Education is the Most Powerful Weapon Which You Can Use to Change the World. – Nelson Mandela-

நிர்வாகத்தில் தொழிலாளர் பங்கு வகித்தல்

நிர்வாகத்தில் தொழிலாளர் பங்கு வகித்தல்

நிர்வாகத்தில் தொழிலாளர் பங்கு வகித்தல் by Thanabalasingham Krishnamohan

The role played by India in Sri Lankas’ Ethnic Conflict and Resolution:India’s stand in after 1997

The role played by India in Sri Lankas’ Ethnic Conflict and Resolution:India’s stand in after 1997

The role played by India in Sri Lankas’ Ethnic Conflict and Resolution:India’s stand in...

இருபத்தியோராம் நூற்றாண்டில் எழுச்சியடையும் சீனாவின் கடல் வலிமை

இருபத்தியோராம் நூற்றாண்டில் எழுச்சியடையும் சீனாவின் கடல் வலிமை

இருபத்தியோராம் நூற்றாண்டில் எழுச்சியடையும் சீனாவின் கடல் வலிமை by Thanabalasingham Krishnamohan

Civil Society

Civil Society

Civil Society by Thanabalasingham Krishnamohan

  • நிர்வாகத்தில் தொழிலாளர் பங்கு வகித்தல்

    நிர்வாகத்தில் தொழிலாளர் பங்கு வகித்தல்

    Tuesday, 15 October 2013 23:39
  • The role played by India in Sri Lankas’ Ethnic Conflict and Resolution:India’s stand in after 1997

    The role played by India in Sri Lankas’ Ethnic Conflict and Resolution:India’s stand in after 1997

    Tuesday, 15 October 2013 23:20
  • இருபத்தியோராம் நூற்றாண்டில் எழுச்சியடையும் சீனாவின் கடல் வலிமை

