Education is the Most Powerful Weapon Which You Can Use to Change the World. – Nelson Mandela-

இருபத்தியோராம் நூற்றாண்டில் எழுச்சியடையும் சீனாவின் கடல் வலிமை

இருபத்தியோராம் நூற்றாண்டில் எழுச்சியடையும் சீனாவின் கடல் வலிமை

இருபத்தியோராம் நூற்றாண்டில் எழுச்சியடையும் சீனாவின் கடல் வலிமை by Thanabalasingham Krishnamohan

நிர்வாகத்தில் தொழிலாளர் பங்கு வகித்தல்

நிர்வாகத்தில் தொழிலாளர் பங்கு வகித்தல்

நிர்வாகத்தில் தொழிலாளர் பங்கு வகித்தல் by Thanabalasingham Krishnamohan

மாக்கியவல்லியின் இளவரசன் திறனாய்வு

மாக்கியவல்லியின் இளவரசன் திறனாய்வு

மாக்கியவல்லியின் இளவரசன் திறனாய்வு by Thanabalasingham Krishnamohan

இலங்கை பொது நிர்வாக முறைமை

இலங்கை பொது நிர்வாக முறைமை

இலங்கை பொது நிர்வாக முறைமை , by Thanabalasingham Krishnamohan

  • இருபத்தியோராம் நூற்றாண்டில் எழுச்சியடையும் சீனாவின் கடல் வலிமை

    இருபத்தியோராம் நூற்றாண்டில் எழுச்சியடையும் சீனாவின் கடல் வலிமை

    Tuesday, 15 October 2013 23:32
  • நிர்வாகத்தில் தொழிலாளர் பங்கு வகித்தல்

    நிர்வாகத்தில் தொழிலாளர் பங்கு வகித்தல்

    Tuesday, 15 October 2013 23:39
  • பிராந்திய ஒத்துழைப்புக்கான தெற்காசியச் சங்கம்

    பிராந்திய ஒத்துழைப்புக்கான தெற்காசியச் சங்கம்

    Tuesday, 15 October 2013 23:07
  • மாக்கியவல்லியின் இளவரசன் திறனாய்வு

    மாக்கியவல்லியின் இளவரசன் திறனாய்வு

    Tuesday, 15 October 2013 23:26
  • இலங்கை பொது நிர்வாக முறைமை

    இலங்கை பொது நிர்வாக முறைமை

    Tuesday, 15 October 2013 23:31
Comparative Politics
Comparative Politics
ஒப்பியல் பொதுநிர்வகம்: தெரிவு செய்யப்பட்ட நாடுகளின் சிவில் நிர்வாகமுறைமை > குமரன் புத்தக இல்லம் கொழும்பு >2007, ISBN - NO: 978-955-659-091-9

பிரித்தானிய ,பிரான்ஸ் ,அமெரிக்க,இந்தியா ,இலங்கை போன்ற ஐந்து நாடுகளின் சிவில் நிர்வாக சேவைகளின் வரலாற்று அபிவிருத்தியையும், கோட்பாட்டு நடைமுறை அம்சங்களையும் விமர்சனரீதியாக இந் நூல் அணுகுகின்றது.சிக்கலான விடயங்களையும்.பதங்களையும் எளிமையாகவும்,தெளிவாகவும்,ஆழமாகவும் இந் நூல் விளக்குகின்றது.

