Education is the Most Powerful Weapon Which You Can Use to Change the World. – Nelson Mandela-

நிர்வாகத்தில் தொழிலாளர் பங்கு வகித்தல்

நிர்வாகத்தில் தொழிலாளர் பங்கு வகித்தல்

நிர்வாகத்தில் தொழிலாளர் பங்கு வகித்தல் by Thanabalasingham Krishnamohan

இருபத்தியோராம் நூற்றாண்டில் எழுச்சியடையும் சீனாவின் கடல் வலிமை

இருபத்தியோராம் நூற்றாண்டில் எழுச்சியடையும் சீனாவின் கடல் வலிமை

இருபத்தியோராம் நூற்றாண்டில் எழுச்சியடையும் சீனாவின் கடல் வலிமை by Thanabalasingham Krishnamohan

Civil Society

Civil Society

Civil Society by Thanabalasingham Krishnamohan

The role played by India in Sri Lankas’ Ethnic Conflict and Resolution:India’s stand in after 1997

The role played by India in Sri Lankas’ Ethnic Conflict and Resolution:India’s stand in after 1997

The role played by India in Sri Lankas’ Ethnic Conflict and Resolution:India’s stand in...

  • நிர்வாகத்தில் தொழிலாளர் பங்கு வகித்தல்

    நிர்வாகத்தில் தொழிலாளர் பங்கு வகித்தல்

    Tuesday, 15 October 2013 23:39
  • இருபத்தியோராம் நூற்றாண்டில் எழுச்சியடையும் சீனாவின் கடல் வலிமை

    இருபத்தியோராம் நூற்றாண்டில் எழுச்சியடையும் சீனாவின் கடல் வலிமை

    Tuesday, 15 October 2013 23:32
  • பிராந்திய ஒத்துழைப்புக்கான தெற்காசியச் சங்கம்

    பிராந்திய ஒத்துழைப்புக்கான தெற்காசியச் சங்கம்

    Tuesday, 15 October 2013 23:07
  • Civil Society

    Civil Society

    Tuesday, 15 October 2013 23:18
  • The role played by India in Sri Lankas’ Ethnic Conflict and Resolution:India’s stand in after 1997

    The role played by India in Sri Lankas’ Ethnic Conflict and Resolution:India’s stand in after 1997

    Tuesday, 15 October 2013 23:20
Comparative Politics
Comparative Politics
ஒப்பியல் பொதுநிர்வகம்: தெரிவு செய்யப்பட்ட நாடுகளின் சிவில் நிர்வாகமுறைமை > குமரன் புத்தக இல்லம் கொழும்பு >2007, ISBN - NO: 978-955-659-091-9

பிரித்தானிய ,பிரான்ஸ் ,அமெரிக்க,இந்தியா ,இலங்கை போன்ற ஐந்து நாடுகளின் சிவில் நிர்வாக சேவைகளின் வரலாற்று அபிவிருத்தியையும், கோட்பாட்டு நடைமுறை அம்சங்களையும் விமர்சனரீதியாக இந் நூல் அணுகுகின்றது.சிக்கலான விடயங்களையும்.பதங்களையும் எளிமையாகவும்,தெளிவாகவும்,ஆழமாகவும் இந் நூல் விளக்குகின்றது.