    இருபத்தியோராம் நூற்றாண்டில் எழுச்சியடையும் சீனாவின் கடல் வலிமை

    Tuesday, 15 October 2013 23:32
  • பிராந்திய ஒத்துழைப்புக்கான தெற்காசியச் சங்கம்

    பிராந்திய ஒத்துழைப்புக்கான தெற்காசியச் சங்கம்

    Tuesday, 15 October 2013 23:07
  • Civil Society

    Civil Society

    Tuesday, 15 October 2013 23:18
Political Science: Political Activity and Political Processes
Political Science: Political Activity and Political Processes
அரசியல் விஞ்ஞானம்: அரசியல் செயற்பாடும் அரசியல் செயல்முறையும்;> சேமமடு பதிப்பகம், கொழும்பு >2010> ISBN - NO: 978-955-1857-61-5 பொதுக் கொள்கை, பொதுநிர்வாகவியலின் இயல்பு> பொது முகாமைத்துவம்> மோதலை விளங் க்கிக்கொள்ளல், மோதலும் வன்முறையும்,மோதலும் அகிம்சையும்,மோதலைத் தடுத்தல், மோதலைத் தீர்த்தல், மோதல் முகாமைத்துவம், மூன்றாம் தரப்பு மத்தியஸ்தம், சமாதானக் கற்கை, சர்வதேச அரசியல், வெளிநாட்டுக் கொள்கை, யுத்தம், கூட்டுப்பாதுகாப்பு, அதிகாரச் சமநிலை, சர்வதேசச் சட்டம், ஆயுதக் கட்டுப்பாடும்,ஆயுதக்களைவும் போன்ற சர்வதேச அரசியலில் இடம்பெறும் சில முக்கியமான கோட்பாடுகள் பல இந் நூலில் சேர்க்கப்பட்டுள்ளன.
More...
மோதல் தீர்வுக் கற்கைகள்: ஒர் அறிமுகம்
மோதல் தீர்வுக் கற்கைகள்: ஒர் அறிமுகம்
மோதல் தீர்வுக் கற்கை நெறி தொடர்பான ஆய்வுகள் மனித மோதலின் தன்மை மற்றும் இயக்கவியல் ஆகியவற்றைப் புரிந்துகொள்ளுதல், ஆரோக்கியமான உறவுகளை வளர்த்தல், வன்முறையைத் தடுக்கும் வழிகளிகள் மற்றும் மோதலைக் கையாள்வதற்குப் பொருத்தமான மாற்று வழிகளைத் தேடுதல் என்பவைகளில் கவனம் செலுத்துகின்றது. மோதல், தகராறு, வன்முறை, யுத்தம் அதிகாரம், கலாசாரம். நீதி, சமாதானம், தகவல் தொடர்பு, முகாமைத்துவம், மோதலைத் தீர்த்தல், மோதல் நிலைமாற்றம் போன்ற தலைப்புகளுடன் தொடர்புபடும் வகையில் மோதல் தீர்வுக் கற்கை நெறி பகுப்பாய்வு செய்யப்படுகின்றது. தனிப்பட்ட, தேசிய, சர்வதேசிய மோதல் சூழ்நிலைகளுக்குப் பதிலளிக்கும் வகையிலும், மோதலை ஆக்கபூர்வமாகப் புரிந்துகொள்ளவும், தொடர்பு கொள்ளவும் மோதல் தீர்வுக் கற்கை நெறி மாணவர்களைத் தயார்படுத்துகிறது. இவ்வகையில் தமிழ்மொழி மூலமான பல்கலைக்கழக மாணவர்களுக்கும், அரசறிவியலை உயர்தரத்தில் கற்கும் மாணவர்களுக்கும், பொதுவான விடயங்களைத் தேடி வாசிக்கும் வாசகர்களுக்கும் பயன்தரும் வகையில் மோதல் தீர்வுக் கற்கைகள்: ஒர் அறிமுகம் என்னும் தலைப்பில் எழுதப்பட்டுள்ள இந்நூல் வெளிவருகின்றது.
More...
Political Science: Study of State and Identification of State
Political Science: Study of State and Identification of State
அரசியல் விஞ்ஞானம்: அரசியல் பற்றிய கற்கையும் அரசை இனம்காணுதலும் ;> சேமமடு பதிப்பகம், கொழும்பு>2009. ISBN - NO: 978-955-1857-60-8 அரசியல் விஞ்ஞானத்தின் இயல்புகள், அரசியல் விஞ்ஞானத்தின் செயற்பரப்பெல்லை, அரசியல் விஞ்ஞானம் ஓர் விஞ்ஞானமா? அரசியல் விஞ்ஞானத்தினை கற்பதற்கான அணுகுமுறைகள், அரசியல் விஞ்ஞானமும், ஏனைய சமூகவிஞ்ஞானப்பாடங்களும், அரசு,தோற்றமும்,வளர்ச்சியும், அரசினை இனம் காணுவதற்கான அடிப்படைகள், அரசுடன் தொடர்புடைய எண்ணக்கருக்கள்,கோட்பாடுகள் போன்றன நடைமுறை விவகாரங்களுடனும்,அனுபவங்களுடனும் இணைத்து எழுதப்பட்டுள்ளது.
More...
பொது நிர்வாகத்தில்‌ மனிதவள முகாமைத்துவம்‌: முன்னணி நாடுகளின்‌ சிவில்‌ சேவை மாதிரிகள்‌
பொது நிர்வாகத்தில்‌ மனிதவள முகாமைத்துவம்‌: முன்னணி நாடுகளின்‌ சிவில்‌ சேவை மாதிரிகள்‌
சர்வதேச ஆய்வுப்பரப்பில்‌ அரசறிவியல்‌, நிர்வாகவியல்‌ போன்ற துறைகள்‌ மிகுந்த அவதானத்தையும்‌, முக்கியத்துவத்தையும்‌ பெறுகின்றன. இவ்வகையில்‌ "பொது நிர்வாகத்தில்‌ மனிதவள முகாமைத்துவம்‌: முன்னணி நாடுகளின்‌ சிவில்‌ சேவை மாதிரிகள்‌" என்ற புதுக்கிய இந்நூல்‌ பல்கலைக்கழக மாணவர்களுக்கும்‌, புலமைத்துவம்‌ சார்‌ சமூகத்தினர்க்கும்‌ பயனுடையதாகும்‌.