More...
மோதல் தீர்வுக் கற்கைகள்: ஒர் அறிமுகம்
மோதல் தீர்வுக் கற்கைகள்: ஒர் அறிமுகம்
மோதல் தீர்வுக் கற்கை நெறி தொடர்பான ஆய்வுகள் மனித மோதலின் தன்மை மற்றும் இயக்கவியல் ஆகியவற்றைப் புரிந்துகொள்ளுதல், ஆரோக்கியமான உறவுகளை வளர்த்தல், வன்முறையைத் தடுக்கும் வழிகளிகள் மற்றும் மோதலைக் கையாள்வதற்குப் பொருத்தமான மாற்று வழிகளைத் தேடுதல் என்பவைகளில் கவனம் செலுத்துகின்றது. மோதல், தகராறு, வன்முறை, யுத்தம் அதிகாரம், கலாசாரம். நீதி, சமாதானம், தகவல் தொடர்பு, முகாமைத்துவம், மோதலைத் தீர்த்தல், மோதல் நிலைமாற்றம் போன்ற தலைப்புகளுடன் தொடர்புபடும் வகையில் மோதல் தீர்வுக் கற்கை நெறி பகுப்பாய்வு செய்யப்படுகின்றது. தனிப்பட்ட, தேசிய, சர்வதேசிய மோதல் சூழ்நிலைகளுக்குப் பதிலளிக்கும் வகையிலும், மோதலை ஆக்கபூர்வமாகப் புரிந்துகொள்ளவும், தொடர்பு கொள்ளவும் மோதல் தீர்வுக் கற்கை நெறி மாணவர்களைத் தயார்படுத்துகிறது. இவ்வகையில் தமிழ்மொழி மூலமான பல்கலைக்கழக மாணவர்களுக்கும், அரசறிவியலை உயர்தரத்தில் கற்கும் மாணவர்களுக்கும், பொதுவான விடயங்களைத் தேடி வாசிக்கும் வாசகர்களுக்கும் பயன்தரும் வகையில் மோதல் தீர்வுக் கற்கைகள்: ஒர் அறிமுகம் என்னும் தலைப்பில் எழுதப்பட்டுள்ள இந்நூல் வெளிவருகின்றது.
More...
Plantation Trade Union Movement in Sri Lanka
Plantation Trade Union Movement in Sri Lanka
இலங்கைப் பெருந்தோட்ட தொழிற்சங்க இயக்கங்கள்;>குமரன் புத்தக இல்லம் கொழும்பு>2008> ISBN - NO: 978-955-659-124-9 கண்காணிமார்களின் ஆசை வார்த்தைகளை நம்பி இலங்கை வந்து மத்தியமலை பிரதேசங்களில் வேலைக்காக குடியமர்த்தப்பட்ட தொழிலாளர்கள் வேதனம்,வேலைநாட்கள் தொடர்பான பிரச்சனைகளை எதிர்நோக்கினர். இதனை எதிர்த்து பெருந்தோட்ட தொழிற் சங்கங்கள் தொழிலாளர்களின் சமூகப் பொருளாதார உரிமைகளுக்காக போராட்டங்களை நடாத்தினர். இவ்வகையில் பெருந்தோட்ட தொழிற்சங்கத் தலைவர்களின் சமூகப் பொருளாதார பண்புகளையும், 1970 ஆம் 1977 ஆம் ஆண்டுகளில் பதவியேற்ற அரசாங்கங்கள் பின்பற்றிய கொள்கைகள் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் மீது ஏற்படுத்திய தாக்கம்,தொழிற்சங்கங்கள் தொழிலாளர் நலன்களுக்காக நடாத்திய போராட்டங்கள் போன்றவற்றையும் தொழிலாளர்களுக்கும், தோட்டமுகாமைத்துவத்திற்கு இடையிலும், தொழிலாளர்களுக்கு இடையில் ஏற்படும் தகராறுகள் ,பிரச்சினைகள் தொடர்பாக தொழிற்சங்கங்கள் எடுக்கும் நிலைப்பாடுகள் தொடர்பாக இந் நூல் ஆய்வு செய்கின்றது.
More...
Political Science: Political Activity and Political Processes
Political Science: Political Activity and Political Processes
அரசியல் விஞ்ஞானம்: அரசியல் செயற்பாடும் அரசியல் செயல்முறையும்;> சேமமடு பதிப்பகம், கொழும்பு >2010> ISBN - NO: 978-955-1857-61-5 பொதுக் கொள்கை, பொதுநிர்வாகவியலின் இயல்பு> பொது முகாமைத்துவம்> மோதலை விளங் க்கிக்கொள்ளல், மோதலும் வன்முறையும்,மோதலும் அகிம்சையும்,மோதலைத் தடுத்தல், மோதலைத் தீர்த்தல், மோதல் முகாமைத்துவம், மூன்றாம் தரப்பு மத்தியஸ்தம், சமாதானக் கற்கை, சர்வதேச அரசியல், வெளிநாட்டுக் கொள்கை, யுத்தம், கூட்டுப்பாதுகாப்பு, அதிகாரச் சமநிலை, சர்வதேசச் சட்டம், ஆயுதக் கட்டுப்பாடும்,ஆயுதக்களைவும் போன்ற சர்வதேச அரசியலில் இடம்பெறும் சில முக்கியமான கோட்பாடுகள் பல இந் நூலில் சேர்க்கப்பட்டுள்ளன.
More...
Political Science: Study of State and Identification of State
Political Science: Study of State and Identification of State
அரசியல் விஞ்ஞானம்: அரசியல் பற்றிய கற்கையும் அரசை இனம்காணுதலும் ;> சேமமடு பதிப்பகம், கொழும்பு>2009. ISBN - NO: 978-955-1857-60-8 அரசியல் விஞ்ஞானத்தின் இயல்புகள், அரசியல் விஞ்ஞானத்தின் செயற்பரப்பெல்லை, அரசியல் விஞ்ஞானம் ஓர் விஞ்ஞானமா? அரசியல் விஞ்ஞானத்தினை கற்பதற்கான அணுகுமுறைகள், அரசியல் விஞ்ஞானமும், ஏனைய சமூகவிஞ்ஞானப்பாடங்களும், அரசு,தோற்றமும்,வளர்ச்சியும், அரசினை இனம் காணுவதற்கான அடிப்படைகள், அரசுடன் தொடர்புடைய எண்ணக்கருக்கள்,கோட்பாடுகள் போன்றன நடைமுறை விவகாரங்களுடனும்,அனுபவங்களுடனும் இணைத்து எழுதப்பட்டுள்ளது.
More...
பொது நிர்வாகத்தில்‌ மனிதவள முகாமைத்துவம்‌: முன்னணி நாடுகளின்‌ சிவில்‌ சேவை மாதிரிகள்‌
பொது நிர்வாகத்தில்‌ மனிதவள முகாமைத்துவம்‌: முன்னணி நாடுகளின்‌ சிவில்‌ சேவை மாதிரிகள்‌
சர்வதேச ஆய்வுப்பரப்பில்‌ அரசறிவியல்‌, நிர்வாகவியல்‌ போன்ற துறைகள்‌ மிகுந்த அவதானத்தையும்‌, முக்கியத்துவத்தையும்‌ பெறுகின்றன. இவ்வகையில்‌ "பொது நிர்வாகத்தில்‌ மனிதவள முகாமைத்துவம்‌: முன்னணி நாடுகளின்‌ சிவில்‌ சேவை மாதிரிகள்‌" என்ற புதுக்கிய இந்நூல்‌ பல்கலைக்கழக மாணவர்களுக்கும்‌, புலமைத்துவம்‌ சார்‌ சமூகத்தினர்க்கும்‌ பயனுடையதாகும்‌.

