Education is the Most Powerful Weapon Which You Can Use to Change the World. – Nelson Mandela-

நிர்வாகத்தில் தொழிலாளர் பங்கு வகித்தல்

நிர்வாகத்தில் தொழிலாளர் பங்கு வகித்தல்

நிர்வாகத்தில் தொழிலாளர் பங்கு வகித்தல் by Thanabalasingham Krishnamohan

இருபத்தியோராம் நூற்றாண்டில் எழுச்சியடையும் சீனாவின் கடல் வலிமை

இருபத்தியோராம் நூற்றாண்டில் எழுச்சியடையும் சீனாவின் கடல் வலிமை

இருபத்தியோராம் நூற்றாண்டில் எழுச்சியடையும் சீனாவின் கடல் வலிமை by Thanabalasingham Krishnamohan

Civil Society

Civil Society

Civil Society by Thanabalasingham Krishnamohan

இலங்கையின் அரசியல் நிர்வாக முறைமையில் பரவலாக்கம்

இலங்கையின் அரசியல் நிர்வாக முறைமையில் பரவலாக்கம்

இலங்கையின் அரசியல் நிர்வாக முறைமையில் பரவலாக்கம் by Thanabalasingham Krishnamohan

  • நிர்வாகத்தில் தொழிலாளர் பங்கு வகித்தல்

    நிர்வாகத்தில் தொழிலாளர் பங்கு வகித்தல்

    Tuesday, 15 October 2013 23:39
  • இருபத்தியோராம் நூற்றாண்டில் எழுச்சியடையும் சீனாவின் கடல் வலிமை

    இருபத்தியோராம் நூற்றாண்டில் எழுச்சியடையும் சீனாவின் கடல் வலிமை

    Tuesday, 15 October 2013 23:32
  • பிராந்திய ஒத்துழைப்புக்கான தெற்காசியச் சங்கம்

    பிராந்திய ஒத்துழைப்புக்கான தெற்காசியச் சங்கம்

    Tuesday, 15 October 2013 23:07
  • Civil Society

    Civil Society

    Tuesday, 15 October 2013 23:18
  • இலங்கையின் அரசியல் நிர்வாக முறைமையில் பரவலாக்கம்