சிவில்‌ சேவை தொடர்பான பொதுவான அறிமுகத்துடன்‌ சர்வதேச நாடுகளின் குறிப்பாக பிரித்தானியா, பிரான்ஸ்‌, ஐக்கிய அமெரிக்கா, இந்தியா, இலங்கை முதலான நாடுகளின்‌ சிவில்‌ சேவைக்‌ கட்டமைப்புகளை முன்னிலைப்படுத்தி ஒப்பியல்‌ நோக்கில்‌ இந்நூல்‌ எழுதப்பட்டிருப்பது சிறப்பிற்குரியதாகும்‌.
More...
Triangular Power Straggle in Indian Ocean and Ethnic Conflict in Sri Lanka
Triangular Power Straggle in Indian Ocean and Ethnic Conflict in Sri Lanka
இந்துசமுத்திரப் பிராந்தியத்தில் முக்கோண அதிகாரப் போட்டியும் இலங்கையின் இனமோதலும் குமரன் புத்தக இல்லம், 2012 ISBN 978-955-659-343-3 இந்துசமுத்திரப் பிராந்தியத்தில் தனக்கிருக்கும் எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டு இலங்கையில் அதிக முதலீடுகளை சீனா செய்து வருகின்றது. இதே அக்கறையுடன் ஏனைய உலக நாடுகளும் இலங்கையினைத் தமது தந்திரோபாயப் பங்காளியாக மாற்றுவதற்கு முயற்சிக்கின்றன.பூகோள வல்லரசுகளும்,பிராந்திய வல்லரசுகளும் நடத்தும் அதிகாரப் போராட்டத்தினால் ஏற்படக்கூடிய பதிப்புக்களிலிருந்து இலங்கை தன்னைத்தானே பாதுகாத்துக் கொள்ள முடியாது தடுமாறுகின்றது.
More...
Plantation Trade Union Movement in Sri Lanka
Plantation Trade Union Movement in Sri Lanka
இலங்கைப் பெருந்தோட்ட தொழிற்சங்க இயக்கங்கள்;>குமரன் புத்தக இல்லம் கொழும்பு>2008> ISBN - NO: 978-955-659-124-9 கண்காணிமார்களின் ஆசை வார்த்தைகளை நம்பி இலங்கை வந்து மத்தியமலை பிரதேசங்களில் வேலைக்காக குடியமர்த்தப்பட்ட தொழிலாளர்கள் வேதனம்,வேலைநாட்கள் தொடர்பான பிரச்சனைகளை எதிர்நோக்கினர். இதனை எதிர்த்து பெருந்தோட்ட தொழிற் சங்கங்கள் தொழிலாளர்களின் சமூகப் பொருளாதார உரிமைகளுக்காக போராட்டங்களை நடாத்தினர். இவ்வகையில் பெருந்தோட்ட தொழிற்சங்கத் தலைவர்களின் சமூகப் பொருளாதார பண்புகளையும், 1970 ஆம் 1977 ஆம் ஆண்டுகளில் பதவியேற்ற அரசாங்கங்கள் பின்பற்றிய கொள்கைகள் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் மீது ஏற்படுத்திய தாக்கம்,தொழிற்சங்கங்கள் தொழிலாளர் நலன்களுக்காக நடாத்திய போராட்டங்கள் போன்றவற்றையும் தொழிலாளர்களுக்கும், தோட்டமுகாமைத்துவத்திற்கு இடையிலும், தொழிலாளர்களுக்கு இடையில் ஏற்படும் தகராறுகள் ,பிரச்சினைகள் தொடர்பாக தொழிற்சங்கங்கள் எடுக்கும் நிலைப்பாடுகள் தொடர்பாக இந் நூல் ஆய்வு செய்கின்றது.
More...
Comparative Politics
Comparative Politics
ஒப்பியல் பொதுநிர்வகம்: தெரிவு செய்யப்பட்ட நாடுகளின் சிவில் நிர்வாகமுறைமை > குமரன் புத்தக இல்லம் கொழும்பு >2007, ISBN - NO: 978-955-659-091-9