சிவில்‌ சேவை தொடர்பான பொதுவான அறிமுகத்துடன்‌ சர்வதேச நாடுகளின் குறிப்பாக பிரித்தானியா, பிரான்ஸ்‌, ஐக்கிய அமெரிக்கா, இந்தியா, இலங்கை முதலான நாடுகளின்‌ சிவில்‌ சேவைக்‌ கட்டமைப்புகளை முன்னிலைப்படுத்தி ஒப்பியல்‌ நோக்கில்‌ இந்நூல்‌ எழுதப்பட்டிருப்பது சிறப்பிற்குரியதாகும்‌.
More...
Triangular Power Straggle in Indian Ocean and Ethnic Conflict in Sri Lanka
Triangular Power Straggle in Indian Ocean and Ethnic Conflict in Sri Lanka
இந்துசமுத்திரப் பிராந்தியத்தில் முக்கோண அதிகாரப் போட்டியும் இலங்கையின் இனமோதலும் குமரன் புத்தக இல்லம், 2012 ISBN 978-955-659-343-3 இந்துசமுத்திரப் பிராந்தியத்தில் தனக்கிருக்கும் எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டு இலங்கையில் அதிக முதலீடுகளை சீனா செய்து வருகின்றது. இதே அக்கறையுடன் ஏனைய உலக நாடுகளும் இலங்கையினைத் தமது தந்திரோபாயப் பங்காளியாக மாற்றுவதற்கு முயற்சிக்கின்றன.பூகோள வல்லரசுகளும்,பிராந்திய வல்லரசுகளும் நடத்தும் அதிகாரப் போராட்டத்தினால் ஏற்படக்கூடிய பதிப்புக்களிலிருந்து இலங்கை தன்னைத்தானே பாதுகாத்துக் கொள்ள முடியாது தடுமாறுகின்றது.
More...

Around the World

  • Rescue workers in one Caracas neighbourhood say no help has arrived, two days after twin quakes tore through the city.

    Read more...
  • Spain wins World Cup group, beating Uruguay 1-0 as Fernando Muslera’s error sends two-time champions home.

    Read more...
  • Cape Verde's third draw gives them a second-place finish in Group H and pits them against the world champions in the knockouts.

