Education is the Most Powerful Weapon Which You Can Use to Change the World. – Nelson Mandela-

புதிய சர்வதேச ஒழுங்கின் பின்னரான பிராந்தியத் தலையீடுகள் - ஓர் கோட்பாட்டு விளக்கம்

புதிய சர்வதேச ஒழுங்கின் பின்னரான பிராந்தியத் தலையீடுகள் - ஓர் கோட்பாட்டு விளக்கம்

புதிய சர்வதேச ஒழுங்கின் பின்னரான பிராந்தியத் தலையீடுகள் - ஓர் கோட்பாட்டு விளக்கம் by...

இலங்கையின் வன்னிப் பிரதேச சட்டசபை பிரதிநிதித்துவம் சில வரலாற்றுப் பதிவுகள்: 1931-1977

இலங்கையின் வன்னிப் பிரதேச சட்டசபை பிரதிநிதித்துவம் சில வரலாற்றுப் பதிவுகள்: 1931-1977

இலங்கையின் வன்னிப் பிரதேச சட்டசபை பிரதிநிதித்துவம் சில வரலாற்றுப் பதிவுகள்: 1931-1977 by...

மாக்கியவல்லியின் இளவரசன் திறனாய்வு

மாக்கியவல்லியின் இளவரசன் திறனாய்வு

மாக்கியவல்லியின் இளவரசன் திறனாய்வு by Thanabalasingham Krishnamohan

Conflict Management and Resolution of Conflict : Objective and Characteristics of Third Party Mediation

Conflict Management and Resolution of Conflict : Objective and Characteristics of Third Party Mediation

Conflict Management and Resolution of Conflict : Objective and Characteristics of Third Party...

  • புதிய சர்வதேச ஒழுங்கின் பின்னரான பிராந்தியத் தலையீடுகள் - ஓர் கோட்பாட்டு விளக்கம்

    புதிய சர்வதேச ஒழுங்கின் பின்னரான பிராந்தியத் தலையீடுகள் - ஓர் கோட்பாட்டு விளக்கம்

    Tuesday, 15 October 2013 23:43
  • இலங்கையின் வன்னிப் பிரதேச சட்டசபை பிரதிநிதித்துவம் சில வரலாற்றுப் பதிவுகள்: 1931-1977

    இலங்கையின் வன்னிப் பிரதேச சட்டசபை பிரதிநிதித்துவம் சில வரலாற்றுப் பதிவுகள்: 1931-1977

    Sunday, 28 December 2014 17:17
  • பிராந்திய ஒத்துழைப்புக்கான தெற்காசியச் சங்கம்

    பிராந்திய ஒத்துழைப்புக்கான தெற்காசியச் சங்கம்

    Tuesday, 15 October 2013 23:07
  • மாக்கியவல்லியின் இளவரசன் திறனாய்வு

    மாக்கியவல்லியின் இளவரசன் திறனாய்வு

    Tuesday, 15 October 2013 23:26
  • Conflict Management and Resolution of Conflict : Objective and Characteristics of Third Party Mediation

    Conflict Management and Resolution of Conflict : Objective and Characteristics of Third Party...