    இலங்கையின் அரசியல் நிர்வாக முறைமையில் பரவலாக்கம்

    Tuesday, 15 October 2013 23:36
Political Science: Political Activity and Political Processes
Political Science: Political Activity and Political Processes
அரசியல் விஞ்ஞானம்: அரசியல் செயற்பாடும் அரசியல் செயல்முறையும்;> சேமமடு பதிப்பகம், கொழும்பு >2010> ISBN - NO: 978-955-1857-61-5 பொதுக் கொள்கை, பொதுநிர்வாகவியலின் இயல்பு> பொது முகாமைத்துவம்> மோதலை விளங் க்கிக்கொள்ளல், மோதலும் வன்முறையும்,மோதலும் அகிம்சையும்,மோதலைத் தடுத்தல், மோதலைத் தீர்த்தல், மோதல் முகாமைத்துவம், மூன்றாம் தரப்பு மத்தியஸ்தம், சமாதானக் கற்கை, சர்வதேச அரசியல், வெளிநாட்டுக் கொள்கை, யுத்தம், கூட்டுப்பாதுகாப்பு, அதிகாரச் சமநிலை, சர்வதேசச் சட்டம், ஆயுதக் கட்டுப்பாடும்,ஆயுதக்களைவும் போன்ற சர்வதேச அரசியலில் இடம்பெறும் சில முக்கியமான கோட்பாடுகள் பல இந் நூலில் சேர்க்கப்பட்டுள்ளன.
More...
Political Science: Study of State and Identification of State
Political Science: Study of State and Identification of State
அரசியல் விஞ்ஞானம்: அரசியல் பற்றிய கற்கையும் அரசை இனம்காணுதலும் ;> சேமமடு பதிப்பகம், கொழும்பு>2009. ISBN - NO: 978-955-1857-60-8 அரசியல் விஞ்ஞானத்தின் இயல்புகள், அரசியல் விஞ்ஞானத்தின் செயற்பரப்பெல்லை, அரசியல் விஞ்ஞானம் ஓர் விஞ்ஞானமா? அரசியல் விஞ்ஞானத்தினை கற்பதற்கான அணுகுமுறைகள், அரசியல் விஞ்ஞானமும், ஏனைய சமூகவிஞ்ஞானப்பாடங்களும், அரசு,தோற்றமும்,வளர்ச்சியும், அரசினை இனம் காணுவதற்கான அடிப்படைகள், அரசுடன் தொடர்புடைய எண்ணக்கருக்கள்,கோட்பாடுகள் போன்றன நடைமுறை விவகாரங்களுடனும்,அனுபவங்களுடனும் இணைத்து எழுதப்பட்டுள்ளது.
More...
Plantation Trade Union Movement in Sri Lanka
Plantation Trade Union Movement in Sri Lanka
இலங்கைப் பெருந்தோட்ட தொழிற்சங்க இயக்கங்கள்;>குமரன் புத்தக இல்லம் கொழும்பு>2008> ISBN - NO: 978-955-659-124-9 கண்காணிமார்களின் ஆசை வார்த்தைகளை நம்பி இலங்கை வந்து மத்தியமலை பிரதேசங்களில் வேலைக்காக குடியமர்த்தப்பட்ட தொழிலாளர்கள் வேதனம்,வேலைநாட்கள் தொடர்பான பிரச்சனைகளை எதிர்நோக்கினர். இதனை எதிர்த்து பெருந்தோட்ட தொழிற் சங்கங்கள் தொழிலாளர்களின் சமூகப் பொருளாதார உரிமைகளுக்காக போராட்டங்களை நடாத்தினர். இவ்வகையில் பெருந்தோட்ட தொழிற்சங்கத் தலைவர்களின் சமூகப் பொருளாதார பண்புகளையும், 1970 ஆம் 1977 ஆம் ஆண்டுகளில் பதவியேற்ற அரசாங்கங்கள் பின்பற்றிய கொள்கைகள் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் மீது ஏற்படுத்திய தாக்கம்,தொழிற்சங்கங்கள் தொழிலாளர் நலன்களுக்காக நடாத்திய போராட்டங்கள் போன்றவற்றையும் தொழிலாளர்களுக்கும், தோட்டமுகாமைத்துவத்திற்கு இடையிலும், தொழிலாளர்களுக்கு இடையில் ஏற்படும் தகராறுகள் ,பிரச்சினைகள் தொடர்பாக தொழிற்சங்கங்கள் எடுக்கும் நிலைப்பாடுகள் தொடர்பாக இந் நூல் ஆய்வு செய்கின்றது.
More...
பொது நிர்வாகத்தில்‌ மனிதவள முகாமைத்துவம்‌: முன்னணி நாடுகளின்‌ சிவில்‌ சேவை மாதிரிகள்‌
பொது நிர்வாகத்தில்‌ மனிதவள முகாமைத்துவம்‌: முன்னணி நாடுகளின்‌ சிவில்‌ சேவை மாதிரிகள்‌
சர்வதேச ஆய்வுப்பரப்பில்‌ அரசறிவியல்‌, நிர்வாகவியல்‌ போன்ற துறைகள்‌ மிகுந்த அவதானத்தையும்‌, முக்கியத்துவத்தையும்‌ பெறுகின்றன. இவ்வகையில்‌ "பொது நிர்வாகத்தில்‌ மனிதவள முகாமைத்துவம்‌: முன்னணி நாடுகளின்‌ சிவில்‌ சேவை மாதிரிகள்‌" என்ற புதுக்கிய இந்நூல்‌ பல்கலைக்கழக மாணவர்களுக்கும்‌, புலமைத்துவம்‌ சார்‌ சமூகத்தினர்க்கும்‌ பயனுடையதாகும்‌.

சிவில்‌ சேவை தொடர்பான பொதுவான அறிமுகத்துடன்‌ சர்வதேச நாடுகளின் குறிப்பாக பிரித்தானியா, பிரான்ஸ்‌, ஐக்கிய அமெரிக்கா, இந்தியா, இலங்கை முதலான நாடுகளின்‌ சிவில்‌ சேவைக்‌ கட்டமைப்புகளை முன்னிலைப்படுத்தி ஒப்பியல்‌ நோக்கில்‌ இந்நூல்‌ எழுதப்பட்டிருப்பது சிறப்பிற்குரியதாகும்‌.
More...
Comparative Politics
Comparative Politics
ஒப்பியல் பொதுநிர்வகம்: தெரிவு செய்யப்பட்ட நாடுகளின் சிவில் நிர்வாகமுறைமை > குமரன் புத்தக இல்லம் கொழும்பு >2007, ISBN - NO: 978-955-659-091-9

பிரித்தானிய ,பிரான்ஸ் ,அமெரிக்க,இந்தியா ,இலங்கை போன்ற ஐந்து நாடுகளின் சிவில் நிர்வாக சேவைகளின் வரலாற்று அபிவிருத்தியையும், கோட்பாட்டு நடைமுறை அம்சங்களையும் விமர்சனரீதியாக இந் நூல் அணுகுகின்றது.சிக்கலான விடயங்களையும்.பதங்களையும் எளிமையாகவும்,தெளிவாகவும்,ஆழமாகவும் இந் நூல் விளக்குகின்றது.