பிரித்தானிய ,பிரான்ஸ் ,அமெரிக்க,இந்தியா ,இலங்கை போன்ற ஐந்து நாடுகளின் சிவில் நிர்வாக சேவைகளின் வரலாற்று அபிவிருத்தியையும், கோட்பாட்டு நடைமுறை அம்சங்களையும் விமர்சனரீதியாக இந் நூல் அணுகுகின்றது.சிக்கலான விடயங்களையும்.பதங்களையும் எளிமையாகவும்,தெளிவாகவும்,ஆழமாகவும் இந் நூல் விளக்குகின்றது.

More...

Around the World

  • Deadly clashes erupted overnight between the Taliban and Pakistani forces across the Afghanistan border.

    Read more...
  • A global roundup of some of last week’s events.

    Read more...
  • US envoy Steve Witkoff and members of President Donald Trump’s family spoke to nearly half a million people in Tel Aviv.

    Read more...
  • Soldiers from a Madagascar army unit have declared support for the youth-led anti-government protests, urging police to

    Read more...
  • The campaign aims to protect the children from the drug-resistant disease spreading across South Asia.

    Read more...
  • The cost to rebuild Gaza will be far greater than the UN, European Union and World Bank estimate of $50bn

    Read more...
  • Soldiers join mass antigovernment protests, urging no violence, as unrest over shortages and political divisions grows.

    Read more...
  • Afghan officials say 58 Pakistani soldiers killed while Pakistan says 200 Taliban and affiliated 'terrorists' dead.

    Read more...
  • Beijing says it will not back down in the face of threats, urging the US to resolve differences through negotiations.

    Read more...
  • US national security expert Kori Schake warns that President Trump is asking the US military to fight his culture wars.

    Read more...
பொது நிர்வாகம் மீதான கட்டுப்பாடுகள் - 4.3 out of 5 based on 4 votes
1 1 1 1 1 1 1 1 1 1 Rating 4.38 (4 Votes)

நிர்வாக அதிகாரிகளிடம் நிர்வாக அதிகாரங்கள் ஒப்படைக்கப்படுகின்ற போது அவர்கள் நிர்வாக பொறுப்புணர்வு உள்ளவர்களாக இருக்க வேண்டும். நிர்வாகிகள் தமக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களைத் துஷ்பிரயோகம் செய்யாமல் தமது கடமைகளைச் செய்து முடிக்க வேண்டும். அத்துடன் தமது கடமைகள், அதிகாரம் தொடர்பாக பொறுப்புக் கூற வேண்டும். எனவே நிர்வாகிகள் தமக்கு வழங்கப்படும் அதிகாரங்களையும், கடமைகளையும் துஸ்பிரயோகம் செய்யாமல் இருக்க நிர்வாகக் கட்டுப்பாடு விதிக்கப்படுகின்றது.

நிர்வாகக் கட்டுப்பாட்டின் வகைகள் :-

பொதுவாக நிர்வாகக் கட்டுப்பாடுகளை இரண்டாக வகைப்படுத்தலாம். ஒன்று உட்கட்டுப்பாடுகள் மற்றயது வெளிக்கட்டுப்பாடுகள் ஆகும். உட்கட்டுப்பாடுகள் நிர்வாக இயந்திரத்துடன் இணைந்து செயற்படுகின்றது. வெளிக்கட்டுப்பாடு என்பது நிர்வாக இயந்திரத்திற்கு வெளியேயிருந்து செயற்படுவதாகும்.