    Tuesday, 15 October 2013 23:29
Political Science: Study of State and Identification of State
Political Science: Study of State and Identification of State
அரசியல் விஞ்ஞானம்: அரசியல் பற்றிய கற்கையும் அரசை இனம்காணுதலும் ;> சேமமடு பதிப்பகம், கொழும்பு>2009. ISBN - NO: 978-955-1857-60-8 அரசியல் விஞ்ஞானத்தின் இயல்புகள், அரசியல் விஞ்ஞானத்தின் செயற்பரப்பெல்லை, அரசியல் விஞ்ஞானம் ஓர் விஞ்ஞானமா? அரசியல் விஞ்ஞானத்தினை கற்பதற்கான அணுகுமுறைகள், அரசியல் விஞ்ஞானமும், ஏனைய சமூகவிஞ்ஞானப்பாடங்களும், அரசு,தோற்றமும்,வளர்ச்சியும், அரசினை இனம் காணுவதற்கான அடிப்படைகள், அரசுடன் தொடர்புடைய எண்ணக்கருக்கள்,கோட்பாடுகள் போன்றன நடைமுறை விவகாரங்களுடனும்,அனுபவங்களுடனும் இணைத்து எழுதப்பட்டுள்ளது.
More...
Political Science: Political Activity and Political Processes
Political Science: Political Activity and Political Processes
அரசியல் விஞ்ஞானம்: அரசியல் செயற்பாடும் அரசியல் செயல்முறையும்;> சேமமடு பதிப்பகம், கொழும்பு >2010> ISBN - NO: 978-955-1857-61-5 பொதுக் கொள்கை, பொதுநிர்வாகவியலின் இயல்பு> பொது முகாமைத்துவம்> மோதலை விளங் க்கிக்கொள்ளல், மோதலும் வன்முறையும்,மோதலும் அகிம்சையும்,மோதலைத் தடுத்தல், மோதலைத் தீர்த்தல், மோதல் முகாமைத்துவம், மூன்றாம் தரப்பு மத்தியஸ்தம், சமாதானக் கற்கை, சர்வதேச அரசியல், வெளிநாட்டுக் கொள்கை, யுத்தம், கூட்டுப்பாதுகாப்பு, அதிகாரச் சமநிலை, சர்வதேசச் சட்டம், ஆயுதக் கட்டுப்பாடும்,ஆயுதக்களைவும் போன்ற சர்வதேச அரசியலில் இடம்பெறும் சில முக்கியமான கோட்பாடுகள் பல இந் நூலில் சேர்க்கப்பட்டுள்ளன.
More...
மோதல் தீர்வுக் கற்கைகள்: ஒர் அறிமுகம்
மோதல் தீர்வுக் கற்கைகள்: ஒர் அறிமுகம்
மோதல் தீர்வுக் கற்கை நெறி தொடர்பான ஆய்வுகள் மனித மோதலின் தன்மை மற்றும் இயக்கவியல் ஆகியவற்றைப் புரிந்துகொள்ளுதல், ஆரோக்கியமான உறவுகளை வளர்த்தல், வன்முறையைத் தடுக்கும் வழிகளிகள் மற்றும் மோதலைக் கையாள்வதற்குப் பொருத்தமான மாற்று வழிகளைத் தேடுதல் என்பவைகளில் கவனம் செலுத்துகின்றது. மோதல், தகராறு, வன்முறை, யுத்தம் அதிகாரம், கலாசாரம். நீதி, சமாதானம், தகவல் தொடர்பு, முகாமைத்துவம், மோதலைத் தீர்த்தல், மோதல் நிலைமாற்றம் போன்ற தலைப்புகளுடன் தொடர்புபடும் வகையில் மோதல் தீர்வுக் கற்கை நெறி பகுப்பாய்வு செய்யப்படுகின்றது. தனிப்பட்ட, தேசிய, சர்வதேசிய மோதல் சூழ்நிலைகளுக்குப் பதிலளிக்கும் வகையிலும், மோதலை ஆக்கபூர்வமாகப் புரிந்துகொள்ளவும், தொடர்பு கொள்ளவும் மோதல் தீர்வுக் கற்கை நெறி மாணவர்களைத் தயார்படுத்துகிறது. இவ்வகையில் தமிழ்மொழி மூலமான பல்கலைக்கழக மாணவர்களுக்கும், அரசறிவியலை உயர்தரத்தில் கற்கும் மாணவர்களுக்கும், பொதுவான விடயங்களைத் தேடி வாசிக்கும் வாசகர்களுக்கும் பயன்தரும் வகையில் மோதல் தீர்வுக் கற்கைகள்: ஒர் அறிமுகம் என்னும் தலைப்பில் எழுதப்பட்டுள்ள இந்நூல் வெளிவருகின்றது.