More...
மோதல் தீர்வுக் கற்கைகள்: ஒர் அறிமுகம்
மோதல் தீர்வுக் கற்கைகள்: ஒர் அறிமுகம்
மோதல் தீர்வுக் கற்கை நெறி தொடர்பான ஆய்வுகள் மனித மோதலின் தன்மை மற்றும் இயக்கவியல் ஆகியவற்றைப் புரிந்துகொள்ளுதல், ஆரோக்கியமான உறவுகளை வளர்த்தல், வன்முறையைத் தடுக்கும் வழிகளிகள் மற்றும் மோதலைக் கையாள்வதற்குப் பொருத்தமான மாற்று வழிகளைத் தேடுதல் என்பவைகளில் கவனம் செலுத்துகின்றது. மோதல், தகராறு, வன்முறை, யுத்தம் அதிகாரம், கலாசாரம். நீதி, சமாதானம், தகவல் தொடர்பு, முகாமைத்துவம், மோதலைத் தீர்த்தல், மோதல் நிலைமாற்றம் போன்ற தலைப்புகளுடன் தொடர்புபடும் வகையில் மோதல் தீர்வுக் கற்கை நெறி பகுப்பாய்வு செய்யப்படுகின்றது. தனிப்பட்ட, தேசிய, சர்வதேசிய மோதல் சூழ்நிலைகளுக்குப் பதிலளிக்கும் வகையிலும், மோதலை ஆக்கபூர்வமாகப் புரிந்துகொள்ளவும், தொடர்பு கொள்ளவும் மோதல் தீர்வுக் கற்கை நெறி மாணவர்களைத் தயார்படுத்துகிறது. இவ்வகையில் தமிழ்மொழி மூலமான பல்கலைக்கழக மாணவர்களுக்கும், அரசறிவியலை உயர்தரத்தில் கற்கும் மாணவர்களுக்கும், பொதுவான விடயங்களைத் தேடி வாசிக்கும் வாசகர்களுக்கும் பயன்தரும் வகையில் மோதல் தீர்வுக் கற்கைகள்: ஒர் அறிமுகம் என்னும் தலைப்பில் எழுதப்பட்டுள்ள இந்நூல் வெளிவருகின்றது.
More...
Triangular Power Straggle in Indian Ocean and Ethnic Conflict in Sri Lanka
Triangular Power Straggle in Indian Ocean and Ethnic Conflict in Sri Lanka
இந்துசமுத்திரப் பிராந்தியத்தில் முக்கோண அதிகாரப் போட்டியும் இலங்கையின் இனமோதலும் குமரன் புத்தக இல்லம், 2012 ISBN 978-955-659-343-3 இந்துசமுத்திரப் பிராந்தியத்தில் தனக்கிருக்கும் எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டு இலங்கையில் அதிக முதலீடுகளை சீனா செய்து வருகின்றது. இதே அக்கறையுடன் ஏனைய உலக நாடுகளும் இலங்கையினைத் தமது தந்திரோபாயப் பங்காளியாக மாற்றுவதற்கு முயற்சிக்கின்றன.பூகோள வல்லரசுகளும்,பிராந்திய வல்லரசுகளும் நடத்தும் அதிகாரப் போராட்டத்தினால் ஏற்படக்கூடிய பதிப்புக்களிலிருந்து இலங்கை தன்னைத்தானே பாதுகாத்துக் கொள்ள முடியாது தடுமாறுகின்றது.
More...

Around the World

  • Deadly clashes erupted overnight between the Taliban and Pakistani forces across the Afghanistan border.

    Read more...
  • A global roundup of some of last week’s events.

    Read more...
  • US envoy Steve Witkoff and members of President Donald Trump’s family spoke to nearly half a million people in Tel Aviv.

    Read more...
  • Soldiers from a Madagascar army unit have declared support for the youth-led anti-government protests, urging police to

    Read more...
  • The campaign aims to protect the children from the drug-resistant disease spreading across South Asia.

    Read more...
  • The cost to rebuild Gaza will be far greater than the UN, European Union and World Bank estimate of $50bn

    Read more...
  • Soldiers join mass antigovernment protests, urging no violence, as unrest over shortages and political divisions grows.

    Read more...
  • Afghan officials say 58 Pakistani soldiers killed while Pakistan says 200 Taliban and affiliated 'terrorists' dead.