1. உட்கட்டுப்பாடுகள் :-

பொது நிர்வாகவியல் ஓர் சுய ஒழுங்கினை தோற்றுவிக்கின்றது. நிர்வாக ஒழுங்கமைப்பு படிநிலை ஒழுங்கமைப்பாக உள்ளதால் ஒழுங்கமைப்பிலுள்ள ஒரு பகுதி அதனை மேற்பார்வை செய்யும் பிறிதொரு பகுதியால் இலகுவாக கட்டுப்படுத்தப்படுகின்றது. இச்செயற்பாட்டை விட நிர்வாகிகளிற்கான ஊதியக் குறைப்பு, பதவி இறக்கம், நீக்கம், எச்சரிக்கை போன்றவற்றின் மூலமும் கட்டுப்பாடுகள் நிகழ்கின்றன. ஆயினும் உட் கட்டுப்பாடுகள் பின்வரும் வழிகளில் நடைபெறுகின்றன.

வரவு செலவு அறிக்கை கட்டுப்பாடு:-

சட்ட சபையில் நிறைவேற்றப்படும் வரவு செலவுத் திட்டம் ஒரு ஜனநாயக அரசாங்கத்தின் நிர்வாகத்தினைக் கட்டுப்படுத்தும் உள் கட்டுப்பாட்டு வழிகளில் முதன்மையானதாகும். வரவு செலவுத் திட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பின்னர் அதன் நிதியாண்டு ஆரம்பமாகும். நிதியாண்டு ஆரம்பமாகியவுடன் அரசாங்கத்திற்கு வரவேண்டிய வரவுகளையும் அதேபோல அரசாங்கம் மேற்கொள்ள வேண்டிய பல்வேறுபட்ட தேவைகளிற்கான செலவீனங்களையும் மேற்கொள்ள தொடங்கும் இச்சந்தர்ப்பத்தில் நிதியமைச்சும் தணிக்கைத்துறையும் செலவீனங்களை மேற்கொள்ளும்.

ஆளணி முகாமைத்துவக் கட்டுப்பாடு:-

ஆளணி முகாமைத்துவம் ஊடாகவும் பொது நிர்வாகம் கட்டுப்பாட்டிற்குள்ளாகின்றது. படிநிலை ஒழுங்கமைப்பில் இக்கட்டுப்பாடு தன்னிச்சையாகவே ஏற்பட்டு விடுகின்றது. இங்கு இச்செயற்பாடு நிகழ்வதற்கு நிர்வாகக் கடமையுணர்வு ஏற்படுதல் வேண்டும். 1948 ஆம் ஆண்டு ஐக்கிய அமெரிக்க அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட கூவர் (ர்ழழஎநச) ஆணைக்குழு நிர்வாகத்துறைக்கு சமர்ப்பி;த்த அறிக்கையில் 'அதிகாரமற்ற கடமையும், பொறுப்பும் அர்த்தமற்றது. அதிகாரம் சீராக மேலிருந்து கீழ்நோக்கிப் படிப்படியாக வழங்கப்பட்டால்தான் மறுபக்கத்தில் கீழிருந்து மேல்நோக்கி கடமையும், பொறுப்பும் சிறப்பாக மேற்கொள்ளப்படும்'; எனக் கூறியிருந்தது.

செயற்திறன் மதிப்பீட்டு கட்டுப்பாடு

செயற்திறன் மதிப்பீட்;டுக் கட்டுப்பாட்டு முறை நிர்வாகக் கடமைகள் மீது உட்கட்டுப்பாட்டினை ஏற்படுத்தியிருக்கின்றது. வெளிக்கள அலுவலர்கள் வௌ;வேறுபட்ட திணைக்களங்களிற்குச் சென்று திணைக்களங்களிற்கென்று ஒதுக்கப்பட்ட விதிகளிற்கும், ஒழுங்கிற்கும் ஏற்ப செயற்படுகின்றனவா? என மேற்பார்வை செய்கின்றனர். சில நாடுகள் செயற்திறனை மதிப்பிடுவதற்கு விஞ்ஞான ரீதியான தரப்படுத்தலை மேற்கொள்கின்றன. ஆயினும் இது எல்லா நாடுகளிற்கும் பொருந்தும் ஒரு முறையுமல்ல அத்துடன் எல்லா வேலைகளிற்கும் இதை பயன்படுத்த முடியாது.