    Read more...
  • Newly released footage has exposed the series of lies that led UK police to arrest a dying stabbing victim.

    Read more...
  • The US has struck Iran in retaliation for what it says was an Iranian attack on a ship in the Strait of Hormuz.

    Read more...
  • […]The post The Sovereign Tightrope: AKD, The IMF & The Politics Of Post-Crisis Survival appeared first on Colombo Telegraph.

    Read more...
  • Iran's IRGC says it targeted US military in region after Trump administration launched attack on the country.

    Read more...
  • Only competitions involving professional athletes will be held, with all other activities cancelled.

    Read more...
  • Judge says comments to the media by prosecutors about defendant violate rules of what can be said outside of court.

    Read more...
  • The country is still reeling from devastating pair of earthquakes that killed hundreds of people earlier this week.

    Read more...
ஒப்பீட்டு அரசியல் கற்கைக்கான அணுகுமுறைகள் - 2.5 out of 5 based on 13 votes
1 1 1 1 1 1 1 1 1 1 Rating 2.58 (13 Votes)

ஒப்பீட்டு அரசியலில் கற்கை நெறிக்குள் அணுகுமுறையானது வளர்ச்சியடைந்து வரும் பகுதியாகவுள்ளது.உலக நாடுகளின் அரசியல் முறைமைகளையும் , வளர்ச்சியடைந்து வரும் நாடுகளின் அரசியல் முறைமைகளையும் அறிந்து கொள்வதற்கு ஒப்பீட்டு அணுகுமுறையானது மிகவும் பயனுள்ளதாகும். அணுகுமுறை என்பது 'ஒரு குறித்த காட்சிநிலையினை நோக்குவதற்கும் அதனை விளக்குவதற்குமான வழிமுறையாகும் என விளக்கமளிக்கப்படுகின்றது. அணுகுமுறையினை வழிமுறை கோட்பாடு என்பதுடன் ஒப்பிடுதவன் மூலமும் மிகவும் நுட்பமாகவும் விளக்கிக் கொள்ளலாம். எனவே அணுகுமுறை என்பது ஒரு வழிமுறை எனக் கூறலாம். வான்டைக் எனும் அறிஞர் 'அணுகுமுறை என்பது ஓர் பிரச்சினையை தெரிவு செய்கின்ற அலகாகவும் அது தொடர்பான தரவுகளைக் கொண்டதாகவும் இருக்கும். ஆனால் வழிமுறை என்பது பயனுள்ள தகவல்களைப் பெறுதல் மட்டுமே' எனக் கூறுகின்றார். டேவிட் ஈஸ்ரன் 'உருவமாதிரிகளே அணுகுமுறை' எனக் குறிப்பிடுகின்றார். சாதாரண மொழியில் கூறுவதாயின் ஓர் குறிப்பிட்ட விடயத்தைப் பார்க்கின்ற முறை, விளக்குகின்ற முறை என வரைவிலக்கணப்படுத்தலாம். மறுபக்கத்தில் அறிஞர்கள் தமது கோட்பாடுகளே சிறந்தவை என்பதை முன்வைப்பதற்கான வாதங்களே அணுகுமுறைமைகள் எனலாம். இவ் அணுகுமுறைமைகளை மரபுசார் அணுகுமுறைமை, நவீன அணுகுமுறைமை என இரண்டாக வகைப்படுத்தலாம்;.

1. மரபுசார் அணுகுமுறைமைகள்

மரபுரீதியான அணுகுமுறைமையானது கூடுதலாக விபரணத் தன்மை வாய்ந்ததாகவுள்ளது. மரபுரீதியான அணுகுமுறைமையானது பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதாகவோ அன்றி விளக்கம் தருவதாகவோ இருக்கவில்லை. பத்தொன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த அறிஞர்களின் கருத்துக்களால் இவ் அணுகுமுறைமை வளம்பெற்றிருந்தாலும் இருபதாம் நூற்றாண்டில் இது பல சவால்களைச் சந்தித்துள்ளது. மரபுரீதியான அணுகுமுறைகளாக பின்வருவன அடையாளப்படுத்தப்படுகின்றன.அவைகளாவன மெய்யியல் அணுகுமுறைமை, வரலாற்று அணுகுமுறைமை, நிறுவன அணுகுமுறைமை, சட்ட அணுகுமுறைமை என்பவைகளாகும்.