More...
Political Science: Political Activity and Political Processes
Political Science: Political Activity and Political Processes
அரசியல் விஞ்ஞானம்: அரசியல் செயற்பாடும் அரசியல் செயல்முறையும்;> சேமமடு பதிப்பகம், கொழும்பு >2010> ISBN - NO: 978-955-1857-61-5 பொதுக் கொள்கை, பொதுநிர்வாகவியலின் இயல்பு> பொது முகாமைத்துவம்> மோதலை விளங் க்கிக்கொள்ளல், மோதலும் வன்முறையும்,மோதலும் அகிம்சையும்,மோதலைத் தடுத்தல், மோதலைத் தீர்த்தல், மோதல் முகாமைத்துவம், மூன்றாம் தரப்பு மத்தியஸ்தம், சமாதானக் கற்கை, சர்வதேச அரசியல், வெளிநாட்டுக் கொள்கை, யுத்தம், கூட்டுப்பாதுகாப்பு, அதிகாரச் சமநிலை, சர்வதேசச் சட்டம், ஆயுதக் கட்டுப்பாடும்,ஆயுதக்களைவும் போன்ற சர்வதேச அரசியலில் இடம்பெறும் சில முக்கியமான கோட்பாடுகள் பல இந் நூலில் சேர்க்கப்பட்டுள்ளன.
More...
மோதல் தீர்வுக் கற்கைகள்: ஒர் அறிமுகம்
மோதல் தீர்வுக் கற்கைகள்: ஒர் அறிமுகம்
மோதல் தீர்வுக் கற்கை நெறி தொடர்பான ஆய்வுகள் மனித மோதலின் தன்மை மற்றும் இயக்கவியல் ஆகியவற்றைப் புரிந்துகொள்ளுதல், ஆரோக்கியமான உறவுகளை வளர்த்தல், வன்முறையைத் தடுக்கும் வழிகளிகள் மற்றும் மோதலைக் கையாள்வதற்குப் பொருத்தமான மாற்று வழிகளைத் தேடுதல் என்பவைகளில் கவனம் செலுத்துகின்றது. மோதல், தகராறு, வன்முறை, யுத்தம் அதிகாரம், கலாசாரம். நீதி, சமாதானம், தகவல் தொடர்பு, முகாமைத்துவம், மோதலைத் தீர்த்தல், மோதல் நிலைமாற்றம் போன்ற தலைப்புகளுடன் தொடர்புபடும் வகையில் மோதல் தீர்வுக் கற்கை நெறி பகுப்பாய்வு செய்யப்படுகின்றது. தனிப்பட்ட, தேசிய, சர்வதேசிய மோதல் சூழ்நிலைகளுக்குப் பதிலளிக்கும் வகையிலும், மோதலை ஆக்கபூர்வமாகப் புரிந்துகொள்ளவும், தொடர்பு கொள்ளவும் மோதல் தீர்வுக் கற்கை நெறி மாணவர்களைத் தயார்படுத்துகிறது. இவ்வகையில் தமிழ்மொழி மூலமான பல்கலைக்கழக மாணவர்களுக்கும், அரசறிவியலை உயர்தரத்தில் கற்கும் மாணவர்களுக்கும், பொதுவான விடயங்களைத் தேடி வாசிக்கும் வாசகர்களுக்கும் பயன்தரும் வகையில் மோதல் தீர்வுக் கற்கைகள்: ஒர் அறிமுகம் என்னும் தலைப்பில் எழுதப்பட்டுள்ள இந்நூல் வெளிவருகின்றது.
More...
Plantation Trade Union Movement in Sri Lanka
Plantation Trade Union Movement in Sri Lanka
இலங்கைப் பெருந்தோட்ட தொழிற்சங்க இயக்கங்கள்;>குமரன் புத்தக இல்லம் கொழும்பு>2008> ISBN - NO: 978-955-659-124-9 கண்காணிமார்களின் ஆசை வார்த்தைகளை நம்பி இலங்கை வந்து மத்தியமலை பிரதேசங்களில் வேலைக்காக குடியமர்த்தப்பட்ட தொழிலாளர்கள் வேதனம்,வேலைநாட்கள் தொடர்பான பிரச்சனைகளை எதிர்நோக்கினர். இதனை எதிர்த்து பெருந்தோட்ட தொழிற் சங்கங்கள் தொழிலாளர்களின் சமூகப் பொருளாதார உரிமைகளுக்காக போராட்டங்களை நடாத்தினர். இவ்வகையில் பெருந்தோட்ட தொழிற்சங்கத் தலைவர்களின் சமூகப் பொருளாதார