnic Conflict in Sri Lanka
இந்துசமுத்திரப் பிராந்தியத்தில் முக்கோண அதிகாரப் போட்டியும் இலங்கையின் இனமோதலும் குமரன் புத்தக இல்லம், 2012 ISBN 978-955-659-343-3 இந்துசமுத்திரப் பிராந்தியத்தில் தனக்கிருக்கும் எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டு இலங்கையில் அதிக முதலீடுகளை சீனா செய்து வருகின்றது. இதே அக்கறையுடன் ஏனைய உலக நாடுகளும் இலங்கையினைத் தமது தந்திரோபாயப் பங்காளியாக மாற்றுவதற்கு முயற்சிக்கின்றன.பூகோள வல்லரசுகளும்,பிராந்திய வல்லரசுகளும் நடத்தும் அதிகாரப் போராட்டத்தினால் ஏற்படக்கூடிய பதிப்புக்களிலிருந்து இலங்கை தன்னைத்தானே பாதுகாத்துக் கொள்ள முடியாது தடுமாறுகின்றது.
More...
பொது நிர்வாகத்தில்‌ மனிதவள முகாமைத்துவம்‌: முன்னணி நாடுகளின்‌ சிவில்‌ சேவை மாதிரிகள்‌
பொது நிர்வாகத்தில்‌ மனிதவள முகாமைத்துவம்‌: முன்னணி நாடுகளின்‌ சிவில்‌ சேவை மாதிரிகள்‌
சர்வதேச ஆய்வுப்பரப்பில்‌ அரசறிவியல்‌, நிர்வாகவியல்‌ போன்ற துறைகள்‌ மிகுந்த அவதானத்தையும்‌, முக்கியத்துவத்தையும்‌ பெறுகின்றன. இவ்வகையில்‌ "பொது நிர்வாகத்தில்‌ மனிதவள முகாமைத்துவம்‌: முன்னணி நாடுகளின்‌ சிவில்‌ சேவை மாதிரிகள்‌" என்ற புதுக்கிய இந்நூல்‌ பல்கலைக்கழக மாணவர்களுக்கும்‌, புலமைத்துவம்‌ சார்‌ சமூகத்தினர்க்கும்‌ பயனுடையதாகும்‌.

சிவில்‌ சேவை தொடர்பான பொதுவான அறிமுகத்துடன்‌ சர்வதேச நாடுகளின் குறிப்பாக பிரித்தானியா, பிரான்ஸ்‌, ஐக்கிய அமெரிக்கா, இந்தியா, இலங்கை முதலான நாடுகளின்‌ சிவில்‌ சேவைக்‌ கட்டமைப்புகளை முன்னிலைப்படுத்தி ஒப்பியல்‌ நோக்கில்‌ இந்நூல்‌ எழுதப்பட்டிருப்பது சிறப்பிற்குரியதாகும்‌.
More...
Political Science: Study of State and Identification of State
Political Science: Study of State and Identification of State
அரசியல் விஞ்ஞானம்: அரசியல் பற்றிய கற்கையும் அரசை இனம்காணுதலும் ;> சேமமடு பதிப்பகம், கொழும்பு>2009. ISBN - NO: 978-955-1857-60-8 அரசியல் விஞ்ஞானத்தின் இயல்புகள், அரசியல் விஞ்ஞானத்தின் செயற்பரப்பெல்லை, அரசியல் விஞ்ஞானம் ஓர் விஞ்ஞானமா? அரசியல் விஞ்ஞானத்தினை கற்பதற்கான அணுகுமுறைகள், அரசியல் விஞ்ஞானமும், ஏனைய சமூகவிஞ்ஞானப்பாடங்களும், அரசு,தோற்றமும்,வளர்ச்சியும், அரசினை இனம் காணுவதற்கான அடிப்படைகள், அரசுடன் தொடர்புடைய எண்ணக்கருக்கள்,கோட்பாடுகள் போன்றன நடைமுறை விவகாரங்களுடனும்,அனுபவங்களுடனும் இணைத்து எழுதப்பட்டுள்ளது.
More...
Political Science: Political Activity and Political Processes
Political Science: Political Activity and Political Processes
அரசியல் விஞ்ஞானம்: அரசியல் செயற்பாடும் அரசியல் செயல்முறையும்;> சேமமடு பதிப்பகம், கொழும்பு >2010> ISBN - NO: 978-955-1857-61-5 பொதுக் கொள்கை, பொதுநிர்வாகவியலின் இயல்பு> பொது முகாமைத்துவம்> மோதலை விளங் க்கிக்கொள்ளல், மோதலும் வன்முறையும்,மோதலும் அகிம்சையும்,மோதலைத் தடுத்தல், மோதலைத் தீர்த்தல், மோதல் முகாமைத்துவம், மூன்றாம் தரப்பு மத்தியஸ்தம், சமாதானக் கற்கை, சர்வதேச அரசியல், வெளிநாட்டுக் கொள்கை, யுத்தம், கூட்டுப்பாதுகாப்பு, அதிகாரச் சமநிலை, சர்வதேசச் சட்டம், ஆயுதக் கட்டுப்பாடும்,ஆயுதக்களைவும் போன்ற சர்வதேச அரசியலில் இடம்பெறும் சில முக்கியமான கோட்பாடுகள் பல இந் நூலில் சேர்க்கப்பட்டுள்ளன.
More...
Comparative Politics
Comparative Politics
ஒப்பியல் பொதுநிர்வகம்: தெரிவு செய்யப்பட்ட நாடுகளின் சிவில் நிர்வாகமுறைமை > குமரன் புத்தக இல்லம் கொழும்பு >2007, ISBN - NO: 978-955-659-091-9