    Read more...
  • Beijing says it will not back down in the face of threats, urging the US to resolve differences through negotiations.

    Read more...
  • US national security expert Kori Schake warns that President Trump is asking the US military to fight his culture wars.

    Read more...
1 1 1 1 1 1 1 1 1 1 Rating 0.00 (0 Votes)

( தினக்குரல் , புதிய பண்பாடு இதழில் 2013.05.18, 2013.05.19 ஆகிய திகதிகளில் பிரசுரிக்கப்பட்டது )

clip_image002 தென்கிழக்காசியா மற்றும் கிழக்காசியவிலுள்ள தனது அயல் நாடுகளுடன் சச்சரவுகளில் சீனா ஈடுபட்டுள்ளது. குறிப்பாக யப்பான்,பிலிப்பையின்ஸ்,வியட்நாம் போன்ற நாடுகளுடன் சீனாவிற்கு இருக்கும் தகராறு பிராந்தியத்தில் பெரும் பதட்டத்தினை ஏற்படுத்தக் கூடியதாகும். இந்நிலையில் லடாக் பிரதேச அத்துமீறலால் சீனாவிற்கு ஏற்படக்கூடிய புதிய நெருக்கடியை மீள்சிந்தனைக்குட்படுத்தி சீனா லடாக் (Ladakh) பிரதேசத்திலிருந்து தனது மக்கள் விடுதலை இராணுவத்தை மீளழைக்க முடிவுசெய்திக்கின்றது. 2013 ஆம் ஆண்டு சித்திரை மாதம் 15 ஆம் திகதி ஜம்மு காஸ்மீர் மாநிலத்தின் கிழக்குத் திசையிலுள்ள எல்லையூடாக லடாக் பிரதேசத்தின் டெப்சாங் பள்ளத்தாக்கிற்குள் (Depsang Valley ) பத்தொன்பது கிலோ மீற்றர் தூரம் முன்னேறியிருந்த சீனாவின் மக்கள் விடுதலை இராணுவம், இந்திய இராணுவத்துடன் நடாத்திய பேச்சுவார்த்தையினைத் தொடர்ந்து 2013 ஆம் ஆண்டு வைகாசி மாதம் 5ஆம் திகதி தான் கைப்பற்றியிருந்த இந்திய நிலபரப்பிலிருந்து பின்வாங்கி தான் நிலைகொள்ள வேண்டிய இடங்களுக்குச் சென்றுள்ளது.

விமர்சனங்கள்

சீனாவின் மக்கள் விடுதலை இராணுவம் இந்திய நிலபரப்பிலிருந்து பின்வாங்கியதில் எவ்வித ஆச்சரியமும் இல்லை. இருதரப்பும் அறிவுபூர்வமாக சிந்தித்து இருதரப்புத் தகராறுகளையும் தீர்த்துள்ளனர்.சீனாவில் ஏற்பட்டுள்ள தலைமைத்துவ மாற்றத்துடன் புதிய அரசியல் திருப்புமுனை ஏற்பட்டுள்ளது.சீனாவின் தலைமைத்துவம் இந்தியாவுடன் உறுதியான உறவினைப் பேணக் கூடியவகையிலும், சூழலுக்கு தகுந்த வகையிலும்; தனது கொள்கைகளை மாற்றியமைக்கத் தயாராகவுள்ளது என்ற செய்தியை வழங்கியுள்ளது.அயலவர்களுடன் தகராறுகளில் ஈடுபடுகின்ற கொள்கைகளை முடிந்தவரை தவிர்த்தல் என்பதே சீனாவின் பெரும் தந்திரோபாயமாகும் என விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

சமகால சர்வதேச உறவுகள் நிலையத்தின் ஆய்வாளர் பு சைகியோங் ( Fu Xiaoqiang ) சீனாவும்,இந்தியாவும் எல்லைத் தகராறுகளைத் தீர்ப்பதற்கான திறன்வாய்ந்தவர்கள் என்பதை இது எடுத்துக்காட்டியுள்ளதுடன்,நீண்டகாலமாகத் தீர்க்க முடியாதிருந்த சர்ச்சைக்குத் தீர்வு கிட்டியுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

பீக்கிங் பல்கலைக்கழக தென்னாசிய பிராந்தியம் தொடர்பான ஆராட்சியாளரும்,ஆயுதப்பரிகரணம் மற்றும் ஆயுதக்கட்டுப்பாட்டு நிறுவன இயக்குனருமாகிய ஹான் கூ ( Han Hua) சீனக்கம்யூனிசக்கட்சியின் உத்தியோக பூர்வப்பத்திரிகையாகிய குளோபல் ரைம்ஸ் ( Global Times) பத்திரிகைக்கு வழங்கிய செவ்வியில் 'இந்தியாவுடனான உறவுகள் தொடர்பாக சீனா எதிர்காலத்தில் எடுக்கவேண்டிய தீர்மானங்கள் எத்தகையதாக இருக்க வேண்டும் என்பதை ஏனைய நாடுகளுடன் சீனாவிற்கு தற்போதிருக்கும் பிரதேசத்தகராறுகள் மூலம் உறுதிப்படுத்த வேண்டும்' எனக்கூறியுள்ளார்.