More...
Plantation Trade Union Movement in Sri Lanka
Plantation Trade Union Movement in Sri Lanka
இலங்கைப் பெருந்தோட்ட தொழிற்சங்க இயக்கங்கள்;>குமரன் புத்தக இல்லம் கொழும்பு>2008> ISBN - NO: 978-955-659-124-9 கண்காணிமார்களின் ஆசை வார்த்தைகளை நம்பி இலங்கை வந்து மத்தியமலை பிரதேசங்களில் வேலைக்காக குடியமர்த்தப்பட்ட தொழிலாளர்கள் வேதனம்,வேலைநாட்கள் தொடர்பான பிரச்சனைகளை எதிர்நோக்கினர். இதனை எதிர்த்து பெருந்தோட்ட தொழிற் சங்கங்கள் தொழிலாளர்களின் சமூகப் பொருளாதார உரிமைகளுக்காக போராட்டங்களை நடாத்தினர். இவ்வகையில் பெருந்தோட்ட தொழிற்சங்கத் தலைவர்களின் சமூகப் பொருளாதார பண்புகளையும், 1970 ஆம் 1977 ஆம் ஆண்டுகளில் பதவியேற்ற அரசாங்கங்கள் பின்பற்றிய கொள்கைகள் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் மீது ஏற்படுத்திய தாக்கம்,தொழிற்சங்கங்கள் தொழிலாளர் நலன்களுக்காக நடாத்திய போராட்டங்கள் போன்றவற்றையும் தொழிலாளர்களுக்கும், தோட்டமுகாமைத்துவத்திற்கு இடையிலும், தொழிலாளர்களுக்கு இடையில் ஏற்படும் தகராறுகள் ,பிரச்சினைகள் தொடர்பாக தொழிற்சங்கங்கள் எடுக்கும் நிலைப்பாடுகள் தொடர்பாக இந் நூல் ஆய்வு செய்கின்றது.
More...
Triangular Power Straggle in Indian Ocean and Ethnic Conflict in Sri Lanka
Triangular Power Straggle in Indian Ocean and Ethnic Conflict in Sri Lanka
இந்துசமுத்திரப் பிராந்தியத்தில் முக்கோண அதிகாரப் போட்டியும் இலங்கையின் இனமோதலும் குமரன் புத்தக இல்லம், 2012 ISBN 978-955-659-343-3 இந்துசமுத்திரப் பிராந்தியத்தில் தனக்கிருக்கும் எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டு இலங்கையில் அதிக முதலீடுகளை சீனா செய்து வருகின்றது. இதே அக்கறையுடன் ஏனைய உலக நாடுகளும் இலங்கையினைத் தமது தந்திரோபாயப் பங்காளியாக மாற்றுவதற்கு முயற்சிக்கின்றன.பூகோள வல்லரசுகளும்,பிராந்திய வல்லரசுகளும் நடத்தும் அதிகாரப் போராட்டத்தினால் ஏற்படக்கூடிய பதிப்புக்களிலிருந்து இலங்கை தன்னைத்தானே பாதுகாத்துக் கொள்ள முடியாது தடுமாறுகின்றது.
More...
பொது நிர்வாகத்தில்‌ மனிதவள முகாமைத்துவம்‌: முன்னணி நாடுகளின்‌ சிவில்‌ சேவை மாதிரிகள்‌
பொது நிர்வாகத்தில்‌ மனிதவள முகாமைத்துவம்‌: முன்னணி நாடுகளின்‌ சிவில்‌ சேவை மாதிரிகள்‌
சர்வதேச ஆய்வுப்பரப்பில்‌ அரசறிவியல்‌, நிர்வாகவியல்‌ போன்ற துறைகள்‌ மிகுந்த அவதானத்தையும்‌, முக்கியத்துவத்தையும்‌ பெறுகின்றன. இவ்வகையில்‌ "பொது நிர்வாகத்தில்‌ மனிதவள முகாமைத்துவம்‌: முன்னணி நாடுகளின்‌ சிவில்‌ சேவை மாதிரிகள்‌" என்ற புதுக்கிய இந்நூல்‌ பல்கலைக்கழக மாணவர்களுக்கும்‌, புலமைத்துவம்‌ சார்‌ சமூகத்தினர்க்கும்‌ பயனுடையதாகும்‌.