பண்புகளையும், 1970 ஆம் 1977 ஆம் ஆண்டுகளில் பதவியேற்ற அரசாங்கங்கள் பின்பற்றிய கொள்கைகள் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் மீது ஏற்படுத்திய தாக்கம்,தொழிற்சங்கங்கள் தொழிலாளர் நலன்களுக்காக நடாத்திய போராட்டங்கள் போன்றவற்றையும் தொழிலாளர்களுக்கும், தோட்டமுகாமைத்துவத்திற்கு இடையிலும், தொழிலாளர்களுக்கு இடையில் ஏற்படும் தகராறுகள் ,பிரச்சினைகள் தொடர்பாக தொழிற்சங்கங்கள் எடுக்கும் நிலைப்பாடுகள் தொடர்பாக இந் நூல் ஆய்வு செய்கின்றது.
More...
Political Science: Study of State and Identification of State
Political Science: Study of State and Identification of State
அரசியல் விஞ்ஞானம்: அரசியல் பற்றிய கற்கையும் அரசை இனம்காணுதலும் ;> சேமமடு பதிப்பகம், கொழும்பு>2009. ISBN - NO: 978-955-1857-60-8 அரசியல் விஞ்ஞானத்தின் இயல்புகள், அரசியல் விஞ்ஞானத்தின் செயற்பரப்பெல்லை, அரசியல் விஞ்ஞானம் ஓர் விஞ்ஞானமா? அரசியல் விஞ்ஞானத்தினை கற்பதற்கான அணுகுமுறைகள், அரசியல் விஞ்ஞானமும், ஏனைய சமூகவிஞ்ஞானப்பாடங்களும், அரசு,தோற்றமும்,வளர்ச்சியும், அரசினை இனம் காணுவதற்கான அடிப்படைகள், அரசுடன் தொடர்புடைய எண்ணக்கருக்கள்,கோட்பாடுகள் போன்றன நடைமுறை விவகாரங்களுடனும்,அனுபவங்களுடனும் இணைத்து எழுதப்பட்டுள்ளது.
More...
Triangular Power Straggle in Indian Ocean and Ethnic Conflict in Sri Lanka
Triangular Power Straggle in Indian Ocean and Ethnic Conflict in Sri Lanka
இந்துசமுத்திரப் பிராந்தியத்தில் முக்கோண அதிகாரப் போட்டியும் இலங்கையின் இனமோதலும் குமரன் புத்தக இல்லம், 2012 ISBN 978-955-659-343-3 இந்துசமுத்திரப் பிராந்தியத்தில் தனக்கிருக்கும் எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டு இலங்கையில் அதிக முதலீடுகளை சீனா செய்து வருகின்றது. இதே அக்கறையுடன் ஏனைய உலக நாடுகளும் இலங்கையினைத் தமது தந்திரோபாயப் பங்காளியாக மாற்றுவதற்கு முயற்சிக்கின்றன.பூகோள வல்லரசுகளும்,பிராந்திய வல்லரசுகளும் நடத்தும் அதிகாரப் போராட்டத்தினால் ஏற்படக்கூடிய பதிப்புக்களிலிருந்து இலங்கை தன்னைத்தானே பாதுகாத்துக் கொள்ள முடியாது தடுமாறுகின்றது.
More...
பொது நிர்வாகத்தில்‌ மனிதவள முகாமைத்துவம்‌: முன்னணி நாடுகளின்‌ சிவில்‌ சேவை மாதிரிகள்‌
பொது நிர்வாகத்தில்‌ மனிதவள முகாமைத்துவம்‌: முன்னணி நாடுகளின்‌ சிவில்‌ சேவை மாதிரிகள்‌
சர்வதேச ஆய்வுப்பரப்பில்‌ அரசறிவியல்‌, நிர்வாகவியல்‌ போன்ற துறைகள்‌ மிகுந்த அவதானத்தையும்‌, முக்கியத்துவத்தையும்‌ பெறுகின்றன. இவ்வகையில்‌ "பொது நிர்வாகத்தில்‌ மனிதவள முகாமைத்துவம்‌: முன்னணி நாடுகளின்‌ சிவில்‌ சேவை மாதிரிகள்‌" என்ற புதுக்கிய இந்நூல்‌ பல்கலைக்கழக மாணவர்களுக்கும்‌, புலமைத்துவம்‌ சார்‌ சமூகத்தினர்க்கும்‌ பயனுடையதாகும்‌.