இந்திய-சீன உறவு

இந்திய சீன எல்லைப்பிரதேசத்தில் ஏற்பட்ட நெருக்கடி நிலை இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மன் குர்சிட் ( Salman Khurshid) சீனாவிற்கு மேற்கொள்ளவிருந்த உத்தியோக பூர்வ விஜயத்தில் பாதிப்பினை ஏற்படுத்தி விடலாம் என்றதொரு அச்சம் நிலவியிருந்தாலும், இவருடைய சீன விஜயம் திட்டமிடப்பட்டபடி அமையும் என அவருடைய அமைச்சு செயலகம் அறிவித்திருந்தது.

இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மன் குர்சிட் சீனாவிற்கு மேற்கொள்ளும் விஜயம் தொடர்பாக இந்தியாவிற்குள் பல கருத்துப்பரிமாறல்கள் நடைபெற்றிருந்தன.குறிப்பாக சீனாவிற்கும் இந்தியாவிற்கும் இடையில் எல்லைத்தகராறு இருப்பதால் இந்திய வெளிவிவகார அமைச்சர் தனது திட்டமிட்ட சீன விஜயத்தினை ரத்து செய்ய வேண்டும் என எதிர்கட்சிகள் மற்றும் வெகுஜனத் தொடர்புசாதனங்கள் கோரிக்கை விடுத்திருந்தன.

ஆயினும் இரு தரப்பு உறவினைப் பலப்படுத்துவதன் முக்கியத்துவத்தினையும், சீனாவுடன் மிகவும் நெருக்கமாக இருந்து செயல்பட வேண்டியதன் அவசியத்தினை இந்தியா உணர்ந்து செயற்படுவதையும், இதன்மூலம் உணர்ச்சி பூர்வமான விடயங்களை சிறப்பாகக் கையாளக்கூடிய உயர்ந்த ஞானம் கொண்ட நாடாக இந்தியா உள்ளது என்பதையும் வரலாற்றில் பதிவு செய்யக் கிடைத்திருக்கும் பிறிதொரு சந்தர்ப்பமாக இந்திய வெளிவிவகார அமைச்சரின் விஜயம் இராஜதந்திரிகளால் நோக்கப்பட்டது.

இந்திய வெளியுறவு அமைச்சர் சல்மன் குர்சிட் மற்றும் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி ( Wang Yi) ஆகிய இருவருக்கும் இடையில் இரண்டு மணித்தியாலங்கள் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் சீன மக்கள் விடுதலை இராணுவம் அண்மையில் டெப்சங் பள்ளத்தாக்கில் மேற்கொண்ட படையெடுப்பு தொடர்பாக கலந்துரையாடப்பட்டிருந்தது.அத்துடன் சீனத் தலைவர் லி கிஹயங் (Li Keqiang) வைகாசிமாதம் 20ஆம் திகதி இந்தியாவிற்கு மேற்கொள்ளவிருக்கும் உத்தியோகபூர்வ விஜயம் தொடர்பாகவும், இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் இவ்வருட இறுதியில் சீனாவிற்கு மேற்கொள்ளவுள்ள விஜயம் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது. இருநாட்டுத்தலைவர்களும் பரஸ்பரம் மேற்கொள்ளவிருக்கும் விஜயத்தின் மூலம் இருநாட்டிற்குமிடையில் ஏற்பட்டுள்ள பதட்டம் நீங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

சீனா சென்றடைந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் லடாக் பிரதேச அத்துமீறல் தொடர்பாக கருத்துத் தெரிவிக்கையில் 'அண்மையில் நிகழ்ந்தது போன்ற பகைமையுணர்வுடனான படையெடுப்பு எதிர்காலத்தில் நடைபெறக்கூடாது. இருநாட்டு விசேட பிரதிநிதிகள் அடுத்துவருகின்ற இருமாதங்களில் சந்தித்து எல்லைத்தகராறுகள் தொடர்பாக விரிவாக கலந்துரையாடுவார்கள். இதன் போது இருதரப்பும் தமது ஆலோசனைகளை முன்வைக்கலாம். அண்மையில் நிகழ்ந்த படையெடுப்புத் தொடர்பாக இந்தியா எவ்வித பிரேதப்பரிசோதனையினையும் செய்ய விரும்பவில்லை. படையெடுப்பிற்குள்ளான பிரதேசத்தில் உருவாக்கப்பட்ட தீர்விற்கான பொறிமுறை தொடர்பில் இந்தியா திருப்தியாகவுள்ளது' எனத் தெரிவித்துள்ளார்.

