Education is the Most Powerful Weapon Which You Can Use to Change the World. – Nelson Mandela-

புதிய சர்வதேச ஒழுங்கின் பின்னரான பிராந்தியத் தலையீடுகள் - ஓர் கோட்பாட்டு விளக்கம்

புதிய சர்வதேச ஒழுங்கின் பின்னரான பிராந்தியத் தலையீடுகள் - ஓர் கோட்பாட்டு விளக்கம்

புதிய சர்வதேச ஒழுங்கின் பின்னரான பிராந்தியத் தலையீடுகள் - ஓர் கோட்பாட்டு விளக்கம் by...

இலங்கையின் வன்னிப் பிரதேச சட்டசபை பிரதிநிதித்துவம் சில வரலாற்றுப் பதிவுகள்: 1931-1977

இலங்கையின் வன்னிப் பிரதேச சட்டசபை பிரதிநிதித்துவம் சில வரலாற்றுப் பதிவுகள்: 1931-1977

இலங்கையின் வன்னிப் பிரதேச சட்டசபை பிரதிநிதித்துவம் சில வரலாற்றுப் பதிவுகள்: 1931-1977 by...

Conflict Management and Resolution of Conflict : Objective and Characteristics of Third Party Mediation

Conflict Management and Resolution of Conflict : Objective and Characteristics of Third Party Mediation

Conflict Management and Resolution of Conflict : Objective and Characteristics of Third Party...

இருபத்தியோராம் நூற்றாண்டில் எழுச்சியடையும் சீனாவின் கடல் வலிமை

இருபத்தியோராம் நூற்றாண்டில் எழுச்சியடையும் சீனாவின் கடல் வலிமை

இருபத்தியோராம் நூற்றாண்டில் எழுச்சியடையும் சீனாவின் கடல் வலிமை by Thanabalasingham Krishnamohan

The role played by India in Sri Lankas’ Ethnic Conflict and Resolution:India’s stand in after 1997

The role played by India in Sri Lankas’ Ethnic Conflict and Resolution:India’s stand in after 1997

The role played by India in Sri Lankas’ Ethnic Conflict and Resolution:India’s stand in...

  • புதிய சர்வதேச ஒழுங்கின் பின்னரான பிராந்தியத் தலையீடுகள் - ஓர் கோட்பாட்டு விளக்கம்

    புதிய சர்வதேச ஒழுங்கின் பின்னரான பிராந்தியத் தலையீடுகள் - ஓர் கோட்பாட்டு விளக்கம்

    Tuesday, 15 October 2013 23:43
  • இலங்கையின் வன்னிப் பிரதேச சட்டசபை பிரதிநிதித்துவம் சில வரலாற்றுப் பதிவுகள்: 1931-1977

    இலங்கையின் வன்னிப் பிரதேச சட்டசபை பிரதிநிதித்துவம் சில வரலாற்றுப் பதிவுகள்: 1931-1977

    Sunday, 28 December 2014 17:17
  • Conflict Management and Resolution of Conflict : Objective and Characteristics of Third Party Mediation

    Conflict Management and Resolution of Conflict : Objective and Characteristics of Third Party...

    Tuesday, 15 October 2013 23:29
  • இருபத்தியோராம் நூற்றாண்டில் எழுச்சியடையும் சீனாவின் கடல் வலிமை

    இருபத்தியோராம் நூற்றாண்டில் எழுச்சியடையும் சீனாவின் கடல் வலிமை

    Tuesday, 15 October 2013 23:32
  • The role played by India in Sri Lankas’ Ethnic Conflict and Resolution:India’s stand in after 1997

    The role played by India in Sri Lankas’ Ethnic Conflict and Resolution:India’s stand in after 1997