சிவில்‌ சேவை தொடர்பான பொதுவான அறிமுகத்துடன்‌ சர்வதேச நாடுகளின் குறிப்பாக பிரித்தானியா, பிரான்ஸ்‌, ஐக்கிய அமெரிக்கா, இந்தியா, இலங்கை முதலான நாடுகளின்‌ சிவில்‌ சேவைக்‌ கட்டமைப்புகளை முன்னிலைப்படுத்தி ஒப்பியல்‌ நோக்கில்‌ இந்நூல்‌ எழுதப்பட்டிருப்பது சிறப்பிற்குரியதாகும்‌.
More...

Around the World

  • Trump takes credit for ceasefire agreement and promotes 'a new Middle East' without addressing rights of Palestinians.

    Read more...
  • Will the fragile ceasefire hold as US President Donald Trump arrives in the Middle East?

    Read more...
  • British Prime Minister Keir Starmer says the UK is ready to help monitor the new ceasefire in Gaza.

    Read more...
  • Egyptt's President el-Sisi said a two-state solution is the “only way” to secure lasting peace for Israel and Palestine.

    Read more...
  • Joy turned to devastation for many after Israel added a twist to its release of almost 2,000 imprisoned Palestinians.

    Read more...
  • US President Trump praises 'new beautiful day' as Gaza war comes to an end, but questions about the future remain.

    Read more...
  • US President Donald Trump is in the region Monday to cement his plan for peace in Gaza.

    Read more...
  • US President Donald Trump and other world leaders signed a document on the Gaza ceasefire deal.

    Read more...
  • Two families stood waiting in Ramallah, one to welcome their loved one, one to mourn that they may never see theirs.

    Read more...
  • Moscow, which has sought to increase its influence in Afghanistan, says it welcomes stabilisation along the border.

    Read more...
1 1 1 1 1 1 1 1 1 1 Rating 0.00 (0 Votes)

(தினக்குரல், புதிய பண்பாடு இதழில் 2013.03.16 , 2013.03.17 ஆகிய திகதிகளில் பிரசுரிக்கப்பட்டது)

clip_image002 ஐக்கிய அமெரிக்காவினால் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் சமர்பிக்கப்படவுள்ள இலங்கைக்கு எதிரான பிரேரணையில் இந்தியாவினால் கூறப்பட்ட ஆலோசனைகளும் உள்ளடங்கியிருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. இப்பிரேரணை இலங்கை அரசாங்கத்தின் இசைவுடனும், ஆலோசனையுடனும் இறுதி யுத்தத்தின் போது நிகழ்ந்த மனித உரிமை மீறல் தொடர்பாக பார்வையிடுபவர்களுக்குரிய விசேட நடைமுறைகளையும், அதிகாரங்களையும் உறுதிப்படுத்தியுள்ளது. இலங்கையுடன் நட்;புறவினைப் பேணவேண்டிய சர்வதேசச் சூழல் இந்தியாவிற்குள்ளதால், இலங்கைக்கு எதிரான சர்வதேசக் கொள்கையினை வகுக்க இந்தியா விரும்பாது. இலங்கை விவகாரம் தொடர்பாக ஐக்கிய அமெரிக்கா சுதந்திரமாகச் செயற்பட்டாலும், இந்தியாவினால் இவ்வாறு சுதந்திரமாகச் செயற்பட முடியாது என்பதே யதார்த்தமாகும். இப்பின்னணியில் எதிர்வரும் காலங்களில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை விவகாரம் தொடர்பாக இந்தியாவின் நிலைப்பாடு எவ்வாறு அமையலாம் என்பதை கூர்மையாக அவதானிக்க வேண்டியுள்ளது.

பாராளுமன்ற விவாதம்

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம், மற்றும் இந்திய கம்யூனிசக் கட்சி ஆகியன இலங்கையில் இறுதியுத்தத்தின் போது தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டமைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் ஐக்கிய அமெரிக்கா சமர்ப்பிக்கவுள்ள பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்குமாறு இந்தியாவினைக் கேட்டுள்ளன.

அதேநேரம் இலங்கையின் இறுதி யுத்தத்தின் போது தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட படுகொலைகள் தொடர்பாகவும், அதற்கு எதிராக ஐக்கிய அமெரிக்கா ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கவுள்ள பிரேரணை தொடர்பாகவும் 2013ஆம் ஆண்டு மாசி மாதம் 26ஆம் திகதி இந்தியாவின் மேல் சபையில் இந்தியா விவாதம் நடாத்தியுள்ளது.