தென்சீனக்கடல் பிரதேசத்திலும்,கிழக்குச் சீனக் கடல் பிரதேசத்திலுமுள்ள அயல்நாடுகளுடன் சீனாவிற்குப் பிரதேசத்தகராறு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக யப்பானுடன் தற்போது டைஒயூ மற்றும் சென்காகூ தீவுகள் ( Diaoyu and Senkaku Islands) தொடர்பாக சீனாவிற்கு தகராறு ஏற்பட்டுள்ளது.இதற்காகத் தமது ஆக்கிரமிப்புக் கடல் படையினை இருதரப்பும் தொடர்புடைய இடங்களுக்கு அனுப்பியுள்ளன. இவ்வாறானதொரு தகராற்றில் தொடர்புபடுவதற்கு சீனாவிற்கு எவ்வித தேவையும் சூழலும் இதுவரை ஏற்படவில்லை. இந்நிலையில் 2000 ஆம் ஆண்டு தொடக்கம் இந்தியாவுடன் மிகவும் இறுக்கமான நட்புறவினை சீனா வளர்க்க வேண்டிய சர்வதேசத் தேவை ஏற்பட்டுள்ளது.

ஆயினும் இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான பிரதேச எல்லைத்தகராற்றினால் 2006ஆம் ஆண்டிற்கும் 2009ஆம் ஆண்டிற்கும் இடையில் இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான இருதரப்பு உறவு பெரும் பதட்டத்திற்குள்ளாகியது. ஆனால் அதிகார மையாமாக ஆசியாவினை உருவாக்குதல் என்ற ஐக்கிய அமெரிக்காவின் கொள்கை மற்றும் சீனாவிற்கும் அதன் அயல்நாடுகளுக்கும் ஏற்பட்டுள்ள தகராறுகளினால் இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான இருதரப்பு உறவில் 2010ஆம் ஆண்டு தொடக்கம் பெரும் முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது.

இந்நிலையில் குர்சிட் மேற்கொண்ட சீன விஜயம் சீனாவிற்கும் இந்தியாவிற்குமிடையில் பொதுவானதொரு இலக்கு நோக்கி இருநாடுகளும் பயணிக்கவும்,தந்திரோபாய கூட்டுறவு பங்காளர் நிலையினை மேலும் முன்னோக்கி நகர்த்தவும் உதவும் என எதிர்பார்க்கப்பட்டது. மேலும் இரு நாடுகளுக்கும் இடையிலான எல்லைத்தகராறுகளை தீர்ப்பதற்கான பொறிமுறையினைக் கண்டுபிடிப்பதற்கும் உதவும் எனவும் நம்பப்படுகிறது. எல்லைத் தகராறுகளைத் தீர்ப்பதற்கு நட்புறவு ஆலோசனைகளை இருநாடுகளும் தற்போது பயன்படுத்துகின்றன.எல்லைப் பிரதேசங்களில் உறுதியையும்,சமாதானத்தினையும் இருநாடுகளும் பேணி இருதரப்பும் ஏற்றுக் கொள்ளக்கூடிய நியாயமான தீர்வினை பெற்றுக்கொள்ள இருநாடுகளும் முயற்சிக்க வேண்டும் என்பதே சமாதானத்தை நேசிப்பவர்களின் எதிர்பார்ப்பாகும்.

இராஜதந்திரப் பாடங்கள்

சீனாவுடனான் தகராற்றின் மூலம் இந்தியா பின்வரும் இராஜதந்திரப் பாடங்களை கற்றுக் கொண்டுள்ளது எனக் கூறமுடியும்.

ஒன்று இராஜதந்திர அழுத்தத்தினை எதிர்காலத்தில் இந்தியா மீது சீனா எவ்வாறு பிரயோகிக்கும் என்பதை விளங்கிக்கொள்ள லடாக் ஆக்கிரமிப்பு போதுமானதாகும். கிழக்குச் சீனக்கடல் மற்றும் தென்சீனக்கடல் பிராந்தியத்திலுள்ள அயல்நாடுகள் மீது செல்வாக்குச் செலுத்தக் கூடிய உறுதிமிக்கதொரு நாடாக சீனா வளர்ந்து வருகின்றது. இந்த உறுதிநிலையினை இந்தியாவிற்கு எதிராகவும் தன்னால் நிரூபித்துக்காட்ட முடியும் என்பதை லடாக் ஆக்கிரமிப்பு மூலம் சீனா உறுதிப்படுத்தியுள்ளது.