    Tuesday, 15 October 2013 23:20
Political Science: Study of State and Identification of State
Political Science: Study of State and Identification of State
அரசியல் விஞ்ஞானம்: அரசியல் பற்றிய கற்கையும் அரசை இனம்காணுதலும் ;> சேமமடு பதிப்பகம், கொழும்பு>2009. ISBN - NO: 978-955-1857-60-8 அரசியல் விஞ்ஞானத்தின் இயல்புகள், அரசியல் விஞ்ஞானத்தின் செயற்பரப்பெல்லை, அரசியல் விஞ்ஞானம் ஓர் விஞ்ஞானமா? அரசியல் விஞ்ஞானத்தினை கற்பதற்கான அணுகுமுறைகள், அரசியல் விஞ்ஞானமும், ஏனைய சமூகவிஞ்ஞானப்பாடங்களும், அரசு,தோற்றமும்,வளர்ச்சியும், அரசினை இனம் காணுவதற்கான அடிப்படைகள், அரசுடன் தொடர்புடைய எண்ணக்கருக்கள்,கோட்பாடுகள் போன்றன நடைமுறை விவகாரங்களுடனும்,அனுபவங்களுடனும் இணைத்து எழுதப்பட்டுள்ளது.
More...
பொது நிர்வாகத்தில்‌ மனிதவள முகாமைத்துவம்‌: முன்னணி நாடுகளின்‌ சிவில்‌ சேவை மாதிரிகள்‌
பொது நிர்வாகத்தில்‌ மனிதவள முகாமைத்துவம்‌: முன்னணி நாடுகளின்‌ சிவில்‌ சேவை மாதிரிகள்‌
சர்வதேச ஆய்வுப்பரப்பில்‌ அரசறிவியல்‌, நிர்வாகவியல்‌ போன்ற துறைகள்‌ மிகுந்த அவதானத்தையும்‌, முக்கியத்துவத்தையும்‌ பெறுகின்றன. இவ்வகையில்‌ "பொது நிர்வாகத்தில்‌ மனிதவள முகாமைத்துவம்‌: முன்னணி நாடுகளின்‌ சிவில்‌ சேவை மாதிரிகள்‌" என்ற புதுக்கிய இந்நூல்‌ பல்கலைக்கழக மாணவர்களுக்கும்‌, புலமைத்துவம்‌ சார்‌ சமூகத்தினர்க்கும்‌ பயனுடையதாகும்‌.