சிவில்‌ சேவை தொடர்பான பொதுவான அறிமுகத்துடன்‌ சர்வதேச நாடுகளின் குறிப்பாக பிரித்தானியா, பிரான்ஸ்‌, ஐக்கிய அமெரிக்கா, இந்தியா, இலங்கை முதலான நாடுகளின்‌ சிவில்‌ சேவைக்‌ கட்டமைப்புகளை முன்னிலைப்படுத்தி ஒப்பியல்‌ நோக்கில்‌ இந்நூல்‌ எழுதப்பட்டிருப்பது சிறப்பிற்குரியதாகும்‌.
More...
Comparative Politics
Comparative Politics
ஒப்பியல் பொதுநிர்வகம்: தெரிவு செய்யப்பட்ட நாடுகளின் சிவில் நிர்வாகமுறைமை > குமரன் புத்தக இல்லம் கொழும்பு >2007, ISBN - NO: 978-955-659-091-9

பிரித்தானிய ,பிரான்ஸ் ,அமெரிக்க,இந்தியா ,இலங்கை போன்ற ஐந்து நாடுகளின் சிவில் நிர்வாக சேவைகளின் வரலாற்று அபிவிருத்தியையும், கோட்பாட்டு நடைமுறை அம்சங்களையும் விமர்சனரீதியாக இந் நூல் அணுகுகின்றது.சிக்கலான விடயங்களையும்.பதங்களையும் எளிமையாகவும்,தெளிவாகவும்,ஆழமாகவும் இந் நூல் விளக்குகின்றது.

More...

Around the World

  • US tariff exemption on packages worth $800 or less due to end this week.

    Read more...
  • The campaign against 'woke' is no ordinary culture war skirmish - it is a project to restore the violence of white rule.

    Read more...
  • Algeria’s UN ambassador Amar Bendjama delivered an emotional address as he read a farewell letter by Palestinian journal

    Read more...
  • Ostapenko unleashed a verbal volley at her American opponent for being disrespectful during their second-round match.

    Read more...
  • Explosions and smoke fill Kyiv's predawn skies as Russia targets residential buildings with drones and missiles.

    Read more...
  • South Asia's missile race is heating up. But India and Pakistan aren't only eyeing each other, say analysts.

    Read more...
  • Famine doesn’t happen naturally. It’s political. Gaza joins the short list of places where conflict starves people.

    Read more...
  • Returning from an injury, Messi brought Inter Miami back from the brink of defeat to overcome Orlando City 3-1.

    Read more...
  • Fifteen-year-old sentenced for attempted murder and illegal possession of weapons after shooting Miguel Uribe in June.

    Read more...
  • Former champions Sabalenka and Raducanu record straight-sets wins to enter the third round of the tennis Grand Slam.

    Read more...
சமஷ்டிவாதம் - 4.0 out of 5 based on 1 vote
1 1 1 1 1 1 1 1 1 1 Rating 4.50 (1 Vote)

அரசியல் முறைமையில் 'சமஷ்டிவாதம்' என்ற பதம் அரசியல் அதிகாரங்கள் முழு நாட்டிலும் எவ்வாறு பங்கீடு செய்யப்படுகின்றன என்பதைப் பொறுத்து விளக்கமளிக்கப்படுகின்றது. அதாவது மத்திய அரசாங்கத்திற்கும், மாநில அல்லது பிராந்திய அரசாங்கத்திற்கும் இடையிலான அதிகாரங்கள் எவ்வாறு பங்கீடு செய்யப்படுகின்றன, எவ்வாறு நடைமுறைப் படுத்தப்படுகின்றன என்பதைப் பொறுத்து சமஸ்டி வாதத்திற்கான விளக்கம் வழங்கப்படுகின்றன.

1. சமஸ்டிமுறைமையின் வளர்ச்சி

தற்கால அரசாங்க முறையானது சமஷ்டியாக அல்லது ஒற்றையாட்சியாக அல்லது இரண்டும் கலந்த ஒன்றாக காணப்படுகின்றது. உலகில் நடைமுறையிலுள்ள அரசாங்கங்களில் சமஷ்டி முறைக்கு உதாரணமாக ஐக்கிய அமெரிக்கா, சுவிற்சர்லாந்து, அவுஸ்திரேலியா, தென் ஆபிரிக்கா, கனடா போன்ற நாடுகளைக் கூறலாம். ஒற்றையாட்சி முறைமைக்கு உதாரணமாக பிரித்தானியா, பிரான்ஸ், இலங்கை, சீனா போன்ற நாடுகளைக் கூறலாம்.