ஆயினும் இலங்கை இறைமையுடைய நாடு என்ற வகையில் இலங்கையின் உள்விவகாரத்தில் நேரடியாக தலையீடு செய்து அதன் இறைமைக்கு தீங்கு விளைவிக்க இந்தியா தற்போது முயற்சி செய்யாது என்பதை இவ் விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய இந்தியாவின் வெளி விவகார அமைச்சர் சல்மன் குர்ஷிட் (Salman Khurshid) தெரிவித்த கருத்துக்கள் உறுதிப்படுத்தியுள்ளன. இலங்கையின் இன மோதலில் கடந்த காலத்தில் வலிந்து நுழைந்து கொண்டதால் இந்தியா ராஜீவ்காந்தியின் படுகொலை உட்பட நிறையவே துன்பப்பட்டு விட்டதுடன், எதிர்காலத்தில் இவ்வாறு துன்பப்படத் தயாராகவும் இருக்காது. தற்போதைய சர்வதேசச் சூழலில் தனது நட்பு நாடு ஒன்றினை சர்வதேச அரங்கில் தண்டிக்கவும் இந்தியா விரும்பாது. பதிலாக நட்பினைப் பேணவே விரும்பும்.

இச்சூழலில் தனக்கு எதிரானதொரு நாடாக இலங்கைகையை இந்தியா கருதுமானால், இந்தியா தனக்குள்ள வேதனை, கோபம், ஏமாற்றம், பொறுமையின்மை போன்றவற்றைத் தெரிவிக்கத் தயக்கம் காட்டாது. ஆனால் இலங்கையை நட்பு நாடாக பேணவே இந்தியா விரும்புவதுடன், தனது எதிர்கால நலனுக்கு இலங்கை வழங்கக்கூடிய உதவிகளை கருத்தில் கொண்டு சர்வதேச அரங்கில் இலங்கைக்கு எதிராக மோசமான தீர்மானம் எதனையும் இந்தியா வெளிப்படையாக எடுக்க விரும்பாது.

இந்தியா செய்யக் கூடிய பணிகள்

அரசியல் தீர்வினைத் தமிழ் மக்களுக்குப் பெற்றுக் கொடுப்பதற்கு இந்தியா தனது முன்மொழிவினை முன்வைக்கலாம். இதனூடாக நிலைத்திருக்கக் கூடிய அரசியல் தீர்வு ஒன்றிற்கு அழுத்தம் கொடுக்கலாம். ஆனால் இறுதி யுத்தத்தில் தமிழ் மக்களின் மனித உரிமைகள் மீறப்பட்டமைக்கான குற்றச்சாட்டுகளுக்கான, பொறுப்பினை இலங்கை அரசாங்கம் ஏற்றுக் கொள்ள வேண்டும். இலங்கை அரசாங்கம் இதற்கான பொறுப்பினை ஏற்றுக் கொள்ள மறுத்தால் அல்லது தயக்கம் காட்டினால் இந்தியா இது தொடர்பாக எவ்வித கடுமையான ராஜதந்திர நகர்வுகளையும் செய்யாது.

இந்தியாவின் பிரதம மந்திரி மன்மோகன் சிங் 2013ஆம் ஆண்டு பங்குனி மாதம் 6ம் திகதி லோக் சபாவில் நிகழ்த்திய உரையில் 'இலங்கையின் இறுதி யுத்த காலப்பகுதியில் நிகழ்ந்த மனித உரிமை மீறலுக்கு இலங்கை அரசாங்கம் பொறுப்புக் கூறுதல், நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதில் தாமதமாகச் செயற்படுதல் என்பவற்றில் இந்தியா மிகவும் உறுதியான செயற்பாட்டினை இலங்கையிடமிருந்து எதிர்பார்க்கிறது' எனத் தெரிவித்திருந்தார்.