பிரித்தானிய ,பிரான்ஸ் ,அமெரிக்க,இந்தியா ,இலங்கை போன்ற ஐந்து நாடுகளின் சிவில் நிர்வாக சேவைகளின் வரலாற்று அபிவிருத்தியையும், கோட்பாட்டு நடைமுறை அம்சங்களையும் விமர்சனரீதியாக இந் நூல் அணுகுகின்றது.சிக்கலான விடயங்களையும்.பதங்களையும் எளிமையாகவும்,தெளிவாகவும்,ஆழமாகவும் இந் நூல் விளக்குகின்றது.

More...
Plantation Trade Union Movement in Sri Lanka
Plantation Trade Union Movement in Sri Lanka
இலங்கைப் பெருந்தோட்ட தொழிற்சங்க இயக்கங்கள்;>குமரன் புத்தக இல்லம் கொழும்பு>2008> ISBN - NO: 978-955-659-124-9 கண்காணிமார்களின் ஆசை வார்த்தைகளை நம்பி இலங்கை வந்து மத்தியமலை பிரதேசங்களில் வேலைக்காக குடியமர்த்தப்பட்ட தொழிலாளர்கள் வேதனம்,வேலைநாட்கள் தொடர்பான பிரச்சனைகளை எதிர்நோக்கினர். இதனை எதிர்த்து பெருந்தோட்ட தொழிற் சங்கங்கள் தொழிலாளர்களின் சமூகப் பொருளாதார உரிமைகளுக்காக போராட்டங்களை நடாத்தினர். இவ்வகையில் பெருந்தோட்ட தொழிற்சங்கத் தலைவர்களின் சமூகப் பொருளாதார பண்புகளையும், 1970 ஆம் 1977 ஆம் ஆண்டுகளில் பதவியேற்ற அரசாங்கங்கள் பின்பற்றிய கொள்கைகள் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் மீது ஏற்படுத்திய தாக்கம்,தொழிற்சங்கங்கள் தொழிலாளர் நலன்களுக்காக நடாத்திய போராட்டங்கள் போன்றவற்றையும் தொழிலாளர்களுக்கும், தோட்டமுகாமைத்துவத்திற்கு இடையிலும், தொழிலாளர்களுக்கு இடையில் ஏற்படும் தகராறுகள் ,பிரச்சினைகள் தொடர்பாக தொழிற்சங்கங்கள் எடுக்கும் நிலைப்பாடுகள் தொடர்பாக இந் நூல் ஆய்வு செய்கின்றது.
More...

Around the World

  • US tariff exemption on packages worth $800 or less due to end this week.

    Read more...
  • The campaign against 'woke' is no ordinary culture war skirmish - it is a project to restore the violence of white rule.

    Read more...
  • Algeria’s UN ambassador Amar Bendjama delivered an emotional address as he read a farewell letter by Palestinian journal

    Read more...
  • Ostapenko unleashed a verbal volley at her American opponent for being disrespectful during their second-round match.