இவ் இரண்டையும் விட சில நாடுகள் அதிகாரப் பிரிவினை தத்துவத்திற்கு இணங்க அரசாங்கத்தினை ஒழுங்கமைத்து மிக உயர்ந்த நிலையில் அதிகாரங்களை பங்கீடு செய்துள்ளன. இதனை இந்தியாவிலும் மறைந்த சோவித் ரஸ்சியாவிலும் காணமுடியும். இடைநிலைத் தன்னாட்சியுடைய அரசுகளாக அல்லது அரைகுறை சமஸ்டி அரசுகளாக இவைகள் அழைக்கப்படுகின்றன.

கிரேக்க நகர அரசுகளுடன் சமஸ்டி முறை மிகவும் நெருக்கமானதாக இருந்துள்ளது. பாதுகாப்பினை நோக்காகக் கொண்டு இணக்கம், கூட்டுறவு என்பவற்றின் அடிப்படையில் இம்முறைமை நடைமுறையில் இருந்;தது. ஆயினும் கிரேக்க அரசியல் சிந்தனையாளர்கள் சமஷ்டி வாதத்தினை ஓர் அரசியல் தத்துவமாக ஏற்றுக் கொள்ளவில்லை.

சுவிற்சர்லாந்திலுள்ள கன்ரன்கள் தங்களுடைய பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் நோக்கத்துடன் 1291 ஆம் ஆண்டு கூட்டுச் சமஸ்டி என்ற பெயரில் சமஷ்டியை உருவாக்கியிருந்தன. ஸ்பானிஷ் குடாவிலுள்ள கிறிஸ்தவ அரசுகள் சமஷ்டி முறைமையினை ஒத்த அரசியல் முறைமையினை உருவாக்கியிருந்தன.

16 ஆம் நூற்றாண்டில் ஏற்பட்ட புரட்டஸ்தாந்து மதச் சீர்திருத்தம் சமஷ்டி தத்துவத்திற்கு புதிய ஒழுங்கமைப்பினைக் கொடுத்திருந்தது. இதனால் ஸ்பானிஷ் புதிய சமஷ்டி தத்துவத்தினை பின்பற்றி நெதர்லாந்து 'ஐக்கிய மாகாணங்களின் சம்மேளனம்' என்ற பெயரில் சமஸ்டியை உருவாக்கிக் கொண்டது. சுதந்திரத்தின் பின்னர் இன்று பன்முகப்படுத்தப்பட்ட ஒற்றையாட்சி அரசாகவே இது காணப்படுகின்றது.

இதனை விட 17 ஆம் நூற்றாண்டில் டச்சு நாடுகளின் கூட்டம் சமஷ்டி அரசின் வளர்ச்சிக்கு காரணமாக இருந்துள்ளது. இந் நாடுகளின் கூட்டம் விருத்தி அடைந்தே சமஷ்டியாகியது. வரலாற்றில் இதற்கு உதாரணமாக பின்வருவனவற்றைக் கூறலாம்.

  • 1291 ஆம் ஆண்டு மூன்று கன்ரன்கள் இணைந்து உருவாக்கிய சுவிஸ் நாட்டுக் கூட்டம்,
  • ஐக்கிய அமெரிக்கா உருவாக்கிய பதின்மூன்று நாட்டுக் கூட்டம்,
  • 1815-1866 முப்பத்தி ஒன்பது ஜேர்மனிய நாடுகள் சேர்ந்து உருவாக்கிய நாடுகளின் கூட்டம்

2. சமஸ்டிவாதத்திற்கான அடிப்படை நிபந்தனைகள்

சமஷ்டி ஆட்சி உருவாவதற்கு சில பொதுவான நோக்கங்களின் அடிப்படையில் ஒன்றிணைந்து செயற்படக்கூடிய பல அரசுகள் ஒன்றிணைய வேண்டும். ஆனாலும் ஒரு சமஷ்டி அரசு வெற்றிகரமானதாக இயங்க வேண்டுமாயின் சில முக்கிய நிபந்தனைகளை சமஸ்டியில் இணைய விரும்பும் அரசுகளிடம் இருக்க வேண்டும்.