மேலும் பதின்மூன்றாவது திருத்தத்தினை இலங்கை முழுமையாக அமுல்படுத்துவதுடன், அர்த்தமுள்ள அரசியல் தீர்வினை முன்னெடுப்பதற்கும் இலங்கை அரசாங்கம் முயற்சிக்க வேண்டும். வட மாகாணசபைக்கான தேர்தலை நடாத்துவதுடன், கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபார்சுகளை நடைமுறைப்படுத்துவதற்கான கால அட்டவணையையும், செயற்திட்டத்தினையும் உருவாக்க வேண்டும் எனத் தெரிவித்திருந்தார். இது தொடர்பாக 2012ஆம் ஆண்டு புரட்டாதி மாதம் இலங்கை ஜனாதிபதி இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்ட போது இந்தியா வலியுறுத்திக் கூறியிருந்தது.

எதிர்வரும் காலங்களில் இந்தியாவினால் சில விடயங்களை மாத்திரமே தொடர்ந்து கூறிக்கொள்ள முடியும். அவைகளாவன

  1. இலங்கை தமிழ் மக்களின் இனமோதலைத் தீர்விற்கு கொண்டு வருவதற்கு பதின்மூன்றாவது அரசியலமைப்பு திருத்தம் சிறந்ததொரு அடிப்படையாகும். எனவே இதனை கைவிடுவது என்பது பொருத்தமான ராஜதந்திரமாக இருக்க முடியாது.
  2. உள்நாட்டு யுத்தம் முடிவிற்கு வந்த பின்னர் ஐக்கிய இலங்கைக்குள் அரசியல் தீர்வினைக் காண்பதற்கு இலங்கைக்குக் கிடைத்திருக்கும் பிறிதொரு சந்தர்ப்பம இதுவாகும்.
  3. இலங்கை தமிழ் மக்களிற்கு நீதி, கௌரவம், சமத்துவம் என்பன கிடைப்பதற்கு இந்தியா தன்னால் செய்யக் கூடிய அனைத்து பணிகளையும் செய்யும் எனத் தொடர்ந்து கூறிக் கொள்ளும். அத்துடன் தனது பணியை நிறுத்திக் கொள்ளும்.
  4. இலங்கையில் நல்லிணக்கத்தையும், அரசியல் தீர்வினையும் அடைவதற்கு தேவையான முன்நகர்வினை இலங்கை எந்தளவில் செய்கிறது என்பதனையும் இந்தியா அவதானித்து வருகிறது.

எனவே ஐக்கிய அமெரிக்காவின் பிரேரணையில் இலங்கை அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்படவுள்ள நல்லிணக்கம், பொறுப்புக் கூறுதல், நீதி, சமத்துவம் போன்ற விடயங்களைச் சர்வதேச குழு ஒன்று மேற்பார்வை செய்ய வேண்டும் என கோரினாலும், இவ்வாறான கோரிக்கைக்கு இந்தியா வெளிப்படையாக இணக்கம் தெரிவிக்கப்போவதில்லை.

பொறுப்புக் கூறுதலும் இறைமையும்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை ஆணையாளர் தனது அறிக்கையில் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு எதிரான இறுதி யுத்த காலத்தில் இலங்கையினால் மேற்கொள்ளப்பட்ட மனிதஉரிமை மீறல்கள் தொடர்பாக சுதந்திரமான சர்வதேச விசாரணைகள் தேவை என அழைப்பு விடுத்திருந்தார். அத்துடன் சர்வதேசச் சட்டம் மீறப்பட்டுள்ளமைக்கான விசாரணைகளையும் மேற்கொள்ள வேண்டும் எனக் கேட்டிருந்தார்.