    Read more...
  • Explosions and smoke fill Kyiv's predawn skies as Russia targets residential buildings with drones and missiles.

    Read more...
  • South Asia's missile race is heating up. But India and Pakistan aren't only eyeing each other, say analysts.

    Read more...
  • Famine doesn’t happen naturally. It’s political. Gaza joins the short list of places where conflict starves people.

    Read more...
  • Returning from an injury, Messi brought Inter Miami back from the brink of defeat to overcome Orlando City 3-1.

    Read more...
  • Fifteen-year-old sentenced for attempted murder and illegal possession of weapons after shooting Miguel Uribe in June.

    Read more...
  • Former champions Sabalenka and Raducanu record straight-sets wins to enter the third round of the tennis Grand Slam.

    Read more...
1 1 1 1 1 1 1 1 1 1 Rating 0.00 (0 Votes)

(தினக்குரல், புதிய பண்பாடு இதழில் 2013.03.09 , 2013.03.10 ஆகிய திகதிகளில் பிரசுரிக்கப்பட்டது)

clip_image002

2012ஆம் ஆண்டு பங்குனிமாதம் 22ஆம் திகதி ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் பத்தொன்பதாவது கூட்டத்தொடரில் இலங்கையின் யுத்தப் பிரதேசத்தில் நிகழ்ந்த மனித உரிமைமீறல்கள் தொடர்பான விடயங்களை விவாதிப்பதற்கான பொறிமுறையினை ஐக்கிய அமெரிக்கா உருவாக்கியது. அதாவது கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை, ஐக்கியநாடுகள் சபை நிபுணர்குழுவின் அறிக்கை ஆகிய இரண்டையும் பயன்படுத்தி ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் வழமையான நிகழ்ச்சி நிரலுக்குள் இவ்விடயத்தினைக் கொண்டுவருவதற்கும், கலந்துரையாடுவதற்குமான சந்தர்ப்பத்தினை ஐக்கிய அமெரிக்கா உருவாக்கியது.இதன்வழி இலங்கையின் நல்லிணக்கத்தினை முன்னேற்றுவதும் பொறுப்புக்கூறுதலும் (Promoting Reconciliation and Accountability in Sri Lanka) தொடர்பான தீர்மானம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்டது.

இதன்படி கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பயனுடைய சிபார்சுகளை நடைமுறைப்படுத்துமாறும், பொருத்தமான சட்டக் கட்டமைப்புகளை நிறைவேற்றுவதற்குத் தேவையான மேலதிக நடவடிக்கைகளை எடுக்குமாறும், எல்லா இலங்கையர்களுக்குமான நல்லிணக்கம், பொறுப்புக்கூறுதல், சமத்துவம், நீதி போன்றவற்றை உறுதிப்படுத்தக்கூடிய அர்பணிப்புள்ள, நம்பகத்தன்மைவாய்ந்த சுதந்திரமான செயற்பாடுகளை ஆரம்பிக்குமாறும் இலங்கை அரசாங்கம் கேட்டுக்கொள்ளப்பட்டது.

இவைகளுக்காக இலங்கை அரசாங்கத்தின் அனுமதியுடன் ஐக்கியநாடுகள் சபையின் மனிதஉரிமைகள் பேரவை ஆணையாளர் அலுவலகம் இலங்கை அரசாங்கத்திற்கு ஆலோசனைகளையும், தொழில்நுட்ப உதவிகளையும் வழங்குவது ஊக்குவிக்கப்படுவதுடன், இருபத்திரெண்டாவது கூட்டத்தொடரின்போது வழங்கப்பட்ட ஆலோசனைகள், உதவிகள் தொடர்பான அறிக்கையினை ஆணையாளர் சமர்பிக்க வேண்டும் எனவும் கூறப்பட்டது.

இருபத்திரெண்டாவது கூட்டத் தொடர்

இறுதி யுத்தத்தின் போது நடைபெற்ற யுத்தக் குற்றங்கள் தொடர்பாக சுதந்திரமான சர்வதேச தரத்திலான விசாரணை மேற்கொள்ளபட வேண்டும் என ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் இருபத்திரெண்டாவது கூட்டத் தொடரில் அதிகார பூர்வமாக இலங்கை கேட்டுக் கொள்ளப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

2012ஆம் ஆண்டு பங்குனி மாதம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் பத்தொன்பதாவது கூட்டத் தொடரின் போது இலங்கையின் இறுதி யுத்தத்தின் போது நிகழ்ந்த யுத்தக் குற்றங்களுக்காக இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்யப்பட்ட காலத்திலிருந்து இன்று வரை இலங்கை அரசாங்கம் தனது பொறுப்பினை நிறைவேற்றுவதற்காகவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வழங்குவதற்காகவும் எவ்வித செயற்திட்டங்களையும் உருவாக்கவில்லை என்றதொரு குற்றச்சாட்டிற்குள்ளாகியுள்ளது.