புவியியல் தொடர்ச்சி

சமஷ்டி அரசு நிச்சயப்படுத்தப்பட்ட புவியியல் தொடர்ச்சியினை அல்லது நெருக்கத்தினைக் கொண்டிருக்க வேண்டும். மேலும் சமஸ்டியில் இணைகின்ற அரசுகளை பெரிய மலைகள், சமுத்திரம், இறைமையுள்ள பிறிதொரு அரசு பிரிக்குமாயின் அங்கு புவியியல் தொடர்ச்சி இருப்பதாக கூறமுடியாது. எனவே சமஷ்டியில் இணையும் அரசுகள் ஒன்றுடன் ஒன்று தொடர்புபடாமல் இருக்குமானால் சமஷ்டி முறைமை வெற்றிகரமாக இயங்கமுடியாது.

சமுதாய ஆர்வம்

கலாசார, சமய , மொழி அடிப்படையிலான சமூக முறைமைகள் உள்ள ஓர் நாடு சமூக நலனுக்காக சமஷ்டி முறையினை தெரிவு செய்யலாம். இவ்வாறு உருவாகும் சமஷ்டியில் இணைகின்ற சமுதாயங்களினது பாதுகாப்பு உத்தரவாதப்படுத்தப்பட வேண்டும். சமஷ்டியில் இருக்கின்ற பலமான சமூகங்கள் பலவீனமான சமூகங்களின் நலன்களை உதாசீனம் செய்யக்கூடாது. டைசி இதனை 'இதுவோர் இணைப்பேயன்றி சங்கமம் அல்ல' எனக் கூறுகின்றார். ஐக்கிய அமெரிக்கா, சுவிற்சர்லாந்து, கனடா போன்ற நாடுகள் இன, சமய , கலாசார பண்பில் வேறுபட்ட சமூகங்களை கொண்டுள்ளன. ஆயினும் ஒவ்வோர் சமூகத்தினதும் நலன்கள் பாதுகாக்கப்படுகின்றன. ஐக்கியம், நாட்டுப்பற்று என்ற பொதுவான உணர்வின் அடிப்படையில் எல்லா மக்களும் ஒன்றுபட்டு தேசிய அரசை உருவாக்குகியுள்ளனர்.

ஒத்ததன்மையுள்ள சமூக , அரசியல் நிறுவனங்கள்

தேசிய மட்டத்திலும், பிராந்திய மட்டத்திலும் அரசாங்க முறைமைகள் ஒத்த தன்மையினை கொண்டதாக இருக்கவேண்டும். அதாவது மத்திய – மாநில அரசுகளின் அரசாங்க அமைப்புக்கள் ஒத்த தன்மையினதாக இருக்க வேண்டும். கனடா, இந்தியா போன்ற நாடுகளில் மத்திய – மாநில அரசாங்கம் பாராளுமன்ற முறைமையினையும், சில நாடுகள் ஜனாதிபதி ஆட்சி முறையினை பின்பற்றுவதையும் காணலாம்.

சமத்துவம் பேணப்படல்

சமஷ்டியில் இணைகின்ற அரசுகள் நடைமுறையில் சம அந்தஸ்த்தினை அனுபவிப்பவைகளாக இருக்க வேண்டும். இங்கு சம அந்தஸ்த்து என்பது அவற்றிற்கிடையிலான அதிகாரங்களை மையமாகக் கொண்டவைகளாகவே இருக்க வேண்டும். பதிலாக சனத்தொகை, பிரதேசம் போன்றவற்றினை அடிப்படையாகக் கொண்டு சம அந்தஸ்த்து கருத்தில் கொள்ளப்படக் கூடாது. உதாரணமாக ஐக்கிய அமெரிக்க காங்கிரசின் மேல் சபையாகிய செனட் சபைக்கு ஒவ்வொரு மாநிலங்களுக்கும் தலா இரண்டு பிரதிநிதிகள் என்ற விகிதத்தில் அங்கத்தவர்கள் தெரிவு செய்யப்படுகின்றனர். இந்தியப் பாராளுமன்றத்தின் மேற்சபையாகிய ராஜ்ய சபைக்கு இவ்வாறு சமபிரதிநிதித்துவம் வழங்கப்படுவதில்லை.இதனால் மேற்சபையில் மாநிலங்களுக்கான சமத்துவம் பேணப்படுவதில்லை.சமத்துவமின்மையால் ஆரோக்கியமான அபிவிருத்தித்திட்டங்கள் மேற்கொள்வதில் தடைகள் ஏற்படுகின்றன.