2. வெளிக்கட்டுப்பாடுகள்

வெளிக்கட்டுப்பாடு நிர்வாக இயந்திரத்திற்கு வெளியேயிருந்து மேற்கொள்ளப்படும் கட்டுப்பாடாகும். நிர்வாகப் பொறுப்பு அல்லது அதிகாரங்கள் ஒரு நாட்டின் அரசியல் யாப்பின் படி ஏற்படுத்திக் கொடுக்கப்படுகின்றது. சில நாடுகளில் அரசியல் யாப்பிற்கு பொதுநிர்வாகத்துறை பொறுப்புக் கூற வேண்டியதை விட அரசியல் கட்சிகளிற்கே அதிகம் பொறுப்பு கூற வேண்டியுள்ளது. இதனால் அரசியல் யாப்புக் கட்டுப்பாடு என்பதை விட கட்சிக் கட்டுப்பாடு அதிகமாக உள்ளது.

மக்கள் கட்டுப்பாடு :-

ஜனநாயக நாட்டில் மக்களே இறைமையாளர்களாவர். பொது மக்கள் கட்டுப்பாடு என்பது கூட நாட்டுக்கு நாடு வேறுபட்ட நிலையில்தான் மேற்கொள்ளப்படுகின்றது. நாட்டின் தலைவர், சில நாடுகளில் மக்கள் மூலம் நேரடியான தேர்தல் மூலமாகவும் சில நாடுகளில் மறைமுகமாகவும் தெரிவு செய்யப்படுகின்றார். சுவிற்சர்லாந்திலும், அமெரிக்காவின் சில மாநிலங்களிலும் நிர்வாக உத்தியோகத்தர்கள் மக்களால் தெரிவு செய்யப்படுகின்றார்கள். இந்நாடுகளில் மக்கள், நிர்வாக உத்தியோகத்தர்கள் தமது கடமைகளை முறையாகச் செய்யாதுவிடின் இவர்களை மீளத் திருப்பியழைத்தும் விடுகின்றனர். இது மக்கள் கொள்கையுருவாக்க செயன்முறை, சட்டவாக்க செயன்முறை என்பவற்றில் நேரடியாக பங்குபற்றுதலை எடுத்துக் காட்டுவதாக அமையும்.

சட்டத்துறைக் கட்டுப்பாடு:-

நவீன ஜனநாயக நாடுகளில் மக்கள் தமது பொது நிர்வாகவியல் மீதான கட்டுப்பாடுகளை தமது பிரதிநிதிகள் மூலம் மேற்கொள்கின்றார்கள். மக்கள் பிரதிநிதிகள் சட்டத்துறையாகத் தங்களை மாற்றிக்கொள்கின்றனர். சட்டசபையே பொதுக் கொள்கை உருவாக்கம், நிர்வாக ஒழுங்கமைப்பு, நிர்வாக ஒழுங்கமைப்பிற்கான மொத்த மனிதவளம், வேலைத் திட்டங்களை என்ன வழிமுறைகளில் கையாண்டு பூர்த்தி செய்வது, பொதுக் கொள்கையினை நிறைவேற்ற வேண்டிய நிதியை எவ்வாறு பெறுவது போன்ற அனைத்து விடயங்களையும் தீர்மானிக்கின்றது. மேலும் சட்டத்துறை பின்வரும் வழிகளில் பொது நிர்வாகத்தினை கட்டுப்படுத்துகின்றது.