சிவில்‌ சேவை தொடர்பான பொதுவான அறிமுகத்துடன்‌ சர்வதேச நாடுகளின் குறிப்பாக பிரித்தானியா, பிரான்ஸ்‌, ஐக்கிய அமெரிக்கா, இந்தியா, இலங்கை முதலான நாடுகளின்‌ சிவில்‌ சேவைக்‌ கட்டமைப்புகளை முன்னிலைப்படுத்தி ஒப்பியல்‌ நோக்கில்‌ இந்நூல்‌ எழுதப்பட்டிருப்பது சிறப்பிற்குரியதாகும்‌.
More...
மோதல் தீர்வுக் கற்கைகள்: ஒர் அறிமுகம்
மோதல் தீர்வுக் கற்கைகள்: ஒர் அறிமுகம்
மோதல் தீர்வுக் கற்கை நெறி தொடர்பான ஆய்வுகள் மனித மோதலின் தன்மை மற்றும் இயக்கவியல் ஆகியவற்றைப் புரிந்துகொள்ளுதல், ஆரோக்கியமான உறவுகளை வளர்த்தல், வன்முறையைத் தடுக்கும் வழிகளிகள் மற்றும் மோதலைக் கையாள்வதற்குப் பொருத்தமான மாற்று வழிகளைத் தேடுதல் என்பவைகளில் கவனம் செலுத்துகின்றது. மோதல், தகராறு, வன்முறை, யுத்தம் அதிகாரம், கலாசாரம். நீதி, சமாதானம், தகவல் தொடர்பு, முகாமைத்துவம், மோதலைத் தீர்த்தல், மோதல் நிலைமாற்றம் போன்ற தலைப்புகளுடன் தொடர்புபடும் வகையில் மோதல் தீர்வுக் கற்கை நெறி பகுப்பாய்வு செய்யப்படுகின்றது. தனிப்பட்ட, தேசிய, சர்வதேசிய மோதல் சூழ்நிலைகளுக்குப் பதிலளிக்கும் வகையிலும், மோதலை ஆக்கபூர்வமாகப் புரிந்துகொள்ளவும், தொடர்பு கொள்ளவும் மோதல் தீர்வுக் கற்கை நெறி மாணவர்களைத் தயார்படுத்துகிறது. இவ்வகையில் தமிழ்மொழி மூலமான பல்கலைக்கழக மாணவர்களுக்கும், அரசறிவியலை உயர்தரத்தில் கற்கும் மாணவர்களுக்கும், பொதுவான விடயங்களைத் தேடி வாசிக்கும் வாசகர்களுக்கும் பயன்தரும் வகையில் மோதல் தீர்வுக் கற்கைகள்: ஒர் அறிமுகம் என்னும் தலைப்பில் எழுதப்பட்டுள்ள இந்நூல் வெளிவருகின்றது.
More...
Triangular Power Straggle in Indian Ocean and Ethnic Conflict in Sri Lanka
Triangular Power Straggle in Indian Ocean and Ethnic Conflict in Sri Lanka
இந்துசமுத்திரப் பிராந்தியத்தில் முக்கோண அதிகாரப் போட்டியும் இலங்கையின் இனமோதலும் குமரன் புத்தக இல்லம், 2012 ISBN 978-955-659-343-3 இந்துசமுத்திரப் பிராந்தியத்தில் தனக்கிருக்கும் எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டு இலங்கையில் அதிக முதலீடுகளை சீனா செய்து வருகின்றது. இதே அக்கறையுடன் ஏனைய உலக நாடுகளும் இலங்கையினைத் தமது தந்திரோபாயப் பங்காளியாக மாற்றுவதற்கு முயற்சிக்கின்றன.பூகோள வல்லரசுகளும்,பிராந்திய வல்லரசுகளும் நடத்தும் அதிகாரப் போராட்டத்தினால் ஏற்படக்கூடிய பதிப்புக்களிலிருந்து இலங்கை தன்னைத்தானே பாதுகாத்துக் கொள்ள முடியாது தடுமாறுகின்றது.
More...
Political Science: Political Activity and Political Processes
Political Science: Political Activity and Political Processes
அரசியல் விஞ்ஞானம்: அரசியல் செயற்பாடும் அரசியல் செயல்முறையும்;> சேமமடு பதிப்பகம், கொழும்பு >2010> ISBN - NO: 978-955-1857-61-5 பொதுக் கொள்கை, பொதுநிர்வாகவியலின் இயல்பு> பொது முகாமைத்துவம்> மோதலை விளங் க்கிக்கொள்ளல், மோதலும் வன்முறையும்,மோதலும் அகிம்சையும்,மோதலைத் தடுத்தல், மோதலைத் தீர்த்தல், மோதல் முகாமைத்துவம், மூன்றாம் தரப்பு மத்தியஸ்தம், சமாதானக் கற்கை, சர்வதேச அரசியல், வெளிநாட்டுக் கொள்கை, யுத்தம், கூட்டுப்பாதுகாப்பு, அதிகாரச் சமநிலை, சர்வதேசச் சட்டம், ஆயுதக் கட்டுப்பாடும்,ஆயுதக்களைவும் போன்ற சர்வதேச அரசியலில் இடம்பெறும் சில முக்கியமான கோட்பாடுகள் பல இந் நூலில் சேர்க்கப்பட்டுள்ளன.
More...
Plantation Trade Union Movement in Sri Lanka
Plantation Trade Union Movement in Sri Lanka
இலங்கைப் பெருந்தோட்ட தொழிற்சங்க இயக்கங்கள்;>குமரன் புத்தக இல்லம் கொழும்பு>2008> ISBN - NO: 978-955-659-124-9 கண்காணிமார்களின் ஆசை வார்த்தைகளை நம்பி இலங்கை வந்து மத்தியமலை பிரதேசங்களில் வேலைக்காக குடியமர்த்தப்பட்ட தொழிலாளர்கள் வேதனம்,வேலைநாட்கள் தொடர்பான பிரச்சனைகளை எதிர்நோக்கினர். இதனை எதிர்த்து பெருந்தோட்ட தொழிற் சங்கங்கள் தொழிலாளர்களின் சமூகப் பொருளாதார உரிமைகளுக்காக போராட்டங்களை நடாத்தினர். இவ்வகையில் பெருந்தோட்ட தொழிற்சங்கத் தலைவர்களின் சமூகப் பொருளாதார பண்புகளையும், 1970 ஆம் 1977 ஆம் ஆண்டுகளில் பதவியேற்ற அரசாங்கங்கள் பின்பற்றிய கொள்கைகள் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் மீது ஏற்படுத்திய தாக்கம்,தொழிற்சங்கங்கள் தொழிலாளர் நலன்களுக்காக நடாத்திய போராட்டங்கள் போன்றவற்றையும் தொழிலாளர்களுக்கும், தோட்டமுகாமைத்துவத்திற்கு இடையிலும், தொழிலாளர்களுக்கு இடையில் ஏற்படும் தகராறுகள் ,பிரச்சினைகள் தொடர்பாக தொழிற்சங்கங்கள் எடுக்கும் நிலைப்பாடுகள் தொடர்பாக இந் நூல் ஆய்வு செய்கின்றது.
More...
Comparative Politics
Comparative Politics
ஒப்பியல் பொதுநிர்வகம்: தெரிவு செய்யப்பட்ட நாடுகளின் சிவில் நிர்வாகமுறைமை > குமரன் புத்தக இல்லம் கொழும்பு >2007, ISBN - NO: 978-955-659-091-9