சமூகப் பொருளாதார அபிவிருத்தி

ஒரு நாட்டினுடைய சமூக, பொருளாதார, அபிவிருத்தி சிறப்பான சமஷ்டியின் தொழிற்பாட்டிற்கு அவசியமானதாகும். மேலும் பொருளாதார அபிவிருத்தி என்பதும் சமத்துவமாகப் பேணப்பட வேண்டும். சமஷ்டி வெற்றிகரமாக இயங்க வேண்டுமானால், முழு நாட்டினதும் பொருளாதார வளங்களை சமமாக அபிவிருத்தி செய்ய வேண்டும். மாநில அரசுகளுக்கிடையில் பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் காணப்படுமாயின், வளம் பொருந்திய பிரதேசம் தன்னை யூனியனாக மாற்றி தனித்தியங்கக் கூடிய வாய்ப்புக்கள் அதிகமாகலாம். இதனால் சமஷ்டி சிதைவடைந்துவிடக்கூடிய ஆபத்து ஏற்பட்டு விடலாம்.

அரசியல் செயற்றிறன்

மக்கள் தமக்கான வகிபாகத்தினை உணர்ந்து செயற்படக்கூடிய சாதுரியம் மிக்கவர்களாக இருக்க வேண்டும். இது அபிவிருத்தியடைந்ததோர் அரசியல் கலாசாரம் உள்ள சமுதாயத்திலேயே சாத்தியமானதாகும். அரசியல் முறைமை தொடர்பான தமது சிந்தனைகள், நம்பிக்கைகள்,பொறுப்பு என்பவற்றை மக்கள் உணர்ந்து செயற்பட வேண்டும். இதன் மூலம் அரசியல் முறைமை வெற்றிகரமாக இயங்கமுடியும்.

அரசியல் மற்றும் தேசிய ஒருமைப்பாடு

சமஷ்டி நாடொன்றில் வாழும் மக்கள் அரசியல் ரீதியாகவும், தேசிய ரீதியாகவும் ஒருமைப்பாடு கொண்டவர்களாக இருக்க வேண்டும். தேசிய ஒருமைப்பாட்டினை பூர்த்தி செயக்கூடிய வகையில் நாட்டினுடைய தேசிய வரைபடமும், நிர்வாக அலகுகளும் வரையப்பட அல்லது மீள் வரையப்பட வேண்டும். தேசிய ஒருமைப்பாட்டினை சிதைக்கும் வகையிலான அரசியல் செயற்பாடுகளால் தனியரசை உருவாக்கும் அவாவும், அதற்கேற்ற உள்ளூர் மட்ட அழுத்தமும் ஏற்படும். தேசிய ஒருமைப்பாட்டினை விட தமக்கான தனி அரசினை உருவாக்குவதற்கான தேவைகளையும் அவாவினையும் உருவாக்கி சமஷ்டியை செயலிழக்க வைத்துவிடும்.

மத்திய மாநில இணைப்பு

மத்திய அரசிற்கும், மாநில அரசிற்குமிடையில் சிறப்பான இணைப்பு காணப்பட வேண்டும். சமஷ்டிவாதம் என்பது கூட்டுறவின் வெற்றியாகக் கணிக்கப்பட வேண்டுமேயொழிய போட்டியான ஒன்றாக கணிக்கப்படக் கூடாது. கூட்டாட்சியில் இணைகின்ற அரசுகளின் பிரதேசங்களின் தனித்துவத்திற்கு மதிப்பளிக்க வேண்டும். இதன் மூலம் மத்திய, மாநில அரசாங்கங்களுக்கிடையிலான உள் தொடர்பினை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். சமஷ்டியில் நெகிழ்ச்சித்தன்மையும், கவர்ச்சித் தன்மையும் பேணப்பட வேண்டும்.

Share

Who's Online

We have 57 guests and no members online

+1 Me

Subscribe

Enter your email address:

Delivered by FeedBurner

 About Prof. Thanabalasingam Krishnamohan

Prof. Thanabalsingam Krishnamohan is a Professor in Political Science in Eastern University of Sri Lanka .

    

 
 
Invalid RSS link or you're not allowed to read this Picasa gallery or album.