மெய்யியல் அணுகுமுறைமை

மெய்யியல் அணுகுமுறைமை மிகவும் பழைமையானதாகும். ஆரம்ப காலத்தில் இது ஒழுக்கவியல் அணுகுமுறை எனவும் அழைக்கப்பட்டது. மெய்யியல் அணுகுமுறையாளர்களின் கருத்தின் படி 'மனிதன், அரசு, அரசாங்கம் யாவும் சில இலக்குகள், ஒழுங்குகள், உண்மைகள், உயர் தத்துவங்கள் என்பவைகளோடு மிக நெருங்கிய தொடர்புடையவைகளாகும். அரிஸ்ரோட்டில், மாக்கியவல்லி, போடின், ஹொப்ஸ், லொக், மொண்டஸ்கியூ, பிளேட்டோ, மோர், ஹரிங்ரன், ரூசோ, கான்ட், ஹெகல், கிறீன் போன்றவர்கள் தமது கருத்துக்களை மெய்யியல் அணுகுமுறைமையின் அடிப்படையிலேயே முன்வைத்துள்ளனர்.

வரலாற்று அணுகுமுறை :

குறிப்பிட்ட காலத்தில் அல்லது கடந்த காலத்தில் ஒரு குறிப்பிட்ட நிகழ்ச்சி அல்லது சம்பவம் தொடர்பான காட்சிநிலை எவ்வாறு இருந்தது என்பதைக் குறிப்பிடுவதே வரலாறாகும். மனிதனின் சிறந்த நடத்தையானது சமூக அபிவிருத்தியில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது என்பதைக் கற்க வரலாறு பயன்படுத்தப்பட்டது. அரசியல் கோட்பாட்டுக் கல்வியின் பெறுமானத்தினை 'வரலாற்றுப் பரிமாணத்தின் அடிப்படையில் பலர் ஆய்வு செய்துள்ளனர். ஜீ. எச்;.சபயின், மாக்கியவல்லி, கெட்ரல் போன்றவர்கள் இவ் அணுகுமுறையை ஆதரிக்கின்றனர்.

நிறுவன அணுகுமுறை

நிறுவனங்கள் பொதுவாக அரசியல் நிறுவனங்கள், அரசாங்க நிறுவனங்கள் என இரண்டாக வகைப்படுத்தப்படுகின்றன. அரசியல் நிறுவனங்கள் அரசியல் கட்சிகள், அமுக்கக் குழுக்கள், மாணவர் அமைப்புக்கள் போன்றவகைகள் அரசியல் நிறுவனங்களாக கருத்தப்படுகின்றன. சட்ட, நிர்வாக, நீதி;த்துறைகள் அரசாங்க நிறுவனங்களாக கருதப்படுகின்றன. ஆகவே இவ்வாறான நிறுவனங்களை ஆராய்வதன் மூலம் அரசறிவியலைக் கற்க முடியும் என்பதால் இவ் அணுகுமுறைகள் முக்கியம் பெறுகின்றன. புராதன காலத்தில் அரிஸ்ரோட்டில், பொலிபியஸ் போன்றோரும் நவீனகாலத்தில் பிறைஸ், பைனர் போன்றோரும்; இவ் அணுகுமுறையைப் பயன்படுத்தியுள்ளனர். சமகால எழுத்தாளர்களாகிய பென்லி, ரூமன், லதம், வி.ஓ.கீ போன்றவர்கள் இவ் அணுகுமுறைமைக்குள் அமுக்கக் குழுக்களையும் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்கின்றனர். எப்.ஏ.ஒக், ஹேர்மன் பைனர், எச்.ஜே.லஸ்கி, எஸ்.எப்.ஸ்ரோங், ஜேம்ஸ் பிரைஸ் போன்றவர்கள் நிறுவன அணுகுமுறைகளை அமைப்பு அணுகுமுறை என அழைக்கலாம் எனவும் குறிப்பிடுகின்றார்கள்.

சட்ட அணுகுமுறை :

அரசு பின்பற்றும் சட்டம், அச்சட்டங்களை அடிப்படையாகக் கொண்டு செயற்படும் நீதி, நிர்வாகம் போன்றவற்றை விளக்குவதன் மூலம் குறிப்பிட்ட அரசியல் முறையினை விளக்க இவ் அணுகுமுறை உதவுகின்றது. இவ் அணுகுமுறையினை சிசரோ, டைசி, குறோரியஸ், ஜோன் ஒஸ்ரின் போன்றவர்கள் பயன்படுத்தியிருந்தார்கள்.