பிரித்தானிய ,பிரான்ஸ் ,அமெரிக்க,இந்தியா ,இலங்கை போன்ற ஐந்து நாடுகளின் சிவில் நிர்வாக சேவைகளின் வரலாற்று அபிவிருத்தியையும், கோட்பாட்டு நடைமுறை அம்சங்களையும் விமர்சனரீதியாக இந் நூல் அணுகுகின்றது.சிக்கலான விடயங்களையும்.பதங்களையும் எளிமையாகவும்,தெளிவாகவும்,ஆழமாகவும் இந் நூல் விளக்குகின்றது.

More...

Around the World

1 1 1 1 1 1 1 1 1 1 Rating 0.00 (0 Votes)

( தினக்குரல் , புதிய பண்பாடு இதழில் 2013.05.25, 2013.05.26 ஆகிய திகதிகளில் பிரசுரிக்கப்பட்டது )

clip_image002 இறைமையுடைய எந்தவொரு நாட்டினதும் வெளியுறவுக்கொள்கை உருவாக்கமானது சட்டப்படியான மக்கள் விவகாரமாகும். வெளியுறவுக் கொள்கை உருவாக்கம் மற்றும் அமுலாக்கம் யாவும் பொதுமக்கள் நலனை மையமாகக் கொண்டிருக்க வேண்டும். வெளியுறவுக் கொள்கையினை கூர்மைப்படுத்திச் செயற்திறனுடையதாக்குவதற்கு கொள்கை உருவாக்கத்தில் பொதுமக்கள் அதிகளவில் பங்குபற்ற அழைக்கப்படல் வேண்டும். இறைமையுடைய ஒரு நாடு மக்களுடையதாயின் தீர்மானம் எடுத்தலில் அந்நாட்டு மக்களின் பங்குபற்றுதல் அவசிமானதாகும். முன்னைநாள் பிரித்தானிய பிரதம மந்திரி வைகவுன்ற் கென்றி பாமேர்ஸ்ரன் (Viscount Henry Palmerston) என்பவர் வெளியுறவுக்கொள்கை தொடர்பாகக் கூறும்போது 'எங்களிடம் நிரந்தரமான நண்பர்கள் கிடையாது. அதேபோன்று நிரந்தரமான எதிரிகளும் கிடையாது.எங்களுடைய நலன்களே நிரந்தரமானது. எங்களுக்கான நலன்களைப் பின்பற்ற வேண்டியதே எங்கள் கடமையாகும்' எனக் கூறுகின்றார். எனவே தேசியநலன் என்னும் மூலக்கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டே வெளியுறவுக் கொள்கை உருவாக்கப்படுகிறது என்பதே யதார்த்தமாகும்.

அனுபவங்களிலிருந்து கற்ற பாடங்கள்

இலங்கை தனது வெளியுறவுக் கொள்கையினை இம் மூலக் கோட்பாட்டின் அடிப்படையிலேயே உருவாக்கியதாகக் கூறிக்கொண்டாலும், தேசியநலன் தவிர்ந்த ஏனைய விடயங்களாகிய காலத்திற்குக் காலம்; உள்நாட்டில் நிலவும் சூழல், மாறிவரும் சர்வதேசச் சூழல் மற்றும் பதவிக்கு வரும் அரசியல் கட்சிகளின் மூலக் கொள்கைகள் என்பவற்றின் அடிப்படையிலேயே இலங்கையின் வெளியுறவுக் கொள்கை உருவாக்கப்படுகிறது என்பதே உண்மையானதாகும்.

இலங்கையின் வெளியுறவுக் கொள்கை உருவாக்கப் பொறிமுறையில் ஜனாதிபதி, அமைச்சரவை, வெளிவிவகார அமைச்சு, வெளிவிவகார அமைச்சுக்கு ஆலோசனை கூறுகின்ற பாராளுமன்ற குழு, தொழிசார்நிபுணத்துவம் மிக்க இராஜதந்திரிகள், வெகுஜனத் தொடர்பு சாதனங்கள், வர்த்தகர் சபை போன்ற ஆதரவு வழங்கும் குழுக்கள்,பொதுசன அபிப்பிராயம் என்பன பங்கெடுக்கின்றன. இவைகள் எல்லாம் ஒன்றிணைந்து இலங்கைக்கு மிகவும் பொருத்தமானதும், சாதகமானதுமான வெளியுறவுக் கொள்கையினை உருவாக்க முயற்சிக்கின்றன.