2013ஆம் ஆண்டு மாசி மாதம் 11ஆம் திகதி மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் பொறுப்புக் கூறல் மற்றும் நீதி வழங்காமை ஆகியவற்றில் இலங்கை தோல்வியடைந்துள்ளதால், சர்வதேச மனித உரிமை மற்றும் மனிதாபிமான சட்டங்கள் மீறப்பட்டமை தொடர்பில் சுதந்திரமானதும், நம்பிக்கையானதுமான சர்வதேச தரத்திலான விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என கூறியுள்ளார். அதாவது ”மீள்குடியேற்றம், நல்லிணக்கம், அபிவிருத்தி ஆகியவற்றிற்கு அரசாங்கம் முதலீடு செய்துள்ளது. ஆயினும் பொறுப்புக் கூறுதல், நல்லிணக்கத்திற்கான அர்த்தமுள்ள நடவடிக்கைகளை மேலும் அரசாங்கம் துரிதப்படுத்த வேண்டும். கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளில் சிலவற்றையே இலங்கை நடைமுறைப்படுத்துகிறது. எனவே உள்ளக செயல்முறை தொடர்பாக குறிப்பாக பொறுப்புக் கூறல் தொடர்பாக மனித உரிமைகள் பேரவை கண்காணிக்க வேண்டியுள்ளதால், மனித உரிமைகள் பேரவையில் இவ்விடயம் தொடர்பாக விவாதிக்க வேண்டும்” என மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் இருபத்திரெண்டாவது கூட்டத் தொடரின் போது தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் மனித உரிமைகள் பேரவையில் நிகழவுள்ள விவாதத்திற்கு மனித உரிமைகள் பேரவையில் அங்கத்துவம் பெறும் அங்கத்துவ நாடுகள் முழுமையாக ஆதரவு வழங்க வேண்டும் என மனித உரிமைகள் காப்பகம் வேண்டுகோள் விடுத்துள்ளமை கருத்தில் கொள்ளப்பட வேண்டியதாகும்.

இலங்கையின் செயற்திட்டம்

சர்வதேச Crisis Group, மனித உரிமைகள் காப்பகம் மற்றும் 2011ஆம் ஆண்டு சித்திரை மாதம் சமர்ப்பிக்கப்பட்ட நிபுணர் குழு அறிக்கை உட்பட பல்வேறு சுதந்திரமான நிறுவனங்கள் 2009ஆம் ஆண்டு இறுதி யுத்தத்தின் போது தமிழீழ விடுதலைப்புலிகள் மற்றும் அரசாங்கப் படைகள் ஆகிய இருதரப்பினராலும் மிகவும் மோசமான மனித உரிமைகள் மீறல்கள், யுத்தக் குற்றங்கள் நடைபெற்றுள்ளதாகக் கூறுகின்றன.

அதேநேரம் யுத்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பாக நம்பகமான விசாரணைகள் மேற்கொள்ளுவதற்கு இலங்கை அரசாங்கம் எவ்விதமான நடவடிக்கைகளையும் இதுவரை எடுக்கவில்லை என சர்வதேச நாடுகள் கருதுகின்றன. இறுதி யுத்தத்தின் போது நடைபெற்ற மனித உரிமைகள் மீறல்களுககான விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக மனித உரிமைகள் பேரவையில் இது வரை இலங்கை அறிவிக்கவும் இல்லை.

பதிலாக யுத்தக் குற்றங்கள் முழுவதிலுமிருந்து இலங்கை இராணுவத்தினை விலக்கிக் கொள்ளும் வகையில் இலங்கை அரசாங்கம் சில நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தது. முக்கியமாக இராணுவ நீதிமன்றம் ஒன்றை நிறுவி இராணுவ வீரர்கள் மீது சுமத்தப்பட்ட யுத்தக் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்ததுடன் அதன் அறிக்கையினை 2013ஆம் ஆண்டு மாசி மாதம் 15ஆம் திகதி அரசாங்கத்திடம் வழங்கியது. இவ் அறிக்கை இறுதி யுத்தத்தின் போது பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பான குற்றச் சாட்டுகள் அனைத்திலும் இருந்து இலங்கை இராணுவத்தினை விடுவித்திருந்தது.