நிதி ஒதுக்கீடு மீதான கட்டுப்பாடு:-

பொது நிர்வாகத்துறை மீது சட்ட சபை கொண்டுள்ள கட்டுப்பாடுகளில் மிகவும் அதிகமானது நிதி ஒதுக்கீடுகள் மீதான கட்டுப்பாடாகும். நிர்வாகத்துறை தனது செலவீனங்களிற்கான மேலதிக நிதி ஒதுக்கீடுகளை சட்டசபையில் கோரும் போது சட்டசபை பொது நிர்வாகத்துறை கோரும் நிதி ஒதுக்கீட்டினை நிராகரிக்கலாம் அல்லது குறைத்து ஒதுக்கலாம். இவ்வாறான நேரங்களில் இடம்பெறும் கலந்துரையாடல்களும், விவாதங்களும் அரசாங்கத்தின் செயற்பாடுகளை விமர்சனத்திற்கு உள்ளாக்குவதாகவே அமையும்.

கணக்குப் பரிசோதனை அறிக்கை:-

பாராளுமன்றத்தால் ஒப்புதலளிக்கப்பட்ட நிதிச் செலவீனங்கள் சரியான முறையில் செலவு செய்யப்படுகின்றதா என்பதை உத்தரவாதப்படுத்துவது சட்டத்துறையே ஆகும். இக்கட்டுப்பாடு பொதுச் செலவீனங்கள் மீது சட்டத்துறை ஏற்படுத்தும் கட்டுப்பாடாகும். இக்கடமைகள் கணக்கு பரிசோதனை அதிகாரியால் சட்டசபையின் பொதுக் கணக்கு குழுவிற்கு சமர்ப்பிக்கப்பட்டு பின்னர் இவை தொடர்பான விவாதங்கள் நடைபெறும்.

விவாதங்களும் கலந்துரையாடல்களும் :-

பாராளுமன்றக் கூட்டத் தொடரின் போது அரசின் தலைவரால் நிகழ்த்தப்படும் தொடக்க உரையின் மீதும், வரவு செலவுத் திட்ட உரையின் மீதும், சட்டத்துறையில் புதிய சட்டம் இயற்றப்படும் போதும், சட்டத் திருத்தம் மேற்கொள்ளப்படும் போதும் முழுமையான விவாதம் சட்டத்துறையில் நிகழ்கின்றது. இவ்விவாதங்கள் அரசாங்க கொள்கையினையும், திணைக்களங்களின்; கடமைகளினால் கிடைத்த வெற்றியினையும் முழுமையாகப் பரீட்சிப்பதாக இருக்கும்.

கேள்வி நேரம் :-

பொது நிர்வாகத்தின் மீதான சட்டத்துறைக் கட்டுப்பாட்டில் சட்டத்துறைப் பிரதிநிதிகளின் கேள்வி நேரம் என்பது மிகவும் சக்தி வாய்ந்த நிகழ்வாகும். பாராளுமன்ற முறைமையுள்ள நாடுகளில் கூட்டத் தொடர் ஆரம்பமாவதற்கு முன்னர் கேள்வி நேரம் என்பது ஒதுக்கப்பட்டுள்ளது. பணிக்குழுவினரின் தவறான செயற்பாட்டை அமைச்சுக்கூடாக கேள்வி நேரம் கட்டுப்படுத்திக் கொள்கின்றது. இதனால் சட்டசபையில் கேள்வி நேரம் என்பது உண்மையான பொது நிர்வாகவியல் கட்டுப்பாடாக அமைந்து விடுகின்றது.

நிர்வாகத்துறைக் கட்டுப்பாடு :-

பொது நிர்வாகம் மீதான நிர்வாகத்துறைக் கட்டுப்பாடு என்பது பொது நிர்வாகம் மீதான தலைமை நிர்வாகத்தின் கட்டுப்பாடு என்றே பொருள் கொள்ளப்படுகின்றது.

Share

Who's Online

We have 283 guests and no members online

+1 Me

Subscribe

Enter your email address:

Delivered by FeedBurner

 About Prof. Thanabalasingam Krishnamohan

Prof. Thanabalsingam Krishnamohan is a Professor in Political Science in Eastern University of Sri Lanka .

    

 
 
Invalid RSS link or you're not allowed to read this Picasa gallery or album.