இலங்கையில் ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிகள் பின்பற்றிய வேறுபட்ட வெளியுறவுக் கொள்கைகளினால் ஏற்பட்ட ஊசலாட்டத்திற்கும் மத்தியில் 1950 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட கொழும்புத்திட்டச் செயற்பாடுகளில் இலங்கை செயற்பாடு மிக்கதொரு அங்கத்தவராகப் பங்குபற்றியது. அத்துடன் 1954 ஆம் ஆண்டு நடைபெற்ற கொழும்பு அணி நாடுகள் மகாநாடு ( Colombo Powers Confer­ence ) 1955 ஆம் ஆண்டு நடைபெற்ற பான்டுங் மகாநாடு ( Bandung Conference) என்பவற்றில் இலங்கை பங்குபற்றியது. இம்மகாநாடுகள் 1961 ஆம் ஆண்டு அணிசேரா நாடுகள் உருவாக்கப்பட துணைநின்றதுடன் அணிசேராமை என்ற வெளியுறவுக் கொள்கையினை இலங்கை பின்பற்றவும் உதவியது. எனவே அணிசேராமை,உலக நாடுகளுடனான நட்புறவு என்பவற்றின் மூலம் இலங்கையின் சுதந்திரம்,இறைமை அங்கீகரிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டது. அதேநேரம் காலனித்துவத்தினால் பாதிக்கப்பட்ட ஆசிய நாடுகளுடனான பரஸ்பர சார்புநிலை கொள்கையினையும் இலங்கை பின்பற்றியது.

அதேநேரம் சீட்டோ (SEATO) அமைப்பில் இணைவதில்லை என 1954 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட தீர்மானம் ,ஆசியான் ( ASEAN) அமைப்பில் இணைவது என 1967 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட தீர்மானம் யாவும் ஐக்கிய தேசியக் கட்சி பதவியில் இருக்கும் போது எடுக்கப்பட்ட தீர்மானங்களாகும். அதாவது பூகோள அதிகாரப் போராட்ட அணிகளுடன் கூட்டுச் சேரக் கூடாது என்ற வெறுப்பினால் எடுக்கப்பட்ட தீர்மானங்களாகும். எனவே நல்லாட்சி, சிறப்பான வெளியுறவுக் கொள்கை போன்றவற்றிற்கான சில பாடங்களை கடந்தகால அனுபவங்களிலிருந்து இலங்கை கற்றுள்ளது.

பாதுகாப்பினை ஏற்படுத்திய சூழல்

2009 ஆம் ஆண்டு வைகாசி மாதம் தமிழீழ விடுதலைப் புலிகள் இலங்கை இராணுவத்தால் தோற்கடிக்கப்பட்டதோடு இலங்கையில் நிலவிவந்த முப்பது வருடகால கடும் யுத்தம் முடிவுக்கு வந்தது. ஆயினும் இதுவரைகாலமும் இலங்கை பேணிவந்த வெளியுறவுக் கொள்கைமீது யுத்தத்தின் முடிவு பாரியளவில் பாதிப்பினைச் செலுத்தியிருந்தது என்பதை மறுக்;கமுடியாது. உள்நாட்டு யுத்தம் முடிவடையும் காலப் பகுதியில்; இலங்கை இராணுவத்தால் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்களுக்கு இலங்கை பொறுப்புக்கூறத் தவறிவிட்டதுடன், வெளியுறவுக்கொள்கையுடன் தொடர்புடைய வேறு பலவிடயங்களை இலங்கை கவனிக்கத் தவறிவிட்டதாகவும், நாட்டினுடைய ஐக்கியம், பிரதேச ஒருமைப்பாடு ஆகியவற்றைப் பாதுகாப்பதில் மட்டுமே இலங்கை ஆட்சியாளர்களின் அக்கறை இருந்ததாகவும் கூறப்படுகின்றது.