இரண்டாவதாக பிராந்திய அரசியல் சூழலை கட்டுப்படுத்தி எவ்வாறு தனக்குச் சாதகமாக்கி வெற்றிகொள்ள முடியும் என்பதை சீனா கற்றுக்கொண்டுள்ளது. பிரச்சினையொன்றை தானே உருவாக்கி பொருத்தமான நேரத்தில் அதனை தீர்க்கின்ற இராஜதந்திரத்திறன்; தனக்கு இருப்பதை நிரூபித்துள்ளது. இந்தியாவினை தற்காப்பு நிலைக்குச் செல்லவைத்து எதிர்விளைவு எவ்வாறு இருக்கும் என்பதை சீனா வெற்றிகரமாகப் பரீட்சித்துப் பார்த்துள்ளது.

மூன்றாவதாக முன்னேற்பாட்டுடன் கூடிய அபாயமிக்க வீரதீரச்செயல்களை செய்யும் மனநிலையில் சீனா உள்ளதுடன், இதற்காக எவ்வித அச்சமும் கொள்ளாததொரு நாடாக தன்னை வெளிக்காட்டியுள்ளது. மேலும் தமது விடங்களில் சீனா எதிர்காலத்தில் எவ்வாறு செயற்படும் என்று ஊகித்து கொள்வதில் நேரத்தை செலவழித்துக் கொண்டிருக்கின்ற நிலையில் தனது எதிரிகளை தொடர்ந்து வைத்திருக்கும் இராஜதந்திரத்தினை சீனா கையாண்டு வருகின்றது. இதற்காக தென்சீனக்கடல் மற்றும் கிழக்கு சீனக்கடல் பிராந்தியத்தில் சீனாவின் கடல்படை ஆக்கிரமிப்பு நோக்குடன் கண்காணிப்புப்பணியில் ஈடுபட்டுவருகின்றது. அதேநேரம் இந்தியாவிற்கு உறுதியானதும், நேர்மையானதுமான கௌரவத்தினை தான் வழங்குவதாக காட்டிக்கொள்வதுடன்,சில சந்தர்பங்களில் இவ்வாறு கௌரவம் வழங்கும் நிலையிலிருந்து சீனா விலகிவிடலாம் எனறு இந்தியா அச்சம் கொள்ளக்கூடிய சமிச்சையினையும் வழங்குகின்றது.

நான்காவதாக பகுத்தறிவிற்குட்படாது சீனா செயற்படுவதாகக் காட்டிக்கொள்வதன் மூலம் தனது எதிரிநாடுகள் சீனாவினைப் புரிந்துகொள்வதில் போரட வைக்கின்ற தந்திரோபாயத்தினைக் கையாளுகின்றது.சீனத்தலைவர் லடாக் பிரதேசத்திற்கு விஜயம் மேற்கொண்டு சில வாரங்களுக்குப் பின்னர் சீன மக்கள் விடுதலை இராணுவம் அத்துமீறி லடாக் பிரதேசத்திற்குள் நுழைந்தது. இது சீனாவின் பகுத்தறிவிற்கு எதிரான செயற்பாடாக இருந்ததுடன், பின்னர் ஆக்கிரமித்த பிரதேசத்திலிருந்து சீன மக்கள் விடுதலை இராணுவம் வெளியேறியிருந்தன. இது உண்மையில் சீனா கையாண்ட தந்திரோபாய செயற்பாடாகும். சீனத் தலைவர் இந்தியாவிற்கு மேற்கொள்ளவிருக்கும் விஜயத்தின் போது எல்லைத்தகராறுகள் தொடர்பாக புதிய பிரேரணைகளை சீனா முன்வைப்பதற்கான முன்னேற்பாடாகவே இச்சம்பவம் நோக்கப்படுகின்றது. உண்மையில் எல்லைத்தகராறு தொடர்பாக சீனா யாருடனும் சமரசம் செய்யத் தயாராக இல்லை என்பதையே சீன இராஜதந்திரிகள் வெளிக்காட்டியுள்ளனர்.