2. நவீன அணுகுமுறை :

நவீன அணுகுமுறை மரபு சார் அணுகுமுறையிலிருந்து முற்றிலும் வேறுபட்டதாகும். மரபு சார் அணுகுமுறையில் பெருமளவு விபரணப் பண்பே காணப்பட்டது. நவீன அணுகுமுறைக்கு நம்பகத் தன்மையான தரவுகள் அவசியமாகும். நம்பகத் தன்மையான தரவுகளைப் பயன்படுத்தியே ஆராட்சி செய்யப்பட வேண்டும். ஆராட்சியானது அனுபவப் பகுப்பாய்வாக இருத்தல் வேண்டும். அப்போதுதான் ஆராட்சியின் மூலம் உண்மைகள் வெளிவரும்.நவீன அணுகு முறைக்குள் பல்வேறு அணுகுமுறைமைகள் காணப்படுகின்றன. அவைகளுள்: சமூகவியல் அணுகுமுறை, உளவியல் அணுகுமுறை, பொருளியல் அணுகுமுறை, புள்ளிவிபர அணுகுமுறை, முறைமைசார் அணுகுமுறை ஒழுங்கமைவு அணுகுமுறை, நடத்தைவாத அணுகுமுறை, மாக்சிச அணுகுமுறை போன்றவற்றை சிறப்பாகக் குறிப்பிடலாம்.

சமூகவியல் அணுகுமுறை :

சமூகவியல் அடிப்படையில் ஒப்பீட்டு அரசியலை விளங்கிக் கொள்ளல் என்பதுதான் இவ்வணுகுமுறையின் பிரதான நோக்கமாகும். வெபர், கொம்ட், ஸ்பென்சர் போன்ற சமூகவியலாளர்கள்; 'அரசு' என்ற நிறுவனம் ஒரு அரசியல் நிறுவனம் என்பதை விட ஒரு சமூக நிறுவனம் என்பதுதான் பொருத்தமானது எனக் கூறுகின்றனர்.சமூகவியல் அணுகுமுறை அரசியல் சமூகமயவாக்கம், அரசியல் கலாசாரம், அரசியல் அபிவிருத்தி போன்றவற்றை பிரதானமாக ஆய்வு செய்கின்றது. சமூகவியல் அணுகுமுறையினை மக்கைவர், டேவிட் ஈஸ்ரன், அல்மன்ட் போன்ற முன்னோடி ஆய்வாளர்கள் தமது அரசியல் நடத்தை பற்றிய ஆய்விற்காகப் பயன்படுத்தியுள்ளனர்.

உளவியல் அணுகுமுறை :

அரசறிவியலில் கற்கை நெறியுடன் உளவியல் மிகவும் நெருக்கமானதாக காணப்படுகின்றது. சமூகத்திலுள்ள தனிமனிதர்கள் ஒவ்வொருவருக்கும் உணர்ச்சிகள், பழக்கவழக்கங்கள், மனவெழுச்சிகள் இருக்கின்றன. இவை யாவும் உளம் சார்ந்தவைகளாகும். எனவே அரசு சார்ந்த விடயங்களில் தனிமனிதர்கள் ஈடுபடுகின்ற போது அரசு சார்ந்த மன எழுச்சிகள் வெளிப்படுத்தப்படும். அரசு சார்ந்த மனவெழுச்சிய அரசியற் செயற்பாட்டைத் தீர்மானிக்கின்றது. இங்கு அதிகாரம் என்பது ஒரு உளவியல் விடயமும், சமூக மனப்பாங்குமாகும். அதிகாரத்தை அனுபவிப்பது, அதிகாரத்தை தொடர்ந்து தம் வசம் வைத்திருக்க வேண்டும் என விரும்புவது போன்ற உளவியல் பண்புகள் அரசியலில் ஈடுபடுகின்றவர்களிடம் காணப்படு;கின்றன. இதனாலேயே அதிகாரத்திற்கான போராட்டங்கள் நிகழ்கின்றன. இதனால் அரசியலில் உளவியல் பிரதானமாகின்றது. மெரியம், லாஸ்வெல், கிரகம் வொலஸ், ஆர்.ஏ.டால் போன்ற சமூகவியலாளர்கள் அரசை விளங்கிக் கொள்ள உளவியலைப் பயன்படுத்தும் சிந்தனையாளர்களாகக் காணப்படுகின்றார்கள்.