உள்நாட்டு யுத்தம் முடிவடைந்த பின்னர் புலம்பெயர்ந்து வாழும் இலங்கைத் தமிழர்கள் ( Sri Lankan Tamil Diaspora) மற்றும் சில சர்வதேச மனித உரிமைகள் அமைப்புக்கள் இணைந்து யுத்தத்தின் இறுதிக்காலப்பகுதியில் நிகழ்ந்த யுத்தக் குற்றங்களுக்கு இலங்கை பொறுப்பேற்க வேண்டும் என தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபடுகின்றன. இது சர்வதேசமட்டத்தில் இலங்கையினைத் தடுமாற வைத்துள்ளதுடன், உள்நாட்டு யுத்த முடிவடையும் காலத்தில் நிகழ்ந்த மனித உரிமை மீறல்கள் தொடர்பான குற்றச்சாட்டிலிருந்து இலங்கை தன்னை மீட்டுக்கொள்ளாமல் விட்டமை இலங்கையின் வெளியுறவுக் கொள்கையில் பாரிய பின்னடைவினை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் உள்நாட்டு யுத்தம் முடிவடைந்து 2013 ஆம் ஆண்டு வைகாசி மாதத்துடன் நான்கு வருடங்கள் பூர்த்தியாகிவிட்டது. ஆயினும் சமாதானம், நல்லிணக்கம், மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, மீள்கட்டுமானம், அபிவிருத்தி என்பன இதுவரை பூரணப்படுத்தப்படாது தொடர் நிகழ்வாகியுள்ளது. இவைகளைப் பூர்த்தி செய்வதற்கு இலங்கை ஆட்சியாளர்கள் மேலும் நீண்டகாலத்தினை எடுப்பார்களாயின் இலங்கையின் வெளியுறவுக் கொள்கையில் இது பாரிய பின்னடைவினை ஏற்படுத்தலாம்.

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு தனது அறிக்கையினை ஜனாதிபதியிடம் சமர்பித்திருந்ததாயினும் அதன் சிபார்சுகள் இதுவரை நிறைவேற்றப்படவில்லை. இதனை நிறைவேற்றுவதில் அரசாங்கம் தெளிவானதொரு கொள்கையினைப் பின்பற்றாது தமது சிந்தனைக்குட்டவழி செயற்படவே விரும்புகின்றது. சர்வதேச மனிதாபிமானச் சட்டம் மற்றும் சர்வதேச மனித உரிமைகள் என்பன மீறப்பட்டதற்கான விசாரணைகள் நடாத்தப்பட்டு குற்றம் இழைத்தவர்களுக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைகள் பேரவை வலியுத்துகின்றது.ஆனால் இலங்கை தான் செய்த தவறுகளிலிருந்து விலகியிருக்க அல்லது யாருக்கும் பொறுப்புக் கூறாமலிருக்கவே விரும்புகின்றது. மனித உரிமைகளைப் பேணுதல்; மற்றும் இனங்களுக்கிடையில் ஒற்றுமையினை வளர்த்தல் என்பவைகளுக்கான பொறிமுறை இலங்கையில் இதுவரை உருவாக்கப்படவில்லை.

எனவே உறுதியானதும் நிதானமானதுமான நல்லாட்சி நோக்கி இலங்கை நகர வேண்டும். இதன்மூலம் நம்பகத்தன்மையானதும், சுதந்திரமானதுமான செயற்பாட்டை மேற்கொள்ள முடியும். ஆட்சிமுறைமைக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்ற போது அதனை ஜனநாயக வழியில் தீர்க்கக் கூடிய கட்டமைப்புக்கள், விதிமுறைகள் உருவாக்கப்பட்டு அதனூடாக இவ்விவகாரங்கள் கையாளப்பட வேண்டும். இவ்வகையில் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு மற்றும் தேசிய மனித உரிமைகள் செயல் திட்டம் ( National Human Rights Action Plan) ஆகியன இலங்கையில் இனங்களுக்கிடையில் நம்பகத்தன்மையினையும் நல்லிணக்கத்தினையும் உருவாக்குவதற்கான பொறிமுறையினை உருவாக்கிக் கொடுத்;ததுள்ளன. தேசிய கொள்கைக்கும் வெளியுறவுக் கொள்கைக்கும் இடையில் நெருக்கமான உறவுள்ளது.எனவே தேசியக் கொள்கையில்; மாற்றத்தினை ஏற்படுத்தி இலங்கையின் வெளியுறவுக் கொள்கையில் முன்னேற்றத்தினை அடையமுடியும்.