பிறிக் ( BRIC ) அமைப்பு

பிறேசில்,ரஸ்சியா,இந்தியா,சீனா ஆகிய நாடுகள் உருவாக்கிய பிறிக் (BRIC) என அழைக்கப்படும் அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளின் அமைப்பாகும். இது 2009 ஆம் ஆண்டு ஆனிமாதம் ஆரம்பிக்கப்பட்டதாகும். பிறிக் நாடுகளில் வளர்ச்சியடையும் சனத்தொகை, பொருளாதாரம் ஆகியவற்றிற்கு ஈடுகொடுக்கும் வகையில் இருபத்தியொராம் நூற்றாண்டில் உலகத்தில் பெரும் பொருளாதார வளம்மிக்க நாடுகளாக இவைகள் எழுர்ச்சியடையும்.நான்கு பிறிக் நாடுகளின் சனத்தொகை 2.8 பில்லியனாகும். இது உலக மொத்த சனத்தொகையில் 40 சதவீதமாகும்.உலகமொத்த தேசியஉற்பத்தியில் 25சதவீதத்திற்கு மேற்பட்ட பொருளாதார உற்பத்தியை இந்நாடுகள் கொண்டுள்ளன.

2003 ஆம் ஆண்டு கோல்மன் சாக்ஸ் (Goldman Sachs) தனது ஆய்வில் சீனாவும் இந்தியாவும் 2050 ஆம் ஆண்டில் உலக பொருளாதாரத்தில் முறையே முதலாம் மற்றும் மூன்றாம் இடங்களைப் பெற்றுக்கொள்ளும் என எதிர்வு கூறியிருந்தார். 2000ஆம் ஆண்டிற்கும் 2008 ஆம் ஆண்டிற்கும் இடைப்பட்ட காலத்தில் பிறிக் நாடுகள் உலகப்பொருளாதாரத்திற்கு 16 இருந்து 22 சதவீத பங்களிப்பினை வழங்கியிருந்ததுடன் பூகோளப் பொருளாதாரத்தின்; வளர்ச்சிக்கு 30 சதவீத பங்களிப்பினைச் செய்திருந்தன. இது இந்தியாவிலும் சீனாவிலும் பாரிய மத்தியதரவர்க்கம் ஒன்றை உருவாக்கி பாரிய நுகர்வோர் படையொன்றினை உருவாக்கியுள்ளது.

எனவே பூகோளவிடயங்களில் இருநாடுகளும் ஆழமாகவும், கூட்டுறவுடனும் செயற்பட்டு பொருளாதார விடயங்களுக்கு முன்னுரிமை கொடுத்து அபிவிருத்தியை உறுதியாக்கவே விரும்புகின்றன. இதனால்; எதிர்காலத்தில் யுத்தத்தில் ஈடுபட இருநாடுகளும் முயற்சிக்க மாட்டாது என நம்பமுடியும்.

சமகாலத்தில் பெரும் வல்லரசுகளாக வளர்ந்து வரும் சீனாவும் இந்தியாவும் மேற்குத்தேச நாடுகளின் அழுத்தங்களுக்குள்ளாகியுள்ளன. சீனாவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான உறவினை சகிக்கமுடியாத சில மேற்குத் தேச விமர்சகர்கள் இதனை ரக்கனுக்கும் யானைக்கும் இடையிலான போட்டியாக வர்ணிக்கின்றனர். இரு தரப்பும் எதிர்கொள்கின்ற பெரும் சர்ச்சைக்குரிய விடயங்கள் எவ்வாறு நோக்கப்படுகின்றன,எவ்வாறு கையாளப்படுகின்றன என்பதே மேற்குத் தேச விமர்சகர்களின் சகிப்பற்ற நிலைக்குக் காரணமாகும்.

இந்தியாவும் சீனாவும் வரலாற்றிலிருந்து பல பாடங்களைக் கற்றுக்கொண்டுள்ளன.எனவே எதிர்காலத்தில் பரஸ்பரம் தங்களுக்கிடையிலான அரசியல் மற்றும் பாதுகாப்பு தொடர்பான நம்பிக்கையினைக் கட்டியெழுப்பவும், தங்களுக்கிடையிலான வேறுபாட்டினைக் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கவும், இருதரப்பும் தமக்கிடையில் உறுதியான பொருளாதாரத்தினை கட்டியெழுப்பவும் முயற்சிக்கும் என்பதே யதார்த்தமாகும்.

Share

Who's Online

We have 46 guests and no members online

+1 Me

Subscribe

Enter your email address:

Delivered by FeedBurner

 About Prof. Thanabalasingam Krishnamohan

Prof. Thanabalsingam Krishnamohan is a Professor in Political Science in Eastern University of Sri Lanka .

    

 
 
Invalid RSS link or you're not allowed to read this Picasa gallery or album.