பொருளியல் அணுகுமுறை :

பொருட்களின் உற்பத்தி, விநியோகம், அதன் பங்கீடு என்பன பொருளாதாரத்துடன் தொடர்புடையவைகளாகும். இதற்கான நியமங்களும், விதிகளும் அரசினாலேயே இயற்றப்படுகின்றன. எனவே பொருளாதாரம் என்பது அரசு என்ற ஒன்று இல்லாமல் இயங்க முடியாது. அரசியல் நிகழ்வினை பொருளாதாரமும் இணைந்தே தீர்மானிக்கின்றது. சமூகத்தில் பொருளாதாரம் பெறும் முக்கியத்துவத்தைப் பொறுத்து, தாராண்மைவாதம், சோஸலிசம், கம்யூனிசம் போன்ற சித்தாந்தங்கள்; தோற்றம் பெற்றன. அடம் ஸ்மித் காலத்திலிருந்து இச்சிந்தனைகள் காணப்படுகின்றன. ஜே.எஸ்.மில், மார்க்ஸ், மிட்ச்சேல் போன்றோர் மேற்கொண்ட ஆய்வானது புதியதொரு விஞ்ஞான விளக்கத்தை அரசுக்கும் பொருளாதாரத்திற்கும் தருவதாக உள்ளது.

புள்ளிவிபர அணுகுமுறை :

புள்ளிவிபர ரீதியாக ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, விஞ்ஞான ரீதியாக அரசியல் பிரச்சினைகளை ஆய்வு செய்வற்கு இவ் அணுகுமுறை பயன்படுகின்றது. ஒரு நிகழ்வு தொடர்பான தகவல்கள் புள்ளிவிபரரீதியாக கணிப்பிடப்பட்டு, அதன் அடிப்படையில் அந்நிகழ்வு தொடர்பான எதிர்வு கூறல்களும், முடிவுகளும் முன்வைக்கப்படுகின்றன. பெருமளவிற்கு அரசறிவியலைப் பொறுத்தவரை புள்ளிவிபர அணுகுமுறை தேர்தல் நடத்தை பற்றிய பகுப்பாய்வுக்கும், பொதுசன அபிப்பிராய கணிப்பீடுகளுக்கும் சிறப்பாக பயன்படுத்தப்படுகின்றது. இத்தகைய ஆய்வு முறைகளை கல்லூப், சார்ல்ஸ் மெரியம், ஹரோல்ற் ஹொஸ்னல் போன்றவர்கள் பயன்படுத்தியுள்ளனர்.

முறைமை அணுகுமுறை

அரசறிவியலுக்குள் மிக அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்டதோர் அணுகுமுறைமையாகும். இவ் அணுகு முறைமை உயிரியல் விஞ்ஞானத்திலிருந்து பெறப்பட்டதால் , அரசறிவியலை மேலும் விஞ்ஞானப்பண்பு கொண்ட கற்கையாக மாற்றியுள்ளது. டேவிட் ஈஸ்ரன் எழுதிய அரசியல் முறைமை என்ற நூலில் முறைமைப் பகுப்பாய்வைப் பற்றி எடுத்துக் கூறியிருந்தார். சமூக விஞ்ஞான முறைமைக்குள் உள்ள ஒவ்வொரு கற்கை நெறியும் சமூக விஞ்ஞான முறைமையின் உப முறைமைகளாக அழைக்கப்படுகின்றன. சமூக விஞ்ஞான கற்கை நெறிகளுக்குள் உள்ள இவ் ஒவ்வொரு உப முறைமையும் தனியானதொரு முறைமையாக அழைக்கப்படுகின்றது. எனவே அரசறிவியலில் முறைமைசார் அணுகுமுறைமை என்பது சமகாலத்திற்குரியதும் விஞ்ஞான ரீதியானதுமான முடிவுகளைத் தரும் ஒரு அணுகுமுறைமையாகும்.

ஒழுங்கமைவு அணுகுமுறை

இயற்கை விஞ்ஞானத்திலிருந்து சமூக விஞ்ஞானக் கற்கை நெறிகளுக்குள் கொண்டுவரப்பட்ட ஒரு அணுகுமுறையாகும். குறிப்பாக கணிதத்துறையில் இவ் அணுகுமுறை அதிகமாகப் பயன்படுத்தப்படுகின்றது. அரசறிவியலில் பயன்படுத்தப்படும் தொடர்பாடல் தீர்மானம் எடுத்தல், விளையாட்டுக் கோட்பாடு போன்ற கோட்பாடுகளை விளங்கிக்கொள்வதற்கு இவ் அணுகுமுறைமை பயன்படுத்தப்படுகின்றது. விதிக்குட்பட்ட (Models) கட்டமைப்புக்களை எடுகோள்களாக கொண்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன. இவ்வாறான அணுகுமுறைகள் தற்காலத்தில் அரசியல் விஞ்ஞானத்திலும் பயன்படுத்தப்படுகின்றன.