மீள்சிந்தனை

பூகோளமயவாக்க சகாப்தத்தில் நாங்கள் வாழ்கின்றோம் என்பதை இலங்கையர்கள் அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும். இருபத்தியோராம் நூற்றாண்டின் சர்வதேச உறவு மற்றும் நல்லாட்சி என்பவற்றில் பூகோளமயவாக்கத்தின் இயல்புகளும்,செல்வாக்கும் என்றுமில்லாதளவிற்கு மிகவும் ஆழமாக ஊடுருவியுள்ளது. இதனால் உலக நாடுகள் ஒன்றிலொன்று தங்கிவாழ்வதுடன், அதனூடாகவே தமது இறைமையினையும் பாதுகாக்கின்றன.

எனவே சீனா தவிர்ந்த ஏனைய உலக நாடுகளை குறிப்பாக மேற்கு உலக நாடுகளை விரோதிப்பதன் ஊடாக இறைமையினைப் பாதுகாக்க முடியாது. பதிலாக மேற்கு உலக நாடுகளுடன் அறிவுபூர்வமான செயற்பாடுகளில் ஈடுபடுவதன் மூலமே இறைமையினைப் பாதுகாக்க முடியும். ஒப்பீட்டு ரீதியில் இறைமை என்பது ஓர் எண்ணக்கரு மாத்திரமேயாகும். இவ் அடிப்படையில் பூகோளமயவாக்க சகாப்தகாலத்தில் ஆக்கிரமிப்பு எண்ணங்களின்றி ஒருநாட்டில் மற்றொருநாடு தங்கிவாழ்வதை அனுமதிக்கின்ற தொரு எண்ணக்கருவாக இறைமை மாற்றப்பட்டுள்ளது என்பதை இலங்கையும் ஏற்றுக் கொள்ள தயாராக வேண்டும்.

எனவே சர்வதேசமுறைமையில் இயல்பாகப் பங்குபற்றுதல், சர்வதேச விதிமுறைகளைப் பின்பற்றுதல், இவைகளை நிறைவேற்றுகின்ற பொறுப்பினை ஏற்றுக் கொள்ளுதல் என்பதற்கும்; நாட்டின் இறைமை,பிரதேச ஒருமைப்பாடு என்பன மீறப்படாமல் பாதுகாக்கப்படுவதற்கும் இடையில் தெளிவான வேறுபாட்டினை அடையாளம் காணவேண்டிய தேவை உருவாகியுள்ளது.இலங்கையின் உண்மையான இறைமையானது தேசிய,சர்வதேசிய சமுதாயத்துடன் மேற்கொள்ளப்படும் சிறப்பான தொடர்பாடல் மற்றும் தேசிய நலன்களைப் பின்பற்றுதல் என்பவற்றினால் தீர்மானிக்கப்படுவதாகும். ஆகவே இலங்கையின் வெளியுறவுக் கொள்கையினை மிகவும் தெளிவாக நியாயப்படுத்தக்கூடிய பொறிமுறையினையும், சந்தர்ப்பத்தினையும் உருவாக்கி அதன்மூலம் நாட்டின் இறைமை அத்துமீறப்படாமல் பாதுகாக்க முடியும்.

இதற்காக நம்பகத் தன்மையினை உருவாக்குவதும்,அதனைப் பேணுவதும் தேசிய மனப்பாங்காக மாற்றப்பட்டு அதன்வழி வெளியுறவுக் கொள்கையினை உருவாக்குகின்ற அரசியல் கலாசாரத்தினை இலங்கை உருவாக்க வேண்டும். சர்வதேச சமுதாயத்திற்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையிலான தொடர் கலந்துரையாடல் உறுதிப்படுத்தப்படாமல் திட்டமிடப்பட்ட வகையில் தவிர்க்கப்பட்டு வருவது போன்ற காட்சிநிலை தோன்றியுள்ளது. தேசியளவில் தோன்றும் கருத்தொற்றுமை பரஸ்பரம் சந்தேகங்களைப் போக்க உதவுவதுடன்,மோதல்களைத் தடுக்கவும் உதவும். மேலும் தேசியளவில் நம்பகத்தன்மையினை உருவாக்குவதன்மூலம் வெளிவிவகாரங்களைக் கையாளுகின்ற போது மீறப்பட்டு விட்டதாக நாம் கருதும் இலங்கையின் இறைமையின் வீச்சு எத்தகையது என்பதைப் பரீட்சித்துப் பார்க்க முடியும்.