எனவே 2012ஆம் ஆண்டு பங்குனி மாதம் தொடக்கம் மனித உரிமைகள் பேரவையில் இலங்கையின் மனித உரிமைகள் தொடர்பான விடயங்கள் தொடர்ந்து விவாதிக்கப்பட்டு வந்தாலும் இலங்கை ஆட்சியாளர்கள் இதற்கு பொறுப்புக் கூறுவதிலும், நீதி வழங்குவதிலும் தோல்வியடைந்தேயுள்ளனர்.

நீதியைக் கோரும் மக்களுக்கும், சர்வதேச சமுதாயத்தின் உதவியைக் கோரும் மக்களுக்கும் இலங்கை அரசாங்கம் அச்சுறுத்தலைக் கொடுத்து வருகின்றது. இது இலங்கை அரசாங்கம் தற்பாதுகாப்பிற்காக மேற்கொள்ளும் தந்திரமாகும். மக்களைப் பாதிக்கும் இவ்வாறான தந்திரங்களை இலங்கை அரசாங்கத்தின் மனதிலிருப்பதை அகற்ற மனித உரிமைகள் பேரவை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இறுதி யுத்தத்தின் போது படுகொலை செய்யப்பட்ட 40,000 பொதுமக்கள் தொடர்பான சுதந்திரமான சர்வதேச தரத்திலான விசாரணையினை இலங்கை அரசாங்கம் செய்யத் தவறுமாயின் இதனைத் தாமதமின்றி மேற்கொள்வதற்கான அதிகாரத்தினைக் மனித உரிமைகள் பேரவை கொண்டுள்ளது என்பதை இலங்கை ஆட்சியாளர்கள் மனதில் கொள்ள வேண்டும்.

அமெரிக்காவின் முன்மொழிவில் (2013) உள்ள பிரதான விடயங்கள்

பொறுப்புக் கூறுதல், நல்லிணக்கம் என்பவற்றை இலங்கையில் நடைமுறைப்படுத்தக் கோறி தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் இருபத்திரெண்டாவது மனித உரிமைகள் பேரவையில் ஐக்கிய அமெரிக்கா இலங்கைக்கு எதிராக புதியதொரு பிரேரணையை சமர்ப்பிக்க உள்ளதாக அறிவித்துள்ளது.

இலங்கை அரசாங்கத்தினால் நிறுவப்பட்ட கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபார்சுகளை நடைமுறைப்படுத்தும் படியும் தனது சொந்த நாட்டு மக்களுக்கு பொறுப்புக் கூறுவதனூடாக இதனை நிறைவேற்றும் படியும் ஐக்கிய அமெரிக்கா தனது பிரேரனையில் கேட்கவுள்ளதாக கூறப்படுகின்றது. இவ்வகையில் இப்பிரேரணையில் பின்வரும் விடயங்கள் முதன்மைப்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

  1. இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக் கூறுதல் என்பவற்றை பேணுவதற்காக சமர்ப்பிக்கப்பட்ட 19/2 மனித உரிமைப் பேரவை தீர்மானத்தினை மீண்டும் வலியுறுத்தல்
  2. நாட்டு மக்கள் அனைவருக்கும் அடிப்படை உரிமைகளையும், மனித உரிமைகளையும் அனுபவிப்பதற்கான உத்தரவாதத்தினை வழங்க வேண்டியது இலங்கை அரசாங்கத்தின் பொறுப்பாகும் என்பதை மீள வலியுறுத்துதல்
  3. கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபார்சுகளையும், முடிவுகளையும் நிறைவேற்றக் கூடிய செயற்பாட்டுத் திட்டம் ஒன்றை இலங்கை அரசாங்கம் உருவாக்கத் தூண்டுதல்.
  4. கருத்து வெளியிடும் சுதந்திரத்தினை பாதுகாத்தலும், உயர்த்துதலும், மாகாணங்களுக்கு அதிகாரப் பகிர்வினை வழங்கி அரசியல் தீர்வினை அடைதல், சிவில் நிறுவனங்களின் சுதந்திரத்தினைப் பலப்படுத்துதல், காணித்தகறாறுகளைத் தீர்க்ககூடிய பொறிமுறைகளை அமுல்;படுத்துதல், வடமாகாணத்திலிருந்து இராணுவத்தினை அகற்றுதல், ஆட்கள் காணாமல் போதல், நீதிக்குப் புறம்பான படுகொலைகள் போன்ற பரந்து விரிந்த குற்றச் சாட்டுகள் தொடர்பாக நம்பகத்தன்மை வாய்ந்த விசாரணை தேவை என கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு தெரிவிக்கின்றது. இதனை நடைமுறைப்படுத்துமாறு மீள வலியுறுத்துதல்.