நடத்தைவாத அணுகுமுறை :

அரசறிவியலில் பயன்படுத்தப்படும் பிரபல்யம் வாய்ந்த அணுகுமுறைமைகளில் நடத்தைவாத அணுகுமுறைமையும் ஒன்றாகும்.இவ் அணுகுமுறைமையானது சமூக உளவியல், சமூகவியல், மானுடவியல் கோட்பாடுகளையும், அதன் செயற்பாடுகளையும் முதன்மைப்படுத்துகின்றது. ஆரம்ப காலத்திலிருந்த அரசாங்க மற்றும் அரசியல் நிறுவனங்கள் பற்றிய ஆய்வானது கைவிடப்பட்டு பதிலாக அரசியலில் பங்கு கொள்ளும் தனிநபர்களின் நடத்தை பற்றிய ஆய்வாக அரசறிவியல் மாற்றப்பட்டது. எனவே நடத்தைவாதத்தின் இயல்புகள் என்பது சித்தாந்தங்கள், நிறுவனங்கள், வரலாறுகள், நிகழ்வுகள் என்பவற்றைவிட சமூகக் குழுக்கள் மற்றும் தனிநபர் நடத்தைகளைத் தீர்மானிப்பதில் சுற்றுச்சூழல் முக்கிய இடம் வகிக்கின்றது. எனவே மனித நடத்தைகளை அனுபவ ரீதியாகவும் கோட்பாட்டு ரீதியாகவும் பயன்படுத்தி ஆய்வு செய்வதற்கு நடத்தைவாத அணுகுமுறை பயன்படுத்தப்படுகின்றது. இவ் அணுகுமுறையினை கிரகம் வொலஸ், ஆதர்.எப்.பென்லி, பொஸ்வெல் போன்றோர் பயன்படுத்தியிருந்தார்கள்.

மாக்ஸ்சிச அணுகுமுறை :

நவீன அணுகுமுறைமை , மரபுசார் அணுகுமுறைமை ஆகிய இரண்டினதும் பண்பை மாக்ஸ்சிச அணுகுமுறைமை கொண்டிருப்பதாகக் கூறப்படுகின்றது. அரசு என்பது சமூக வர்க்க முரண்பாடுகளினால் தோற்றம் பெறுகின்றது என மாக்ஸ்சிச அணுகுமுறைமை கூறுகின்றது. வரலாற்றுப் பொருள்முதல்வாதம், இயக்கவியல் பொருள்முதல்வாதம் ஆகிய இரு பெரும் தத்துவங்கள் மாக்ஸ்சிச அணுகுமுறைமைக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. அபிவிருத்தியடைந்து வரும் நாடுகள் அபிவிருத்தியடைந்த நாடுகள் என்பவற்றிற்கிடையிலான ஏகாதிபத்தியப் பண்பு, சுரண்டல், நவகாலனித்துவம் என்பவற்றை விளங்கிக் கொள்ள மாக்ஸ்சிச அணுகுமுறைமை பயன்படுத்தப்படுகின்றது. கார்ல்மாக்ஸ், ஏங்கல்ஸ் போன்றவர்கள் இவ் அணுகுமுறையின் முன்னோடிகளாவர்.

முடிவாக மூன்றாம் மண்டல நாடுகளை மையமாகக் கொண்டு 1950 களின் பின் அமெரிக்காவினால் ஒரு கற்கைநெறியாக உருவாக்கப்பட்ட ஒப்பீட்டரசியலை மாணவர்கள் தெளிவாக விளங்கிக் கொள்ள மேற்படி மரபு, நவீன, மாக்சிச அணுகுமுறைமைகள் அவசியமாகின்றன எனலாம்.

Share

Who's Online

We have 544 guests and no members online

+1 Me

Subscribe

Enter your email address:

Delivered by FeedBurner

 About Prof. Thanabalasingam Krishnamohan

Prof. Thanabalsingam Krishnamohan is a Professor in Political Science in Eastern University of Sri Lanka .

    

 
 
Invalid RSS link or you're not allowed to read this Picasa gallery or album.