அதேநேரம் இலங்கை பல்லினங்களைக் கொண்டதொரு நாடு என்பதையும் கடந்த கால இனஅழிப்பு கலவரங்களால் பாதிக்கப்பட்டு ஐரோப்பிய நாடுகளில் புலம்பெயர்ந்து வாழும் இலங்கைத் தமிழர்கள் இலங்கைக்கு எதிரான அரசியலில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றார்கள் என்பதையும் கருத்தில் கொண்டு வெளியுறவுக் கொள்கையினை உருவாக்க இலங்கை அரசாங்கம் தவறிவருகின்றது.

இலங்கையில் வாழும் சிறுபான்மைச் சமூகங்களின் மறுக்கப்பட்ட உரிமைகளை வழங்குவதற்கு ஒழுங்குமுறையானதும், நேர்மையானதுமான பொறிமுறைகள் உருவாக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்ற மனவிருப்பம் ஆட்சியாளர்களிடம் இதுவரை தோன்றவில்லை. இதனால் ஐரோப்பிய நாடுகளில் புலம்பெயர்ந்து அங்கு இலங்கைக்கு எதிராக அரசியலில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்ற இலங்கைத் தமிழ் மக்கள் மீண்டும் இலங்கைக்குத் திரும்பிவந்து வாழ்வதற்குரிய சூழல் உருவாகவில்லை. இலங்கையின் தேசிய கொள்கையும் வெளியுறவுக் கொள்கையும் ஒன்றிலிருந்து ஒன்று பிரிக்க முடியாத இரட்டைப் பிறவிகளாகும் என்பதே வரலாறு. இவ் உண்மையினை இலங்கையின் ஆட்சியாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

மீள்வரைபு

இலங்கையின் வெளியுறவுக் கொள்கையினை உருவாக்குவதில் பயிற்றப்பட்ட தொழிசார் புலமைமிக்க இராஜதந்திரிகள் மீண்டும் பங்கெடுத்தார்களா? என்றதொரு அச்சம் கலந்த கேள்வி தோன்றியுள்ளது. கடந்த முப்பது வருடங்களாக இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டு யுத்தத்தினை 2009 ஆம் ஆண்டு வைகாசி மாதம் முடிவுக்கு கொண்டு வந்தவிதத்தினால் சர்வதேச சமூகம் அதிர்ச்சியடைந்துள்ளது. இதனால் ஐக்கிய நாடுகள் சபை, அணிசேரா நாடுகள் இயக்கம்,சார்க்,பொதுநலவாய அமைப்பு போன்ற அமைப்புக்களிலும்,ஏனைய பிராந்திய அமைப்புக்களிலும் இலங்கை வகித்த முதன்மையான வகிபாகம் இப்போது மறைந்துவிட்டது.

மேலும் ஆயுதப்பரிகரணம், சர்வதேச மனிதாபிமானச்சட்டம், சர்வதேச மனித உரிமைகள் சட்டம், சர்வதேசச்சட்டம், பெண்கள் தொடர்பான விடயங்கள், தொழிலாளர்விடயங்கள், சுகாதாரம், வர்த்தகம் போன்ற விடங்கள் தொடர்பான விவாதிக்கப்படும் சர்வதேச பேரவைகளில் இலங்கை பின்பற்றி வந்த மரபுரீதியாக இராஜதந்திரங்கள்; தற்போது கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது.

தற்போது சர்வதேசளவில் இலங்கை அவமானத்திற்கு உள்ளாகியுள்ளதுடன் யுத்தக் குற்றங்கள் இலங்கையின் குரல்வளையினை நெரிக்கின்ற நிலைமையும் தோன்றிவிட்டது. எனவே இலங்கையின் சுதந்திரம், ஐக்கியம், ஜனநாயக அபிவிருத்தி, பாகாப்பு,நல்லிணக்கம்,நல்லாட்சி என்பவற்றினூடாக நீண்ட காலத்தில் இலங்கையின் தேசிய நலனைப் பாதுகாக்கக் கூடிய வல்லமையுள்ள பயிற்றப்பட்ட தொழிவான்மையுள்ள இராஜதந்திரிகளால் இலங்கையின் வெளியுறவுக் கொள்கை மீள் வரையப்பட வேண்டும்.

 

Share

Who's Online

We have 17 guests and no members online

+1 Me

Subscribe

Enter your email address:

Delivered by FeedBurner

 About Prof. Thanabalasingam Krishnamohan

Prof. Thanabalsingam Krishnamohan is a Professor in Political Science in Eastern University of Sri Lanka .

    

 
 
Invalid RSS link or you're not allowed to read this Picasa gallery or album.