தற்போது சமர்ப்பிக்கப்படவுள்ள இப்புதிய பிரேரனை ஏற்கனவே ஐக்கிய அமெரிக்காவினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணைக்கு புதிய உந்து சக்தியை வழங்குவதாக இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.இதற்காக பான-கீ-மூன் “தேசிய நல்லிணக்கத்தினை ஏற்படுத்துவதற்கான பரந்த தேசிய பொறிமுறை ஒன்றை நேர்மையாக உருவாக்குவதனூடாக இலங்கையில் பொறுப்புக் கூறுதலை அடைய முடியும். இவ்விலக்கினை அடைவதற்காக சர்வதேச சமுதாயத்துடன் இணைந்து இலங்கை அரசாங்கம் செயற்திறனுடன் பணியாற்ற வேண்டும்” என தாம் எதிர்பார்ப்பதாகத் தெரிவித்துள்ளார்.

இறைமைக்கு ஏற்படக் கூடிய சவால்

சர்வதேச நாடுகளுடன் இலங்கை பேணுகின்ற இறுக்கமான கொள்கை படிப்படியாக குறைவடைகின்ற போது இலங்கையின் இறைமைக்கு சர்வதேச நாடுகள் வழங்கும் மதிப்பும், தரமும் அதிகரிக்கும். அரசியல் நிறுவனங்களின் வெளிப்படைத்தன்மை, சுதந்திரம் என்பவற்றை இலங்கை கட்டுப்படுத்துமாயின் இலங்கையின் சர்வதேச தரநிர்ணயம் குறைவடையலாம்.

எனவே சர்வதேச நியமங்களுக்கு ஏற்ப இலங்கை தனது தரநிர்ணயத்தினைப் பேணிப் பாதுகாக்க வேண்டுமாயின் சர்வதேச நாடுகளுடன் இறுக்கமான கொள்கைகளை பின்பற்றாது நெகிழ்வுத் தன்மையுடன் செயற்படுவதுடன், அரசியல் நிறுவனங்களின் சுதந்திரம் குறிப்பாக நீதிதுறையின் சுதந்திரம், வெளிப்படைத்தன்மை, பொறுப்புக் கூறுதல், மனித உரிமைகளைப் பாதுகாத்தல் என்பவற்றை சர்வதேச தரத்தில் பேணுதல் வேண்டும்.

இதன் மூலமே இலங்கை தனது உள் மற்றும் வெளி இறமையினை உயர் நிலையில் பேண முடியும். இறைமையினை உயர் நிலையில் பேணுவதன் மூலம் சர்வதேச தரநிர்ணயத்தினைப் பெற்றுக் கொள்ள முடியும். எனவே இலங்கையின் மனித உரிமைகள் தொடர்பான நிலமைகளை அடிப்படையாகக் கொண்டு இறைமை தொடர்பான அதன் தரம் சர்வதேச மட்டத்தில் நிர்ணயிக்கப்படக் கூடிய வாய்ப்புள்ளது. எனவே நீண்டகால மற்றும் குறுங்காலத்தில் மனித உரிமைகளை இலங்கை எவ்வாறு பேணுகின்றது என்பதைப் பொறுத்து இறைமையின் தரம் நிர்ணயிக்கப்படலாம்.

 

Share

Who's Online

We have 54 guests and no members online

+1 Me

Subscribe

Enter your email address:

Delivered by FeedBurner

 About Prof. Thanabalasingam Krishnamohan

Prof. Thanabalsingam Krishnamohan is a Professor in Political Science in Eastern University of Sri Lanka .

    

 
 
Invalid RSS link or you're not allowed to read this Picasa gallery or album.