இந்நிலையில் இலங்கையில் நிகழ்ந்த யுத்தக் குற்றங்களை விசாரணை செய்வதற்கு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை சார்பில் விசேட புலனாய்வாளர்கள் நியமனம் செய்யப்படுவதை இந்தியாவும் விரும்பாது. இவ்வாறானதொரு குழு நியமனம் செய்யப்பட்டு இலங்கைக்கு அனுப்பப்பட்டால் இதனால் இந்தியாவும் அசௌகரியங்களுக்கு உள்ளாகுவதுடன், இந்தியாவின் பெருமைக்கு களங்கம் ஏற்படக் கூடிய சந்தர்ப்பங்கள் அதிகமாக உள்ளது. எனவே இவ்வாறான அழைப்புக்களை இந்தியா தனக்கு ஏற்படக் கூடிய அசௌகரியங்களாகவே கருதுகின்றது. ஏனெனில் இறுதி யுத்தத்தில் இந்தியா வகித்த வகிபாகம் மிகவும் அதிகமாகும். இதனை முன்னைநாள் ஐக்கிய நாடுகள் சபைப் பேச்சாளர் கோர்டன் வைஸ் (Gordon Weiss) பிரித்தானிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபன சிங்கள சேவையாகிய சந்தேசியாவுக்கு (Sandeshaya) வழங்கிய பேட்டி உறுதிப்படுத்திள்ளது.

இப்பேட்டியில் இவர் 'யுத்தக்களத்தில் தமிழீழ விடுதலைப்புலிகள் பூரணமாக அழித்தொழிக்கப்படுவதைப் நேரடியாகப் பார்ப்பதில் இந்திய அரசாங்கம் மிகவும் ஆர்வத்துடன் இருந்தது. ஆகவே நான் நம்புகின்றேன் பொதுமக்கள் கொல்லப்பட்டமை தொடர்பாக இந்தியாவிற்கு நன்கு தெரியும். ஏனெனில் பாராட்டப்படக்கூடிய சிறந்த புலனாய்வாளர்களை முற்றுகைக்குள்ளாகியிருந்த யுத்தப்பிரதேசத்திற்குள் இந்தியா வைத்திருந்தது' எனக் கூறியுள்ளார். எனவே இந்தியாவின் அங்கீகாரத்துடன் தான் இறுதி யுத்தம் முடிவுக்கு வந்திருந்தது என்பதே உண்மையாகும்.

மறுபக்கத்தில் ஐக்கிய அமெரிக்காவின் பிரேரணையினை நடைமுறைப்படுத்தப்படுவது இலகுவானதொரு விடயமல்ல என்ற கருத்து இந்திய அரசாங்கத்திற்குள் மிகவும் பலமாக இருக்கின்றது. ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் நிகழ்ந்த யுத்தங்களில் படுகொலை செய்யப்பட்ட பொது மக்களுக்கான பொறுப்பினை யாரும் இதுவரை ஏற்கவில்லை. இந்த யுத்தங்கள் குறிப்பிடத்தக்களவிற்கு சர்வதேச சட்டங்களை மீறியிருந்தன.

எனவே இலங்கையின் இனமோதலுக்கு நிலைத்திருக்கக் கூடிய அரசியல் தீர்வு ஒன்றைப் பற்றியே இந்தியா சிந்திப்பதாக காட்டிக்கொள்ளும். இதற்காக இந்தியா தொடர்ந்தும் பதின்மூன்றாவது திருத்தத்தின் மூலம் இலங்கைத் தமிழ் மக்களுக்கு அதிகாரங்களைப் பகிர்ந்து வழங்குவதற்குத் தேவையான அழுத்தங்களை மட்டுமே தொடர்ந்து வழங்கும்.

பொறுப்புக் கூறுதல் என்ற விடயமானது ஒரு அரசினுடைய இறைமையுடன் தொடர்புபட்டதாகும். இதனை ஒரு அரசிற்கு வெளியிலிருந்து யாரும் திணிக்கவோ அழுத்தம் கொடுக்கவோ கூடாது. உண்மையில் பொறுப்புக் கூறுதல் என்பது அரசுக்குள்ளேயிருந்து வர வேண்டும். அரசுக்குள்ளிருந்து பொறுப்புக் கூறப்படுகின்ற போதே நிலைத்திருக்கக் கூடிய சமாதானத்தினை உருவாக்கக் கூடிய பாரிய சந்தர்ப்பத்தை உருவாக்கும்.

 

Share

Who's Online

We have 120 guests and no members online

+1 Me

Subscribe

Enter your email address:

Delivered by FeedBurner

 About Prof. Thanabalasingam Krishnamohan

Prof. Thanabalsingam Krishnamohan is a Professor in Political Science in Eastern University of Sri Lanka .

    

 
 
Invalid RSS link or you're not allowed to read this Picasa gallery or album.